கார்க்கியின் பார்வையில்

மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!

இன்று வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த வலைப்பதிவு. ஏதோ சில்லறை வோணும்னு சொல்றாகளே என்னா மேட்டருன்னு போய் பாத்தா…”ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவோம்” என்று காரசாரமாக போட்டுத்தாக்கியிருந்தார்கள். கொஞ்சம் பின்னே போனால், ” தமிழகக்திற்கு மாற்றம்: காங்கிரசுக்கோ,திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, ஓட்டு போடக்கூடாது; போட மாட்டோ ம்” என்று பிளிறி இருந்தார்கள். யார்ராதுன்னு பாத்தா…. நம்ம குழலி! அப்ப பா.ம.கவுக்கு? நிச்சயம் பா.ம.கவுக்கு ஓட்டுப்போட்டுத்தான் ஆக வேண்டும்.. ஏன்னா, இவுக தான் மத்திய அரசுல இருந்துகிட்டு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் கொடுப்பதையெல்லாம் தட்டிக் கேட்டுப் புடுங்கிக் கத்தை கட்டிவிட்டார்களாச்சே..

அட, கொறஞ்சது “அய்யா.. நமக்கும் உனக்கும் இனி ஆவாது. நீ எங்க மக்கள கொல்றவனுக்கு ஆயுதம் தர்ரே.. நீயே கூட நின்னு கொல்றே.. நமக்குள்ளே ஒட்டாது.. அத்துக்கலாம்”அப்படின்னு சொல்லி காங்கிரஸ் கூட்டனியிலிருந்தாவது வெளியே வந்திருந்தா… லிஸ்டுல பா.ம.க பேர் விட்டுப்போனது நியாயம்னு சொல்லலாம். அட இவங்கய்யாவே இன்னும் சொனியா காலை நக்கிட்டு இருக்கான்… கேவலம் அமைச்சர் பதவி – அத்தத் தூக்கியெறிய மனசில்லெ – துப்பில்லெ… பொறுக்கி அரசியல் ( அதாவது காங்கிரஸ் போடறதபொறுக்கித் திங்கர அரசியல் ) செய்யற கட்சி பா.ம.க – அந்தாளு போன வாரம் பேப்பர்ல சொல்றான் “ஜெயலலிதா கூட கூட்டனி வைக்க கருணாநிதி நிர்பந்திக்கிறார்” அப்படின்னு… எந்த ஜெயலலிதா…….? விடுதலைப்புலிகளையல்ல – ஈழத்தமிழ் மக்களையே எதிரிகளாகக் கருதும் ஜெயலலிதா! விடுதலைப்புலிகளையல்ல – ஈழத்தமிழ் மக்களின் ஈரக்குநலயை அறுத்தெறியத் துடிக்கும் பாப்பாத்தி ஜெயலலிதா! நல்லா இருக்குடா ஓன் யோக்கியத… இவனெல்லாம்…. தமிழினவாதி – தமிழ் குடி தாங்கி – லொட்டு… லொசுக்கு – மயிறு….மட்டை.

நம்ம நன்பர் குழலி நியாயமா பா.ம.கவயும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா பாராட்டியிருக்கலாம். செல்லமா சொல்றாப்ல.. “ராமதாஸ் மீனுக்கு வாலாகவும்….பாம்புக்குத் தலையாகவும்….”…ஏன் மென்னு முழுங்கறீங்க?? நான் சொல்றேன் – ராமதாஸ் மொத்தமாகவே பாம்பு தான்! சாதி தான் ராமதாஸின் அரசியல்.. இந்த தமிழினவாதி வேஷமெல்லாம் ஒரு பரந்து பட்டதளத்தில் பா.ம.கவை எஸ்டாப்ளிஷ் செய்யும் முயற்சி. அந்நியர் ஓட்டு பா.ம.கவுக்கு இல்லை என்ற செருப்படி பட்டவுடன் இப்போ தமிழின அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு டகுல் பாச்சா காட்டுகிறார் – அதையும் ஒழுங்கா செய்யாம சொதப்பல் வேறு – வேணும்னா டகுல் பாச்சா காட்டுவது எப்படி என்று சீனியர் ராமதாஸான கருணா(நிதி)விடம் போய்ஜூனியர் கருணா(நிதி)யாகத் துடிக்கும் ராமதாஸ் ட்யூஷன் கற்றுக் கொள்ளலாம்.

ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவார்களாம். எதுக்கு……?

இன்னிக்கு காங்கிரஸ் காலை நக்குவதில் இருந்து முன்னேறி இன்னொருத்தன் காலை நக்குவதற்கா? இந்திய ஓட்டரசியல் சட்டகத்திற்குள் நின்று கொண்டு எந்தக் கொம்பனாக இருந்தாலும் ஈழ விடுதலைக்காக ஒரு மயிரையும் புடுங்கி விட முடியாது. ஈழ விடுதலை என்றில்லை இந்தப் பிராந்தியத்தில் நிகழும் எந்த இன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்..

சேஞ்சு சேஞ்சுன்னு ஓபாமா கணக்கா பிளிர்ராங்களே… அப்படி அந்த ஓட்டரசியலின் லிமிட்டேசன் என்னவென்பது தமிழகத்தில் பாயில் சுச்சா போகும் சுள்ளான் கூட சொல்லி விடுவான்.. தி.மு.க ஏற்கனவே வெளக்கெண்ணையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கிறது… இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசின் உரிமை அதையெல்லாம் நம்மாளே கேட்க முடியாதுன்னு சொல்லியாச்சு….. மனித சங்கிலி, ஆட்டு சங்கிலி, மாட்டு சங்கிலி, குரங்கு சங்கிலின்னு கலைஞர் கைவசம் ஏகப்பட்ட ஐடியா இருக்கு.. முழுமையான தரகுவர்க்க கட்சியாகிவிட்ட தி.மு,க இந்தப் போரில் இந்திய ஆளும் தரகு வர்க்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக வாயைத் திறக்கக் கூட முடியாது.

காங்கிரசுக்கும் அ.தி.மு.கவுக்கும் தமிழன் செத்தா சந்தோஷம்; அவன் ஈழத்தமிழனா இருந்தாலும் சரி தமிழகத் தமிழனா இருந்தாலும் சரி. பாமக யோக்கியதை என்னான்னு இன்னொரு தடவ சொல்லத் தேவையில்லை… திருமா ஏதோ பிட்டு போட்டு பாக்கறாரு… ஆனா, தமிழ்நாட்டின் பரம்பரை வழக்கமான தி.மு.க vs அ.தி.முக என்ற தேர்தல் கள நிலைமையை ஒத்துதான் திருமாவின் அரசியல் அமையும். தனியே ஈழத்தை முன்னிட்டு ஒரு கூட்டனி அமைவதற்கான லேசான அறிகுறி கூட இல்லை. வழமை போலவே கூட்டனிக் கணக்குகள் அமைந்து விட்டால்….? அவரும் வைக்கோவைப் போல – அதாவது காயடிக்கப்பட்ட நாயைப் போல – அம்மா கிட்டயோ அய்யா கிட்டயோ அப்ரூவல் வாங்கிட்டுத் தான் மேற்கொண்டு பேசவே முடியும்…

தே.மு.தி.க? இந்தத் தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்து சூட்டிங்ல பிஸியாய்டுவார் – இப்பவே கதை கேட்க ஆரம்பித்து விட்டதாக கேள்வி.. ப்ரொடியூசர் கெடைக்கலீன்னா கலைஞர் டீவி மெகா சீரியல்ல அப்பா வேசம் குடுக்கறதா அழகிரி சொல்லியிருக்காரம் !

ச.ம.க ? 1977 ரிலீஸ்

வக்காளி… விஜயகாந்து சரத்துகுமாரெல்லாம் அரசியல்வாதி… இந்த கேவல நிலை தான் இந்திய தேர்தல் அரசியல் வந்து சேர்ந்திருக்கும் நிலை.

அப்புறம் ஒரு ஜோடி தோலாந்துருத்திக இருக்கானுங்க. அதுல ஒன்னு சி.பி.எம் இன்னொன்னு சி.பி.ஐ. மொதல் ஆளு ஜெயா மாமி வீட்டு டாய்லெட்ல அடைப்பை எடுக்க போயிக்கான்.. அடுத்தாளு அவிங்க தோட்டத்துக்கு தண்ணி காட்டப் போயிருக்கான்.. அவ்வளவு தான்

இதெல்லாம் ஒன்னும் வெளங்காது..

சரி…. ஒரு வாதத்துக்காக ஈழ விடுதலையை அங்கீகரிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி கட்டி தேர்தலை வென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்து விடுவார்கள்? சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் – அவ்வளவு தான் முடியும்! அவ்வளவுக்கு தான் உரிமை இருக்கிறது. சரி அப்படியே தில்லா மைய்ய அரசுக்கு விரோதமாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டே மக்களை அணி திரட்டினால் – ஆட்சியைக் கலைப்பான் – இல்லேன்னா ராணுவத்தை அனுப்பி நொங்கைக் கழட்டுவான். இங்கே இருக்கும் தேர்தல் அரசியல் என்பது மக்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத விதிகளைக் கொண்டிருக்கிறது – அப்படியே வருந்திக் கூப்பிட்டாலும் மக்கள் கிட்டே
நெருங்க முடியாத அளவுக்கு ஜனநாயகமற்று இருக்கிறது.. எனவே அப்படியான ஒரு நெருக்கடி மத்தியிலிருந்து ஏவிவிடப்படும் போது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் கட்சிகளின் டப்பா டான்ஸாடி விடும்.

இன்னிக்குத் தேதியில் தமிழகத்தில் பரவலாக மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்… ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் இங்குள்ள தமிழனின் உள்ளத்தை பதறச் செய்து கொண்டிருக்கிறது… அங்கே மக்கள் படும் பாடு நம் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது… இந்த உணர்வுகளை அரசியல்படுத்த வேண்டும் ( அரசியல்படுத்த வேண்டும் வோட்டுப்படுத்தக் கூடாது) தமிழக மக்களின் அரசியல் எழுச்சி இந்தியக் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்னும் நிலை வந்தால் தான் அங்கே போர் நிற்கும். ஆனால் மேற்சொன்ன வலைத்தளமாகட்டும், இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் களத்திலிறங்கியிருக்கும் ஓட்டுக்கட்சிகளாகட்டும் இதை எப்படி தமது கட்சிக்கு சாதகமான ஓட்டுக்களாக கன்வெர்ட் செய்வது
என்பதிலே தான் குறியாக இருக்கிறார்கள்.

ஆனானப்பட்ட கருணாநிதியே இத்தனை வருச தேர்தல் அரசியலுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் நிலை இந்தப் பரிதாபகரமான நிலைதான் என்னும் போது.. அரசியலில் பல பழங்களைத் தின்று பல கொட்டைகளையும் சில ***ட்டைகளையும் போட்டவரே இன்றைக்கு சாத்திக்கிட்டு ஓக்காந்திருக்கும் போது… வேறு எவராலும் இந்த தேர்தல் அரசியல் பாதையில் மக்களைத் திரட்டவோ – அதன் மூலம் மைய்ய அரசைப் பணிய வைக்கவோ – அதன்மூலம் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ – இந்தியாவையும் இலங்கையையும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வைக்கவோ – முடியாது.

மக்கள் எழுச்சியை தேர்தல் அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் இட்டுச் செல்வது என்பது இவ்வெழுச்சிக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகவே முடியும்.

மார்ச் 3, 2009 பதிந்தவர் kaargipages | politics | | 1 மறுமொழி

நான் கடவுள் விமர்சனம்

இணைய புத்திஜீவிகள் எல்லோரும் இந்தப் படத்தைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் “நமக்குத்தான் ஒருவேளை புரியலையோ” என்ற சந்தேகத்தில் “நல்லாத்தான் இருக்கு…….ஆனா….” என்று மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நான் பாலா படங்களைப் பார்ப்பதில்லை; நிறைய செயற்கைத்தனம் இருக்கும் என்பது ஒரு காரணம். இந்த முறை ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் நன்பனோடு பார்க்கப் போனேன்.

முதலில் ருத்ரன். காசி மாநகரத்தைச் சேர்ந்த அகோரி – அதாவது நமக்குப் புரியும் மொழியில், பினந்தின்னி சாமியார். இவனை காசியில் ஜாதக தோஷங்களுக்காக காசியில் நேர்ந்து விட்டு விட்ட தகப்பன் தேடிவரும் காட்சியில் தான் படம் ஆரம்பமாகிறது. ஒத்தாசைக்கு வரும் காசி நகர பார்ப்பான் ஜாதகக் காரணங்களுக்காக பிள்ளையை காசியில் விட்டு விட்டதாக தகப்பன் சொன்னதும் பொங்கியெழுகிறார். இந்தியில் திட்டுகிறார்; நம்மாளு காலில் விழுந்ததும் ‘சரி சரி பார்க்கலாம் என்கிறார்’ – எழுத்துப் பிச்சர் ஒடும் போது
ஜெயமோகன் பெயரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

படம் நெடுக இந்த நபரை எல்லா கதாபாத்திரங்களும் ஒருவித மிரட்சியுடன் பார்க்கிறார்கள். அட, நம்ம போலீசும் கோர்ட்டும் கூட இவனிடம் பம்முகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்குத் தெரிந்து எலும்பு வீசுபவனிடம் மட்டும் தான் இவர்கள் பம்முவார்கள். ஊருக்கு வந்து சேரும் பினந்தின்னிச் சாமி அங்கே கோயிலில் பிச்சையெடுக்கும் கூட்டம் ஒண்டும் ஒரு இடத்துக்குப் பக்கத்தில் தனது ஜாகையை அமைத்துக் கொள்கிறது. அங்கே இருக்கும் லோக்கல் சாமிகள் – போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதாக சொல்கிறான் ஒரு சாமி – வலித்துக் கொடுத்த கஞ்சாவைக் கூட தொடாமல் சுத்தபத்தமாக தனி கஞ்சா அடிக்கும் அளவுக்கு காசியைச் சேர்ந்த அகோரி தன் புனிதத் தன்மையை தமிழ் நாட்டில் காப்பாற்றிக்
கொள்கிறான். கடுமையான டயட் கண்ட்ரோலில் இருக்கும் அகோரி, நரமாமிசம் தவிர்த்து வேறு அசுத்த உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை.

அடிக்கடி சமஸ்கிருதத்தில் “அஹம் ப்ரம்ஹாஸ்மி…” என்று வானத்தைப் பார்த்துக் கூவிக் கொண்டிருப்பது இந்த நபரின் முக்கிய வேலைகளில் ஒன்று. ம்ம்ம்ம்….. நியாயமாகப் பார்த்தால்
இந்த ருத்ரனை அழைத்து வந்து – முரண்டு பிடித்தால் பொடனியில் ஒன்று போட்டாவது – மனநல மருத்துவரிடம் சேர்த்திருக்க வேண்டும். தெருவில் இப்படி பரிதாபத்துக்குரிய ஒருத்தனைப் பார்த்தால் நாம் அப்படித்தான் நினைப்போம்; ஆனால் படத்தில் வரும் இந்த மனநோயாளியை எல்லோரும் ரசிக்கிறார்கள்.

அடுத்து பிச்சைக்காரர்கள் – நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் மிருகங்களைப் பார்த்து ரசிக்கும் கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள் தானே? அதே போன்ற ஒரு ரசனையைத் தான் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் / குரூபிகள் தமக்குள் பேசிக்கொள்வதைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் ரசிகக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.

பார்வையாளன் இவர்களின் உலகத்தை ரசனையோடு பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்து அந்தக் காட்சிகளை இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பிச்சைக்காரர்கள் சமூகத்தில் உருவாகக் காரணமான சமூக அமைப்புமுறையின் மேல் எழ வேண்டிய கோபம் முதலாளி தாண்டவனைத் தாண்ட மாட்டேனென்கிறது. தாண்டவனின் கையாள் முருகன் பிச்சைக்காரர்களிடம் நெகிழும் இடங்களில் பார்வையாளனும் நெகிழ்கிறான்; பிச்சைக்காரர்களை “உருப்படிகள்” என்று விளிப்பதைக் கேட்டு சிரிக்கிறான். நயன்தாரா போல் வேடமிட்டு ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து வெட்கப்படுகிறான். இப்படி தம்மை நெகிழவும் சிரிக்கவும் வைத்த அந்த பிச்சைக்காரர்களில் ஒருவனான அங்கவீனமான சிறுவனை ஒரு மலையாள “முதலாளி” தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகு தான் பார்வையாளன் கோபப்படுகிறான். அந்த மக்களை புறக்கனித்து அவர்களுக்கு ஒரு
கொடூரமான வாழ்க்கையைப் பரிசளித்திருக்கும் இந்த சமூக அமைப்பின் மேலோ, இந்த அயோக்கியத்தனங்களுக்கு வால் பிடித்து நிற்கும் போலீசு உள்ளிட்ட அரசு அமைப்பின் மேலோ பாய்ந்திருக்க வேண்டிய கோபம், மலையாள முதலாளியையும் தாண்டவனையும் அகோரி ருத்ரன் “தண்டிப்பதன்” மூலன் சாந்தமடைகிறது.

படத்தில் பாடிப்பிச்சையெடுக்கும் குருட்டுப் பிச்சைக்காரி கதாபாத்திரத்திம் முதலில் ஒரு முதலாளியிடன் இருந்து அடுத்து இன்னொரு முதலாளி கையில் வந்து சேர்கிறாள். முகம்
கோரமான இன்னொரு முதலாளியிடம் காமுகியாய் அனுப்ப புது முதலாளி முடிவெடுக்க இவள் மறுக்கிறாள். அதன் காரணமாய் அவன் இவள் முகத்தை சுவற்றில் தேய்த்து கோரப்படுத்தி விடுகிறான். முகம் கோரப்பட்ட இவள் பினந்தின்னிச் சாமியிடம் வந்து மரண வரம் கேட்க, இவரும் சந்தோஷமாய் அதைக் கொடுத்தருளுகிறார்.

மொத்தம் மூன்று கொலைகள் ஆயிற்றா? அடுத்த காட்சியில் நியாயமாக கம்பியென்னத்தான் போயிருக்க வேண்டும்… ஆனால் நாம்மாளு காசியிலிருந்து ஸ்பெசலாய் எழுந்தருளி இருக்கும் அகோரியல்லவா? எனவே அடுத்த காட்சியில் கூலாக காசிக்கே போய்விடுகிறார். கொலைக்கு ஒன்று வீதம் மூன்று முறை கங்கையில் முங்கியெழுகிறார் – பின்னனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க தன் குருவை நோக்கி கம்பீரமாய் நடந்து வர, காட்சி உறைகிறது – பார்வையாளர்கள் பிச்சைக்காரப் பயல்களை மறந்து விட்டு சந்தோஷமாய் மனநிறைவோடு எழுந்து வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.

அகோரிகள், தாந்திரிகர்கள், காபாலிகர்கள், காலபைரவர்கள் என்பதெல்லாம் இந்து மதத்தின் தீவிர மனநோயாளிகளால் பின்பற்றப்படும்  ‘கல்ட்’கள் (cult). இதெல்லாம் தடைசெய்யப்பட
வேண்டிய பைத்தியக்காரத்தனங்கள்.ஆனால் இந்தப் படமோ அவர்கள் மேல் ஒரு வித மரியாதையை / பிரமிப்பை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குகிறது. கண் பார்வையற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க இரண்டு மூன்று ரவுடிகள் தூக்கிச் செல்ல முயன்றால், அங்கே இருக்கும் எல்லோரும் சேர்ந்து ‘பொது மாத்து’ கொடுத்திருக்க வேண்டும் – எங்கூர்ல எவனாவது இப்படி செஞ்சிருந்தான்னா ஊரே சேர்ந்து கிழிச்சிருப்பாங்க- இங்கே என்னடாவென்றால், எல்லோரும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, நம்மாளு மட்டும் அந்நியன் விக்ரம் போல பறந்து பறந்து அடிக்கிறார். ஏட்டைய்யா மரியாதையாக செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு நெருங்குகிறார் – எதுக்கு? – கஞ்சாவைக் கொடுக்க!

படம் நெடுக ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கடவுளைச் செல்லமாக பகடி செய்து கொள்கிறார்கள். ஓரிடத்தில் கிருஷ்ணனை “உள்பாவாடைக் களவானி” என்கிறான் ஒரு சிறுவன். உச்சமாக ஒரு கிழவர் கடவுளைத் “தேவிடியாப்பய” என்றும் சொல்கிறார்… இதையெல்லாம் கொண்டு இந்த படம் இந்துத்துவத்தை எதிர்த்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது.  பருண்மையாகப் பார்க்கையில் பார்வையாளர்கள் எல்லோருடைய ஒட்டுமொத்த கோபத்துக்கும் ஆளானா “பயங்கர” வில்லன் தாண்டவனை தண்டிப்பது ஒரு அகோரி தான்; எனவே திரையரங்கை விட்டு வெளியேறுகையில் அகோரியின் மேல் – இந்த வகை லூசுத்தனங்களை அனுமதித்திருக்கும் இந்து மதத்தின் மேல் – அருவெறுப்பு தோன்றுவதற்குப் பதில்
பார்வையாளனுக்கு ஆதர்சமும், பிரமிப்பும், மரியாதையும் தான் தோன்றுகிறது.

தினமலரின் பார்வையில் லோக்கல் சாமியார்கள் எப்படித்தெரிவார்களோ அப்படித்தான் படத்தில் வரும் லோக்கல் சாமியார்களும் ( கஞ்சா குடிக்கி சாமிகளாகட்டும் கையும் காலும்
இல்லாத சாமியாகட்டும்) காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே தினமலரின் பார்வையில் காஞ்சி சங்கராச்சாரி எப்படித் தெரிவானோ அப்படித்தான் அகோரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறான்.
அப்போ பிச்சைக்காரர்கள்? – அவர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு எண்டெர்டெயின்மெண்ட்! மிருகங்களை வேடிக்கை பார்த்து ரசிப்பதைப் போல பார்த்து ரசிக்கிறார்கள். மீண்டும் வடநாட்டில் இருந்து ஒரு பினந்தின்னிச் சாமி எழுந்தருள அவர்கள் பிரார்த்திக்க வேண்டியது தான்!! அந்த மீசைக்கார போலீசு இன்ஸ்பெக்டர் என்னவாயிருப்பார்? அவர் இன்னொரு தாண்டவனை உருவாக்குவதில் இப்போ பிஸியாக இருப்பாராயிருக்கும்.

படம் விட்டு வெளியே வரும் போது நன்பனிடம் கேட்டேன் -

“ஏண்டா.. அந்தப் பிச்சைக்காரங்களைப் பார்த்து அப்படி கெக்கே பெக்கேன்னு சிரிச்சிட்டு இருந்தியே…?”

“ஆமாண்டா… வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கனும் அப்பத்தாண்டா வாழ்க்கைய ரசிக்க முடியும்”

“இல்ல… அந்தப் பிச்சைக்காரர்களையும், குரூபிகளையும் இந்த சமூகம் புறக்கனிச்சிருக்கே, அதைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“என்ன பன்றது… பாவந்தான்… ஆனா, அது அவங்க விதி. நம்மாள முடிஞ்ச அஞ்சோ பத்தோ போடத்தான் நம்மாள முடியும். வேறென்னத்த செய்யச் சொல்றே?”

“அப்ப அந்த தாண்டவனைப் போல மாஃபியாக்கள்?”

“அதான் சாமியே தண்டனை கொடுத்திச்சில்லே?”

இயக்குனர் பாலா நிச்சயமாக ஜெயித்து விட்டார் என்று புரிந்தது.

மற்றபடி நல்ல பின்னனி இசை, புத்திசாலித்தனமான கேமராக் கோணங்கள், அருமையான ஒளிப்பதிவு…. blah, blah, blah, blah, blah….. அவ்வளவுதான்

- கார்க்கி

பெப்ரவரி 14, 2009 பதிந்தவர் kaargipages | Films, culture | | 2 மறுமொழிகள்

இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!

புதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது – ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.

சில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு “புகழ்”அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் முத்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் – இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை ‘லூசு’ பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

மீடியாவெங்கும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஆமா, யார் இந்த ராம் சேனா? யார் இந்த முத்தலிக்? எங்கேர்ந்து கெளம்புராய்ங்க?

முத்தலிக்

முத்தலிக்

மேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் – ப்ரமோத் முத்தலிக்!

கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்
தொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்
வாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு
உயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்
கொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.

இந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்
ஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்
லை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை
செய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா? – அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி
வேர் ஸ்ரீ ராம் சேனா.

இந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது “பிங்க் ஜட்டி” இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த – தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் – பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்!) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.

இவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் – இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை!

கேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்
பிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்
கொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் – குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று
சுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.

இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது – மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது.  பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்
விரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது
பிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.

கழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்
பிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.

ராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் – அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த
மொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்
தான்!

பெப்ரவரி 12, 2009 பதிந்தவர் kaargipages | facist, terrorism | , , | 4 மறுமொழிகள்

அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!

“…..OK. Let me look in to the problem and come back to you shortly.. Thanks for calling. Bye” அரை மணி நேரமாய் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கனிடமிருந்து
கத்தரித்துக் கொண்டு தலையில் மாட்டியிருந்த ஹெட்போனை உருவிக்கொண்டே திரும்பினான் சேல்லி.. இல்லை செல்வா என்னும் செல்வேந்திரன். அமெரிக்க வாய்
கோணிவிடக்கூடாது என்பதற்காக செல்வேந்திரன் “சேல்லி” ஆகியிருந்தான்.

“ஹேய் பாலா.. வர்றியா ஒரு தம் போட போறேன்.. கம்பெனி குடு” என்றான் பாலா எனப்படும் பாலமுருகனாகிய என்னைப் பார்த்து.

“சரி வா “

இது ஒரு ரிமோட் சப்போர்ட் செண்டர். அமெரிக்கனுக்கு அரித்தால் சொறிந்து விட வேண்டும் – அதாவது அவனது சிஸ்டத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் நாங்கள் இங்கிருந்து
சரிசெய்ய வேண்டும். அன்புமணியின் புண்ணியத்தால் கம்பெனிக்குள் புகைப்பிடிக்க தடையென்பதால் கம்பெனி கேட்டுக்கு நேர் எதிரே இருக்கும் பெட்டிக்கடை தான் போயாக
வேண்டும். ஒரு கிலோமீட்டர் நடை.

“Bull shit.. what the hell they are thinking” என்றான்

“என்னடா என்ன பிரச்சினை?”

“These bloody politicians… நம்ம நாட்டில தம்மடிக்கக் கூட சுந்தந்திரமில்லே. ஏதோ சர்வாதிகார நாடு மாதிரியில்லே இருக்கு”

“ஓ.. தம்மடிக்க விட்டிருந்தா இந்தியா முழு சுந்தந்திரம் உள்ள நாடுன்னு அர்த்தமாயிடுமா?”

“…….” பேசாமல் தனது ஐ-பாடின் இயர் போனைக் காதுக்குள் சொறுகிக் கொண்டே ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை…’ என்று முணுமுணுத்துக் கொண்டே நடையைப் போட்டான்.

மணி அண்ணன் எங்களை தூரத்தில் பார்த்த போதே இரண்டு தம்ளரில் டீயை ஊற்றிவிட்டு ஒரு சிகரெட்டை தனியே எடுத்து வைத்தார். பக்கத்தில் வந்ததும்
அவரின் டிரேட் மார்க் சினேகமான புன்னகையை வீசினார்.

“என்னா சார் காலையிலேர்ந்து காணமே”

“கொஞ்சம் வேலை அதிகம்ணா” ஒரு டீயை நான் எடுத்துக் கொண்டு ஒன்றை அவனிடம் நீட்டினேன். சிகரெட்டை அவனே பொறுக்கியெடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

மணி அண்ணான் அழுக்குத் தண்ணீர் நிரம்பியிருந்த டிரேயில் கிடந்த தம்ளர்களை அள்ளிக் கொண்டு கொஞ்சம் தள்ளியிருந்த கழுவும் இடம் நோக்கி சென்ற போது தான் அந்த
நாயைக் கவனித்தேன். சாப்பிட்டு இரண்டு நாட்களாகியிருக்கும் போலிருந்தது. வயிறு முதுகெலும்போடு ஒட்டியிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து பெட்டிக் கடையின் குப்பைகள்
போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு அட்டைப் பெட்டியினுள் தலையை நுழைத்து ஏதாவது கிடைக்குமா என்று துழாவிக் கொண்டிருந்தது. அடிக்கடி தலையை உயர்த்தி சற்று தொலைவில்
உட்கார்ந்து தம்ளர்களைக் கழுவிக்கொண்டிருந்த மணி அண்ணா மேல் ஒரு கண் பார்த்துக் கொள்வது மீண்டும் தலையை பெட்டிக்குள் நுழைத்து துழாவுவதுமாய் இருந்தது. உள்ளே
ஏதோ அகப்பட்டிருக்க வேண்டும் போல – வரட் வரட் என்ற சத்தத்தோடு அதை வெளியே இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மணி கவனித்து விட்டார்.

கவனித்ததும் மெல்ல ஓசைப்படாமல் நடந்து குப்பை பெட்டியை நோக்கி வந்தார். நாய் உள்ளே ஏதோ அகப்பட்டுக் கொண்ட சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாய் தலையை மேலே
தூக்கவில்லை. அதற்குள் மணி நாயின் பக்கவாட்டில் வந்து நின்றவர் அதன் வயிற்றைப் பார்த்து ஓங்கி ஒரு உதை விட்டார். நாயின் வயிற்றுக்குள் ஒரு பிரளயமே நடந்திருக்க
வேண்டும்.

கொல்ல்ல் கொல்ல்லென்று ஈனசுவரத்தில் அலறிக்கொண்டே சுருண்டு போய் ஒரு பத்தடி தள்ளி விழுந்தது. தலையைப் பரிதாபமாய் தூக்கிப் பார்த்து விட்டு ஓடி விட்டது. இதைப்
பார்த்துக் கொன்டிருந்த செல்வாவுக்கு சட்டென்று முகம் சிவந்து விட்டது…

“Ohhh my fucking God….  யோவ்.. அந்த நாய் என்னய்யா பாவம் பண்ணிச்சி. ஏன்யா அதை அடிச்சே. Rascal இரு இரு புளூக்ராஸ்க்கு போன் பன்றேன்.. உன்னையெல்லாம் உள்
ளே
தள்ளினாத்தான்யா புத்தி வரும்…” என்று பொறிந்து தள்ளிக்கொண்டே மொபைல் போனை பாக்கெட்டில் இருந்து உருவினான்.

“சார்… இந்த நாயிங்க பெட்டில இருக்க குப்பைய அள்ளிட்டுப் போய் கம்பெனி கேட்டுக்கு முன்னே போட்டிருது சார். உங்க கம்பெனிகாரங்க போன வாரம் வந்து சத்தம்
போட்டாங்க சார். இனி குப்பை விழுந்தா பெட்டிக் கடைய காலி பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லிட்டாங்க சார். நம்ப பொழப்பே இத நம்பித் தான் சார் ஓடுது.. என்னா சார்
பண்ணட்டும் நான்.. இங்கே நாளுக்கு எறநூறு டீ ஓடுது.. அத நம்பித்தான் சார் எங்க குடும்பமே சாப்பிடுது” முடிந்த வரையில் அதிக “சார்” இருக்கும் படி பார்த்துக்கொண்டார்.

“அதுக்காக நாயை அப்படியா ஒதப்பே? மனசுல ஈரமேயில்லையா மேன்” உச்சஸ்தாயியில் கத்தினான் செல்வா.

“செல்வா… விடு – நீ கெளம்பு மொதல்லே” இந்த நேரம் அவனிடம் எதுவும் பேசி புரியவைத்து விட முடியாது என்று எனக்குத் தெரியும்.

அவரிடம் திரும்பி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண் காட்டிவிட்டு இரண்டு டீக்கும் அவனது சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுத்து விட்டு அவன் தோளைப் பற்றி நடத்திக் கூட்டி வந்தேன்.

“ச்சே.. என்னா மனுசங்க பாத்தியா பாலா.. அந்த ஜீவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்.. அதுவே பாவம் பசியோட இருந்தது.”  இன்னும் முகம் சிவந்திருந்தது.

“அந்த நாய் பாவம் தான்.. ஏன் மணி பாவமில்லையாடா? அவர் குடும்பமே அந்தக் கடைய நம்பித்தான் இருக்கு, நாய்க்கு அவர் பாவம் பார்த்தா அவங்களுக்கெல்லாம் யார் சோறு
போடறது? நீ போடுவியா?”

“இல்ல…. ஆனாலும்…”

“ச்சீ நிப்பாட்டுடா.. ஒன் ஜீவ காருன்யத்த பெட்ரோல் ஊத்திக் கொளுத்த – மனுசனும் ஜீவன் தாண்டா.. ஏன் இந்த ஜீவன் மேல மட்டும் காருண்யம் வர மாட்டேங்குது உனக்கு?”

“அது… அது…” வார்த்தையைத் தேட ஆரம்பித்தான். பின் நிறுத்தி விட்டு என்னை ஏறிட்டுப் பார்த்தான். ‘நீயெல்லாம் மனுசனா இல்ல மிருகமா’ என்கிற மாதிரி ஒரு பார்வையை வீசி
விட்டு ஐ-பாடின் இயர் போனை மீண்டும் பொறுத்திக் கொண்டான் – “நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழையில்” மீண்டும் நனைய ஆரம்பித்தான்.

‘இவனுக மண்டையில அமில மழை தான் பெய்யனும்’ என்று நினைத்துக் கொண்டேன்.

டிசம்பர் 18, 2008 பதிந்தவர் kaargipages | short story | | No Comments Yet

பார்ப்பனியத்தின் இருப்பு!!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை சமூகத்தில் ஏற்கனவே புறையோடிப் போயுள்ள புண்ணின் மேல் போடப்பட்டிருந்த அழகான ஒப்பனையை கொஞ்சம்
திரை கிழித்துக் காட்டியிருக்கிறது. இது விஷயமாக பொதுவாக எல்லோரும் “அடப்பாவமே என்னமா அடிக்கிறானுக… இவனுக படிக்கப் போறானுகளா இல்ல ரவுடித்தனம்
செய்யப் போறானுகளா? அடிவாங்கற பய்யன் ரொம்ப பாவம் சார்… அவனப் பெத்தவங்க என்ன பாவம் செய்தாங்களோ..” என்று வன்முறையை வாழ்க்கையிலேயே கண்டிராத
“ரீஜெண்டான” வெளக்கெண்ணைகள் போல அங்கலாய்த்துக் கொண்டிருக்க.. மீடியாக்களும் வலைப்பதிவுகளும் இந்தக் குரல்களையே பெரும்பாலும் எதிரொலித்துக் கொண்டிருக்க..
வினவு தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காய் சமூக எதார்த்தத்தை நிகழ்ந்த சம்பவங்களோடு உரசிப்பார்த்து கறாரான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

அந்தக் கட்டுரைகளின் சுட்டி இதோ -

1) சட்டக்கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் தமிழகம் காப்போம்!!

2) சட்டக்கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…. அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

பிரச்சினை குறித்து இதை விட தீர்க்கமான/ நேர்மையான கட்டுரை ஒன்றை எழுதிவிட முடியாது. எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் அதனின்று நான் பெற்ற படிப்பினைகளையும் உறுதிப்படுத்துவதாய்
இருக்கிறது. இந்த கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்ட சில ரீஜெண்ட் கேசுகள்,

1) வன்முறை வன்முறை தான் சார்.. தலித்தாய் இருந்தால் என்ன ஆதிக்க சாதியாய் இருந்தால் என்ன? தப்பு தப்பு தான் சார்

2) அப்படியே தலித்துகளுக்கு பிரச்சினை இருந்திருந்தால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும். அதன் மூலம் தீர்வுகண்டிருக்க வேண்டும் – ரவி சிறீனிவாஸ் சில
இடங்களில் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

3) என்னாது…??? வன்முறைக்கு தீர்வு வன்முறையா? என்னவொரு சாடிசம்? – இது மருத்துவர் ருத்ரனை நோக்கி எழுப்பப்பட்டது.

பொதுவாக “இப்ப அழவேண்டிய நேரம். அதுவும் அடிப்பட்ட மானவர்களுக்காக அழவேண்டிய நேரம். இந்த நேரத்துல போய் இதுக்கு யார் காரணம், வரலாற்று ரீதியாக என்ன
நடந்தது என்பது பற்றியெல்லாம் ஏன் சார் யோசிக்கறீங்க? நீங்கெல்லாம் மனுசனா மிருகமா” வன்முறையைக் கண்டு முகம் சுளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படிச்
சிந்திக்கிறார்கள். ஏதோ இந்தியாவில் தீண்டாமை சாதியெல்லாம் எப்போதோ மலையேறி விட்டதென்றும்.. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற “அரசியல்களால்” தான்
சாதி இன்னும் வாழ்கிறது என்றும், இடஒதுக்கீட்டை எடுத்த் அடுத்த நிமிடம் சாதி மறைந்து விடும் என்றும் எழுதி/பேசி வருகிறார்கள்.

அந்தக் கட்டுரைகளின் பின்னூட்டம் ஒன்றில் தோழர் ஒருவர் கேட்டது போல, “இப்போ ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கினான் என்றவுடன் துள்ளிக் குதித்து வருகிறாயே…. முன்பு
தலித்துகள் அடிவாங்கிய போது எங்கே போனாய்?” என்ற கேள்வி நிச்சயம் இவர்கள் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் – அப்படி ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில்.
அப்போதெல்லாம் மவுனமாகத்தானே இருந்தாய் நீ? தின்னியத்திலும், பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம்.. இன்னும் வெளியே தெரியாத எத்தனையெத்தனையோ கிராமங்களில்
தலித்துகள் மேலான வன்முறை பற்றிக் கேள்விப்பட்ட போது நீ மவுனமாய் இருந்தாய் அல்லவா? பெரியார் தி.க தோழர்கள் இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இரட்டைக்
குவளை முறைக்கு எதிராய் போராட்டம் அறிவித்து, எங்கெங்கே இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டார்களே அப்போது நீ
மவுனமாய்த் தானே இருந்தாய்? – அந்த மவுனம் தான் பாரதிக்கண்ணனை அடித்தவர்கள் செய்த வன்முறையை விட மிக மோசமான வன்முறை..

நேரடியாக – உடல் ரீதியாக காட்டப்படும் வன்முறை ஒருபுறம் இருக்க… உளவியல் ரீதியாக செலுத்தப்படும் வன்முறையானது ஏற்படுத்து ஊமைக்காயங்கள் எப்படியிருக்கும் என்று
இவர்கள் அனுபவித்திருப்பார்களானால் – “வன்முறைக்குத் தீர்வு வன்முறையா சார்?” என்று நொன்னை பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். “அம்பேத்கர் பேரைப் போடாம விட்டது
ஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் இந்தளவுக்கு இறங்கிட்டாளே சார்?” தங்கள் ஸ்காலர்ஷிப் வாங்கும் போது எதிர்கொண்ட கேலிப் பார்வைகளும், மெஸில் தனித்து
உட்காரவைக்கப்பட்ட போது எதிர்கொண்ட அவமானங்களும்… பொதுவாக கிராமப் புறங்களிலிருந்து பல்வேறு நேரடி/மறைமுக அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்துவிட்டு
வந்திருக்கும் மானவர்களுக்கு இந்த “சின்ன சமாச்சாரம்” ஒரு நெருப்புப் பொறி தான். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரண்ட கானகமாய் புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
விழுந்த மிகச் சிறிய நெருப்புப் பொறி தான் போஸ்டர் சம்பவம்.

“அப்படியே இருந்தாலும் அவர்கள் அரசின் கவனத்தை அல்லவா ஈர்த்திருக்க வேண்டும்?” அரசு என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறை வடிவம் தான். அரசு இயந்திரத்தின் அங்கமாக
ஆகும் தலித் கூட நாட்பட நாட்பட கருப்புப் பார்ப்பானாய்த் தான் மாறியாக வேண்டும் என்கிற சூழல் தான் நிலவுகிறது. பாப்பாப்பட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம், தின்னியம்.
மேலவளவு – இத்தனைக்கும் பின்னே விழித்தெழாத அரசு, இம்மானவர்கள் எழுதியிருக்கக்கூடிய மூன்று பக்க மணுவிற்கா விழித்திருக்கப் போகிறது? கிராமங்களில் தலித்துகளின் சேரி
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் – அதுவும் காற்று வீசும் திசையின் கீழ்ப்புறத்தில் – இருக்கிறதே.. இந்த அரசு அவர்களையும் ஆதிக்கசாதியினரின் வீடுகளையும் ஒரே பகுதியில் ஏற்படுத்த
முயன்றிருக்கலாமே?

ஆக.. சாதி இருக்கிறது. அதன் ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அது மேலும் மேலும் வலிமையடைந்திருக்கிறது. காலம் மாற மாற அது வெளிப்படும் முறைகளில்
மாற்றமடைந்திருக்கிறதேயொழிய அதன் இருப்பு இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மை தான் சட்டக்கலூரி வன்முறைகளின் மூலம்
இன்னுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாடு நமக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.

சமூக எதார்த்தம் அறியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில அல்பைகள் தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். “என்னாது காந்தி செத்துட்டாரா?” என்ற ரீதியில்,
“என்னாது சாதி இருக்கா? அதுவும் படிக்கிற இடத்துலயே இருக்கா? என்ன கொடுமை சார்?” என்கிறார்கள் தூக்கத்தில் இருந்து விழித்து. இதில் சிலர் உண்மையிலேயே தூங்கி
விட்டவர்கள்.. பலர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த காரியவாதிகள். இந்தக் காரியவாதிகள் தாம் பாரதிக்கண்ணன் அடிபடும் காட்சியைப்பிழிந்து வரும் சோகரசத்தை
மூலதனமாகக் கொண்டு மீண்டும் தொண்ணூறுகள் வராதா, ஆடுகள் முட்டிக் கொள்ளாதா – நாம் ரத்தம் குடிக்க மாட்டோ மா என்று நரிகள் போலக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தக்
காரியவாதிகள் யார் என்று நாம் சொல்லவே வேண்டியதில்லை.. எதை மறைத்தாலும் இவர்கள் குடுமியை மட்டும் மறைத்துவிட முடியுமா என்ன?

இந்த விவகாரம் குறித்து வினவு குழுமத்தினர் எழுதிய மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் மாத்திரமல்லாமல் அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும்
முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சுட்டி கீழே -

1) பண்ணைப்புரம்: இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம்!

2) அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்!

நவம்பர் 21, 2008 பதிந்தவர் kaargipages | Alppaigal, medias, politics | | 3 மறுமொழிகள்

ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!

“யாத்ரியோ க்ருப்யா க்யான் தே… காடி நெம்பர் சார், சாத், ஷுன்யெ, தோ… – ப்ப்பாபாபாங்ங்ங்ங்…. தடக் தடக் தடக்…”
அறிவிப்பாளினியின் குரலைத் தின்று கொண்டே சோம்பலாய் நுழைந்தது அந்த ரயில்.

“சௌ ருப்யா தே தோ மஹராஜ்” என்றபடி எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தார் அந்த வயதான போர்ட்டர். ஒடுக்கு விழுந்த கருத்த முகம். உழைத்தே தேய்ந்து போன கெச்சலான உடல்.

“சௌ ருப்பா too much ஹே பாய். மே பச்சாஸ் ருப்யா தே ரஹாஹூ” ஆங்ரேஜியும் இந்தியும் கலந்து திக்கித்திக்கி சொன்னேன்.

“யே ஜாதா வெயிட் ஹே ஸாப்” இரண்டு பெரிய பயணப் பொதிகள்…

தெரியாத மொழியில் வேறென்ன பேரம் பேசி விட முடியும். மேலும் அவர் அந்த பெட்டிகளை தள்ளாடித் தள்ளாடி தூக்க முயன்றது மனதை என்னவோ செய்தது.

“அச்சா சலோ பாய்” என்றவாறே அவர் தலை மேல் அந்தப் பொதிகளை ஏற்ற உதவினேன்.

எனது சீட்டின் கீழே அவற்றை பெரும் சிரமத்தொடு சொறுகி விட்டு அவர் கையில் நூறு ரூபாய் தாளை கொடுத்த போது கேட்டார் -

“ஸாப் ஆப் மதராஸி ஹே?”

“ஜீ ஹாங்” இரண்டு வருடங்கள் முன்பு இந்த ஊரில் கால் வைத்த போது எதிர் கொண்ட அதே கேள்வி – ஊரை விட்டு கிளம்பும் போதும்

இரண்டு வருடங்கள்! இரண்டு முழு வருடங்கள்!!! நான் வேலை பார்க்கத் துவங்கிய பின் நீண்ட நாட்கள் தங்கிவிட்ட ஊர் இது தான்.

ரயில் மெல்ல சோம்பல் முறித்து நகரத் துவங்கியது. சன்னலோர இருக்கையில் சாய்ந்து பின்னோக்கிப் பாயும் காட்சிகளில் லயித்தேன். ரயில் பயணம் சந்தோஷமானது – அதில்
கிடைக்கும் அந்த நேர இடைவெளிக்காகவே ரயில் பயணத்தை நான் நேசிப்பதுண்டு. கொஞ்ச நேரத்தில் பச்சை வயல்கள் கடந்து போக ஆரம்பித்தது.. கண்களில் நழுவும் பசுமை..
மனதினுள் ஆழப்பதிந்து விட்ட சில பசுமையான நினைவுகளைத் தூண்டி விட ஆரம்பித்தது. திரும்பிப் பார்க்க வாய்ப்பே தராத தொடர்ந்த ஓட்டம். இப்படி ஆசுவாசமான தருணங்கள்
அபூர்வமாய் வாய்க்கும் சமயங்களில் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்து விடும். பழைய நாட்களை நினைப்பது என்றாலே எனக்கு அச்சமாகத் தான் இருக்கும். இன்றைய நாள் நரகம்
என்றால் முந்தைய நாட்கள் பாழும் நரகம். ஊர் ஊராய் ஓடத் தொடங்கி ஒன்பது வருடங்களாகி விட்டது.. எப்போது முடிவுறும் என்றே தெரியாத சாலையில் பயணிப்பது  போன்றதொரு
உணர்வு சமீப நாட்களாய் எழத்தொடங்கி விட்டது.

சாய்ந்து அழ தோள் இல்லாதவனின் தோல்வியும், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆட்களில்லாதவனின் வெற்றியும் பெரும் சோகங்கள். இந்த ஒன்பது வருட பயணத்தில் இப்படியான
சந்தர்ப்பங்கள் மாறி மாறி வந்தபின் இன்று சிரிப்போ அழுகையோ இயல்பாய் வர மறுக்கிறது. இயல்பான அன்போ காதலோ இல்லாத நாட்கள். கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க
நேரமும் வாய்ப்பும் இருந்தால் மட்டும் போதாது அது இனிமையானதாயும் இருந்திருக்க வேண்டும்.

“எடோ .. எந்தாடா ஈ ட்ரெஸ்ஸு… ஈ ஆபீஸுக்கு ட்ரெஸ் கோட் உண்டு அறியுமோ? போய்க்கோடா.. ட்ரெஸ் சேஞ்ச் செய்து வா….” முதல் வேலையில் முதல் நாள் அந்த மலையாள
மேனேஜர் முகத்தை உருக்கிய இறும்பு போல் வைத்துக் கொண்டு எரிந்து விழுந்த போது எனக்கு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது பிறக்க சரியாக நாலு மணி நேரமும்
முப்பத்தைந்து நிமிடங்களும் தான் இருந்தது. ஆம் அன்று தான் எனக்குப் பிறந்த நாள். நான் அன்று உடுத்திப் போயிருந்தது என் பிறந்த நாளுக்கு ஆசையாய் வாங்கியிருந்த புது உடுப்புகள்.

பத்தாம் வகுப்பு முடிந்து மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும் முடித்து கேம்பஸில் தேர்வாகி ஆறு மாதம் வேலைக்கான உத்தரவு வராமல் காத்திருந்து தேர்வு செய்திருந்த கம்பெனிக்கு
கடிதங்கள் மேல் கடிதங்களாக நான் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் வயதுத் தோழர்கள் காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஆறு மாதங்கள் வேலை நிச்சயமாகாத சூழலில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த போது எதிர் கொண்ட உறவுகளின் கேலிப் பார்வையும், அம்மாவின் குத்தல் பேச்சும் வேலை
கிடைத்த உடனே மறைந்த மாயம் சொல்லிக் கொடுத்த பாடம் – சொந்தங்கள் என்னும் மாளிகையின் அஸ்திபாரம் – பண்ம்!

“நீயெல்லாம் நல்லா கொட்டிக்கத்தாண்டா லாயக்கு – நீ கெட்ட கேட்டுக்கு முட்ட தோசை ஒன்னு தான் கொறை – அவனவன் படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்க,
நீ யென்னடான்னா தெள்ளவாரியா ஊர் சுத்திட்டு இருக்கே” ஆறு மாதம் முன்பு வரை சோறு ஊட்டி விட்ட அம்மா!

வாழ்க்கையிலேயே முதன்முதலாக மலச்சிக்கலால் அவதிப்பட்ட நாட்கள் அது தான். எதிர்காலம் குறித்த பயம் ஒரு பெரும் இருளைப் போல் என்னைச் சூழ்ந்திருந்த நாட்கள் அது!

அப்பாவின் தங்கைக்கு ஏற்பட்ட வைத்தியச் செலவுகளுக்காக வாங்கிய கடன் – என்னை கல்லூரியில் சேர்க்க வாங்கியிருந்த கடன் – அப்பாவுக்கு காலில் அடிப்பட்டு அந்த
வைத்தியத்திற்கு வாங்கிய கடன் – அவர் சரியாக தொழிலை கவனிக்க முடியாமல் நொடிந்து போயிருந்த நிலை.. என்று சுற்றிச் சுற்று கடன். பந்தம் பாசம் நேசம் காதல்
என்று அத்தனை வகை உறவுகளும் பணம் என்னும் அடித்தளத்தின் மேலேயே கட்டப்பட்டிருந்ததை எனக்கு வாழ்க்கை மண்டையில் ஆணி அடித்து இறக்கியதைப் போல்
கற்றுக் கொடுத்த நாட்கள் அது.

இந்த இடத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னுமொரு விஷயம் எனக்கும் அப்பாவுக்குமான உறவு. அது வரையில் – அதாவது நான் படித்து முடிக்கும் வரையில் – நான் அதிகம்
வெறுத்த ஒரு மனிதர் என் அப்பா தான். மிகக் கண்டிப்பானவர். நிறைய அடிப்பார். ஆனால் அந்த ஆறு மாதம் நான் வேலையற்று இருந்த நாட்களில் ஒரு முறையென்றால் ஒரு முறை
கூட கடுகடுப்பாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சில சமயங்களில் பரிதாபமாய் பார்ப்பார் – இப்போதும் கூட நேரில் பார்க்கும் போது சில சமயங்களில் அதே பரிதாபப் பார்வையை
உணர்ந்ததுண்டு. அந்தப் பார்வை – புதிதாய் போர்க்களத்துக்குப் போகும் வீரனை அடிபட்டு திரும்பி வரும் வீரன் பார்ப்பானே அதே பார்வை!. ஒரு வேளை அவர் கூட என் நிலையைக்
கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும் கூட உறவுகளின் போலித்தனத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அச்சடித்த மாயக்காகிதங்களை துரத்தி ஓய்ந்திருப்பார்.
ஒரு காலத்தில் என்னைப் போல் ஒரு பந்தையக் குதிரையாக இருந்திருப்பார். இப்போதோ கிழட்டு பந்தையக் குதிரை – என்னிலும் மோசமான ஒரு நிலை. பந்தையக் குதிரைகளுக்கு
மதிப்பு அது திறமையாக ஓடும் வரை தான்.

ஒரு வழியாக வேலை கிடைத்து கொஞ்ச நாளிலேயே திருப்பூருக்கு மாற்றலானது – “அய்யோ செல்வா.. நீயில்லாம இந்த வீடே வெறிச்சோடிப் போகுமே”… -  நான் சந்தோஷமாய்
திருப்பூர் கிளம்பினேன். அதே நேரத்தில் சகோதரிக்கு அவசர அவசரமாய்க் கல்யாண ஏற்பாடுகள் நடக்க, எழுபத்தையாயிரம் வரதட்சினை, நகை, பெரிய மண்டபத்தில் வரவேற்பு -
என் தலைமேல் ஒன்னறை லட்சம் புதிய கடனும் ஆறாயிரம் வட்டி கட்ட வேண்டிய பொறுப்பும் வந்து விழுந்தது.

திருப்பூரில் தங்கும் செலவும் போக்குவரத்து செலவுக்கு பெட்ரோல் காசும் கம்பெனி கொடுத்து விட எனக்கு சாப்பாட்டு செலவு மட்டும் தான். சம்பளம் அப்படியே வீட்டுக்கு
போய்விட வாரா வாரம் கிடைக்கும் லோக்கல் அலோவன்ஸில் தான் சாப்பாடு. அலைச்சலும் ஏற்றபடி அலோவன்ஸ் ஏறும் இறங்கும். சில சமயம் நூற்றைம்பது.. அதிக பட்சம் முன்னூறு.
பல வாரங்கள் அலோவன்ஸ் வர தாமதமாகும். அப்படியான சமயங்களில் மதிய உணவு வேர்க்கடலையும் அரை லிட்டர் தண்ணீரும் தான். காலையும் மாலையும் பாட்டியம்மா இட்லி.
அவர் பெயர் கூட இப்போது மறந்து விட்டேன். காலையும் மாலையும் இட்லி கொண்டு வருவார். அமிர்தம் போலிருக்கும் – காரணம் அதன் விலை – ஐம்பது பைசா!

திருப்பூர் ஒரு வினோதமான ஊர். ஒரு குட்டித் தமிழ்நாடு என்று சொல்லலாம். எல்லா வகை மனிதர்களையும் பார்க்கலாம். என்னை விட பலமடங்கு இளைய வயதில் வேலை பார்க்க
துவங்கியவர்களை அங்கே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன பிள்ளைகள் டையிங் செக்ஷன்களில் உடலெல்லாம் சாயத்தோடும் கெமிக்கல் வாசத்தோடும் கண்களில் எந்தக்
கனவுகளும் இல்லாத சிறுவர்கள். ம்ம்ம்ம்… அப்துல் கலாம் இது வரையில் கற்பனையில் கூட பார்த்திராத சிறுவர்கள். நாளொன்றுக்கு அய்ம்பது ரூபாய் வாங்குவார்களாயிருக்கும். அங்கே கம்பெனிகளெல்லாம் பழைய பண்ணைகளின் புதிய உருவம் தான். பெரும்பாலான கம்பெனிகள் கவுண்டமார்களுக்கும் நாயக்கர்களுக்கும் தான் சொந்தமாயிருக்கும்.
அவர்களுக்கும் சாதிவாரியாக சிண்டிகேட் எல்லாம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கம்பெனிகளில் பண்ணையார்த்தனம் கொடிகட்டிப் பறக்கும். முதலாளி பண்ணையார் -
மேனேஜர் – சூப்பர்வைசர்களெல்லாம் கங்கானிகள்! பதிநான்கு மணி நேரம் மிருகங்களைப் போல் அடைத்து வைத்து வேலை வாங்குவார்கள். அந்தச் சிறுவர்கள் தாம் உலகத் தரமான டிசர்ட்டுகளை உருவாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரங்களில் நாளெல்லாம் அலைந்து திரிந்தும் தீனி கிடைக்காத ஆடுகள் கிடைக்குத் திரும்புவதைப் போல – ஜோம்பிகளைப் போல – அவர்கள் வீடு திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். அதே ஊரில் தான் எந்த லேட்டஸ்ட் மாடல் காரானாலும் – உலகில் எந்த மூலையில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் – அடுத்த ஒரே மாதத்தில் சாலையில் ஓடிப் பார்த்திருக்கிறேன்.

கருமத்தம்பட்டி, அவினாசி, பெருமாநல்லூர், பெருந்துரை, கோபி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் என்று சுற்றுப்பட்டில் இருக்கும் சிறு நகரங்களில் இருந்து காலை
நேர திருப்பூர் பேருந்து எதிலாவது ஏறி ஒரு ஆறு மாதம் தொடர்ந்து பயணித்தால் வாழ்க்கைக்கான அத்தனை பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம். பள்ளிக்கூடத்திலிருந்து
பாதியிலேயே பிடுங்கியெறியப்பட்ட பிள்ளைகள். தாலிக்கு பவுன் சேர்க்கும் கனவுகளோடு பதின்மவயதுப் பெண்கள் -அவர்களை நெரிசலில் உரசிப் பார்க்கத் துடிக்கும் காலிகள்.
வரண்டு போன நிலத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டே அதற்கு காரணமான திருப்பூர் சாயப்பட்டரைக்கு வேலைக்காக பயனிக்கும் விவசாயி. ஊரில் சித்தாள் வேலை கிடைக்காத
வயதான பெண்மணி -

அந்தச் சூழல் முதலில் எனக்கு திருப்தி அளித்தது – குரூர திருப்தி. ஒரு அலட்சியமான கோணல் சிரிப்பு. இளக்காரமான பார்வை. உனக்கு நான் மேல் என்கிற இறுமாப்பு..

அந்த வருட தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. அந்த தீபாவளிக்குப் பின் நான் தீபாவளி கொண்டாடியதேயில்லை – வேறு எந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை.

பொதுவாக எனக்கு வரும் அலோவன்ஸ் என் சீனியரின் பெயருக்கு செக்காக வரும். அவரும் நானும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம் – பகல் நேரங்களில் அதுவே தான்
ஆபீஸும் கூட. அவர் அந்த சமயத்தில் தீபாவளிக்காக ஒரு வாரம் முன்பே விடுப்பில் சென்றுவிட்டார். அந்த தீபாவளி ஒரு மாதக் கடைசியில் வந்து சேர்ந்தது. ஒரு வாரமாக சீனியர் இல்லாததால் வண்டியில் பெட்ரோல் கூட கிடையாது. அன்று காலை என் தூங்கி எழுந்த போது பாக்கெட்டில் மொத்தமாக ஒரு மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தது. இண்டு இடுக்கிலெல்லாம் தேடியதில் இன்னுமொரு மூன்று ரூபாய் தேறியது. ஒரு மூன்று ரூபாயை தனியே வைத்தேன் “இது இட்லிக்கு” இன்னொரு மூன்று ரூபாயை பாக்கெட்டில் போட்டேன் “டீக்கும்
பிஸ்கட்டுக்கும்”

“மதியத்திற்கு?”

அறை முலையில் குவிந்து கிடந்த பழைய நாளிதழ்கள் கண்ணில் பட்டது. என் சீனியருக்கு தினசரி இரண்டு நாளிதழ்கள் வாசிக்கும் வழக்கம் – தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று.
ஒரு ஆறேழு மாதமாய் அது சேர்ந்திருந்தது. அலுவலக தொலைபேசியில் இருந்து அவருக்கு கூப்பிட்டேன்,

“பாஸ், செலவுக்கு காசு வேணும்… நம்ப ரூம்ல இருக்கற பேப்பரை வேஸ்ட்டுக்கு போட்டிடவா? நீங்க கன்வேயன்ஸ் வந்ததும் அதில் கழிச்சிக்கங்க”

“ஓக்கே டா”

மொத்தமாக ஒரு நாற்பது கிலோ தேறியது. அதற்குள் இட்லி வந்துவிட குளித்து சாப்பிட்ட உடன் அதை சிரமப்பட்டு வாசலுக்கு கொண்டு வந்தேன். இதையெப்படி கடைவரைக்கும்
சுமப்பது என்று குழம்பி நின்ற போது -

“என்னண்ணே, வேஸ்ட்டுக்கா?” எதிர் அறைப் பொடியன். மதுரைக்கு அந்தப்பக்கம் ஏதோ ஒரு ஊர். பக்கத்தில் ஏதோ கம்பெனியில் பேக்கிங் செக்ஷனில் வேலை. அவர்கள் ஒதுக்கிக்
கொடுத்திருந்த புறாக்கூண்டில் வசிக்கும் பத்துப் பொடியன்களில் ஒருவன்.

“ஆமாண்டா… நீ ஊருக்குப் போகலையா?”

“போனஸ் தரலைண்ணே”

“மற்றவங்களைக் காணலியே?”

“அவங்கெல்லாம் பக்கத்திலே ஈரோடு தானே.. நேத்தே கிளம்பிட்டாங்க”

“ஓ…”

“அண்ணே… சாப்ட காசில்லண்ணே.. இதக் கடை வரை தூக்கியாறேன்.. பத்து ரூவா தாரீங்களா?”

அன்றைக்கு நாங்களிருவரும் பகத்திலிருந்த “அன்பு” மெஸ்ஸில் சாப்பிட்டோம். இரண்டு அப்பளம் வைத்து அன்லிமிடட் மீல்ஸ். சர்வர் சோர்ந்து போகும் வரை வாங்கி வாங்கி சாப்பிட்டோம்.
அதற்குப் பின் மூன்று விஷயங்களை நான் செய்ததில்லை – ஒன்று – பண்டிகைகள் கொண்டாடுவதில்லை – இரண்டு – கஷ்ட்டப்பட்டு உழைப்பவர்களைப் பார்த்து ‘இவங்களுக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை” என்று திருப்தி அடைந்து கொள்வதில்லை – மூன்று – சாப்பிடும் பொருளை வீணாக்குவதில்லை.

ஒரு விஷயம் செய்வதுண்டு -

எப்போதெல்லாம் கண்ணதாசன் பாட்டான “உனக்கும் கீழே உள்ளவர் கோடி – நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற வரிகளை கேட்க நேர்கிறதோ அப்போதெல்லாம்

“தெவ்டியாப்பய… அயோக்கிய ர்ராஸ்கல்” என்று நினைத்துக் கொள்வதுண்டு.

ஒரு வருடம் திருப்பூர், அப்புறம் சென்னை, கொஞ்சம் நாள் பெங்களூர், கல்கட்டா, பிறகு ஒரு வருடம் டில்லி, இப்போது கடைசியாக இங்கே இரண்டு வருடம்.
சொந்த ஊர். சொந்த மக்கள். தாய் மொழி. நம்மவர்கள். என்று எல்லா பிடிப்புகளும் உதிர்ந்து மறைந்து விட்டது. காசில்லாதவன் / வேலையில்லாதவன் எந்த மொழிக்காரனாய்
இருந்தாலும் எந்த மதத்துக்காரனாய் இருந்தாலும் எந்த ஊர்க்காரனாய் இருந்தாலும் மதிப்பற்றவன் தான். உழைத்துப் பிழைப்பவனுக்கு இந்த நேசங்கள்,பிடிப்புகள் பற்றியெல்லாம் சிலாகித்துக்
கொள்ள எந்த இனிமையான நினைவுகளும் இருக்க வாய்ப்பில்லை. அந்த திருப்பூர் சிறுவனிடம் போய் தேசபக்தி~மொழிப்பற்று~மதம்~இனப்பற்று~சொந்தம்~பந்தம்~காதல்~அன்பு
என்று பேசிப்பாருங்கள் – காறித் துப்பி விட்டு தன் வேலையைப் பார்க்க போய்விடுவான். பத்து நிமிடம் நின்று காது கொடுத்து விட்டு லேட்டாகப் போனால் நாளைக்கு சோறு கிடைக்காது.

இது தான் உண்மை – வலிக்கும் உண்மை!

ரயில் ஏதோ ஒரு பெயர் தெரியாத ஸ்டேஷனில் நின்றது. வெளியே பயங்கரமாக மழை பெய்திருந்தது. சன்னலை உயர்த்தி வெளியே பார்த்தேன். தண்டவாளத்திற்கு பக்கவாட்டில் மழைத்
தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பாலித்தீன் காகிதம் இழுத்துக் கொண்டு நீரின் போக்கில் போனது.

நவம்பர் 17, 2008 பதிந்தவர் kaargipages | culture | | 3 மறுமொழிகள்

சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!

சாரு நிவேதிதா தொடங்கி.. ஜெயமோகன் வரையுள்ள இலக்கிய கழட்டிகளிடமும்.. வலைப்பூ உலகில் பல வடிவத்தில் (மன/மல)குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் சொறியர்களிடமும் ( மேற்படி கோமான்களுக்கு சொறிந்து விட்டுக் கொண்டிருப்பதே தம் கடன் என வாழும் அல்ப்பைகள்) கேட்கவென்றே சில சந்தேகங்கள் இருக்கிறது..

அதெப்படி உங்களுக்கு மட்டும் உலகமே சமூக/பொருளாதார ரீதியில் கொந்தளிப்பான சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்  பின்நவீனம்/முன்நவீனம்/சைடுநவீனம்/அப்பர் & லோயர் நவீனம் என்று இலக்கிய அரிப்பு தீராமல் இருந்து கொண்டேயிருக்கிறது?

பக்கத்தில் நமது ரத்த சொந்தங்கள் வீடிழந்து நாடிழந்து உறவுகளை இழந்து பராரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் போதும் உங்களால் “குட்டிக்கதை” “புட்டிக்கதை” “காமக்கதை” என்று எந்த கூச்சமும் இல்லாமல் வாந்தியெடுக்க முடிகிறதே எப்படி?

சாதாரண மனிதன் ஒருவன் கூட அநியாய சாவுகளைக் கண்டு உள்ளம் குமுறும் போது உங்கள் “இலக்கிய” எழவெடுத்த மனமோ அதில் கூட அழகியலைத் தேடுகிறதே எப்படி?

எழவு வீட்டின் ஒப்பாரியில் இருக்கும் உலக இசையின் கூறு என்னவென்று தேடும் கூறுகெட்ட புத்தி உங்களுக்கு மட்டும் எப்படி?

அவன் கிள்ளினான் / இவன் ஏசினான் என்கிற ரீதியில் உங்கள் உலகத்தைச் சேர்ந்த சக மிருகங்களோடு மல்லுக்கட்ட எடுத்துக் கொள்ளும் அக்கறையில் ஒரு சதவீதமாவது ஈழத்தில் செத்துப் போன எங்கள் சகோதரனுக்காக ஒரு கவிதையோ / கட்டுரையோ எழுத எடுப்பதில்லையே ஏன்?

தாஸ்தாவெஸ்கி~டால்ஸ்டாய்~மிஷெல் பூக்கோ~இந்திய விவசாயி = இந்த வரிசையில் இறுதியில் வரும் இலக்கியவாதி குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே?

ஏழு நிமிடம் பத்து வினாடிகளில் கடவுளை இசையாய்த் தேடும் உங்கள் காதுகளில் ரை இசையில் இன்பம் தேடும் உங்கள் காதுகளில் முப்பது வருடங்களாய் பக்கத்துத் தீவிலும்~ கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இந்திய வயல் வரப்புகளிலும் ஒலித்து வரும் ஒப்பாரி கேட்க வில்லை அல்லவா? அந்தக் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினால் தான் என்ன?

சிதறும் ரத்தத் துளிகளில் ஓவிய நளினம் தேடும் உங்கள் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொறுகினால் தான் என்ன?

போங்கடா நீங்களும் உங்க இலக்கிய மசிரும்..

ஊரே சாவு வீடாய்க் கிடக்க கொண்டாட்டமாய் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவன் அல்பையென்றால் இந்த இலக்கிய நாதாரிகளோ அறிவார்ந்த அல்பைகளாய் இருப்பார்கள் போலிருக்கிறது.

அக்டோபர் 31, 2008 பதிந்தவர் kaargipages | Alppaigal, culture | | 7 மறுமொழிகள்

முதலாளித்துவம் நடத்தும் பாடம்

சமீபமாக காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு செய்திகள் நாம் ஏற்கனவே படித்த சில பாடங்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

செய்தி 1) யானைக்கால் வியாதிக்காரனின் காலைப் போல செயற்கையாக வீங்கிப் பெருத்த அமெரிக்கப் பொருளாதாரம் ஊசி பட்ட பலூன் போல வெடித்துச் சிதறியதில் சில கம்பெனிகள் ’நட்டமடைந்தது’. அந்தக் கம்பெனிகளை நட்டத்தில் இருந்து காக்க அதிரடியாக களமிறங்கிய அமெரிக்க அரசு, ஜெனரல் வார்டில் இருந்து எமர்ஜென்ஸி வார்டுக்கு மாறி இருக்கும் முதலாளித்துவ நோயாளியை காப்பாற்ற 700 பில்லியன் டாலரை குளூக்கோஸாக இறக்கியிருக்கிறது. இந்தக் கம்பெனிகள் பெரும்பாலும் நிதிமூலதனம் ஊகவனிகம் போன்ற ஊரான் காசை உள்ளே விட்டுக் கொள்வதன் மூலம் முன்பு பெரிய அளவில் தேட்டை போட்ட கம்பெனிகள் தான்.

அப்படியானால் முன்பு சம்பாதித்த லாபம் இப்போ எங்கே போச்சு? யாரிடம் போச்சு? அந்த லாபமெல்லாம் அந்நிறுவனங்களின் தலைப்பீடங்களில் இருக்கும் ஓரிருவரின் சட்டைப்பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். இப்போது நட்டத்தில் இருந்து காப்பாற்ற வாரியிறைக்கப்படுவது – மக்கள் பணம்!

செய்தி 2)க்கு போகும் முன் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் – கஞ்சிக்கே வக்கில்லாத இல்லாத மக்கள் சைக்கிளில் பயணம் செய்து அல்லலுறுவதைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த ரத்தன் டாடா, அவர்கள் பாதுகாப்பாக பயனம் செய்ய வேண்டுமே என்கிற உயர்ந்த நோக்கில் ஜஸ்ட் ஒரே ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இந்த முடிவை கேட்டதும் இந்தியாவில் ஏழைகளின் ஒரே பங்காளனாக இருக்கும் காமரேட்டுகள் இன்னும் விவசாயத்தை நம்பி பிழைத்துக்கிடக்கும் சில முட்டாள் விவசாயிகளிடமிருந்து ஒரு ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி ரத்தன் டாடாவுக்கு தானமாகக் கொடுத்தார்கள்.

காமரேட்டுகளின் நல்ல உள்ளத்தையும் ரத்தன் டாடாவின் இளகிய மனதையும் புரிந்து கொள்ளாத அந்த முட்டாள் விவசாயிகள் பொங்கிய எழுந்து டாடாவின் பின்புறத்தில் எட்டி உதைத்ததில் மேற்கு வங்கத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு விட்டார். அப்படி தூக்கியெறியப்பட்டவர் நம் மாநிலத்தில் விழ மாட்டாரா என்று மற்ற மாநில முதல்வர்கள் இன்னும் அன்னாந்து பார்த்துக் கிடக்கிறார்கள்.

இப்போ செய்தி 2) அந்திரத்தில் வந்து தனது கனவுக் காரை – இல்லையில்லை – ஏழைகளின் கனவுக்காரை தயாரிக்க டாடா போட்டிருக்கும் ஒரு முக்கிய நிபந்தனை – அவர்கள் சிங்கூரில் கூடாரத்தைக் கலைத்த வகையில் ஏற்பட்ட நட்டத்தை ஆந்திர அரசு ஈடு கட்ட வேண்டும் என்பது – அதாவது மக்கள் பணம்!

இந்த இரண்டு செய்திகளின் மூலமும் நமக்கு முதலாளித்துவம் நடத்தும் பாடம் என்னவெனில் – லாபம் தனியுடைமை! நட்டம் பொதுவுடைமை!

இது குறித்து டெக்கான் க்ரோனிக்கலில் வெளியான செய்தி கீழே –

Nano in AP if Singur loss is paid by state
BY B. KRISHNA PRASAD

Tata Motors is ready to relocate its Nano project to Andhra Pradesh if the government pays for the loss that the company incurred in shifting out of Singur. Tata Motors officials put the figure at Rs 700 crore.
The Chief Minister, Dr Y.S. Rajasekhar Reddy, offered to compensate the loss “to some extent”, about Rs 300 crore.
“The issue of relocation cost got highlighted during the talks,” said a official in the industries department. “Though they had indicated this issue before their visit to the state, we did not anticipate that they were so serious about it.” The government offered cent per cent VAT exemption for the plant, which would work out to more than Rs 100 crore a year and even give land to ancillary units.
With the Tata delegation insisting on total compensation, a visibly disturbed Chief Minister asked his officers not to bother to stretch out for the project.
By Monday evening, Tata Motors officials went “out of contact” with officials of the Chief Minister Office. “The message is clear, they don’t want to talk at this juncture,” said a CMO official.
Earlier on Monday morning, the Tata Motors delegation visited the Vargal mandal in Medak district, about 50 km from the city, to inspect an alternative site. The government offered 600 acres immediately and another 650 acres after acquisition.

அக்டோபர் 7, 2008 பதிந்தவர் kaargipages | medias, politics | | 5 மறுமொழிகள்

அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..

”ச்சை.. சனியனுங்க.. இப்பத்தான் கரெண்ட நிப்பாட்டனுமா நிம்மதியா சாப்புடக்கூட உடமாட்றானுக”

”இருய்யா மெளுகு வத்தி கொளுத்தறேன்”

”பாத்துப்போடி… வழியிலே சேர் கெடக்குது”

”ஆமா.. இது பெரிய்ய அரமனை.. இருந்தாலும் தடவிக்கிட்டு தானே போவனும்?”

”கெட்ட கேட்டுக்கு அரமன சொகுசு கேக்குது பாரு”

“உன்ர வாய்க்கு ஒன்னும் கொரயில்லைய்யா.. இந்தா சீக்கிரமா தின்னு முடி. மெளுகு வத்தி வெளிச்சத்துக்கு பூச்சி வரும்”

”அடிப்போடி.. இந்த ரேசன் அரிசியத் திங்கரதும் பூச்சியத் திங்கரதும் ஒன்னுதான்”

”ஒனக்கெல்லாம் ரூவாய்க்கு கிலோ அரிசி போட்டா அல்லைல கொளுப்பு கட்டுது”

”குடுக்கும் போது கிலோ ரூவாய்க்கு குடுக்கறான்.. அடுத்த நா காலைல காக்கிலோவுக்கு ரெண்டு ரூவா கேக்கறான்.. போடி நீயும் ரூவா அரிசியும்”

”நீ உங்கரக்கு ஆதரிச்சா பேள்ரதுக்கு வழியென்னங்கர”

” உங்கச் சோறு போட்டவன் இருக்கவனெல்லா பேள வழி இருக்கவனான்னு பாத்தா போடறான்?”

“செரி செரி சோத்தத் தின்னு முடி.. நரகலப் பத்தி பேசற நேரத்தப் பாரு”

”மணி ஒம்போதாகுது.. பய்யனெங்கடி?”

”ஆறாம்மவங்கிட்டெ புக்கு வாங்கப் போறேன்னு ஆறு மணிக்கிப் போனவன்… சேக்காளிகளோட சேந்து எங்கியாவது நாயமடிச்சிட்டிருப்பான்”

”சின்னப் பாப்பாளுக்கிறுக்கர பொறுப்பு இந்த நாயிக்கில்லே பாரு.. இஸ்கூல்லேர்ந்து வந்தமா படிச்சமா பொட்டாடம் தூங்குனமான்னு இல்லாம தெருப்பொறுக்கிட்டு அலையறான்.. பண்னெண்டாவது படிக்கறமே மார்க்கில்லேன்னா அப்பன மாறி நாமளும் கூலிக்குத் தான் போகனுமேன்னு பயமாச்சுமிருக்கா அவனுக்கு”

“அட சும்மாருய்யா.. மார்க்கெடுத்தா மட்டும் நீயென்ன டாக்டருக்கா படிக்க வச்சிரப்போறே?”

“நீ தாண்டி அவன செல்லங்கொஞ்சிக் கெடுக்கர”

”வக்கில்லாதவனுக்கு வாயி மட்டும் ஏளு மயிலு நீளமாம்மா..”

”இப்புடிப் பேசியே அவன் வீணளிஞ்சிப் போயிட்டாண்டி.. இந்த வருசம் அவனுக்கு பீசு கட்ட எத்தினி செரமப் பட்டோம்? ஏதோ ராயப்பன் தெரிஞ்சவனாகப் போயி ரண்டு வட்டிக்கி கொடுத்தொதவினான்,, இனி அடுத்தாப்புல காலேஜில சேக்கோனும்னா எவங்கிட்டேடி போய் நிக்கறதுன்னு நானே கவலயில இருக்கேன்”

”சரி உடுய்யா.. அவஞ்சோட்டுப் பசங்களப் பாத்தியா.. ஒவ்வொன்னும் கலர் கலரா உடுத்துக்கிட்டு பட்டாம்பூச்சி மாறி சுத்திக்கிட்டு இருக்குதுக.. நமக்கிருக்க வக்குக்கு சாயம் போன சட்டையத்தான் வாங்கிக் குடுக்க முடியுது.. அவனுக்கும் ஆசயிருக்காதா? கிரிக்கெட்டாடப் போகோனுமின்னாலும் சொந்தமா மட்ட வாங்கிட்டு வரச் சொல்றாங்களாமா.. ஏதோ சேக்காளிகளோட பேசறது அவனுக்கு சந்தோசம். அதையுமா நாம கெடுக்கோனும்?”

“இப்புடியே உட்டா அவனும் நாளைக்கு என்னிய மாறி கம்பி கட்டத்தான் லாயக்காவாண்டி. இந்த நாயிப் பொழப்பு நம்ம தலக்கட்டோடயே போகட்டும். இன்னிக்கு நா கண்டிசனா பேசறது அவனுக்கு கஸ்டமாத்தா இருக்கும்.. ஆனா நாளைக்கு அவங்குடும்பம் கடைல அரிசி வாங்கிச் சாப்புடும் போது நெனச்சிப் பாத்துக்குவான்.. அவனாவது அவம்பையனுக்கு நல்ல துணி வாங்கிக் குடுக்கட்டுமே”

“எல்லாஞ்செரிதான்யா.. இதெல்லா அவனுக்குப் புரியுமா? நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிப் போடற.. அவனும் மூஞ்சியத் தூக்கிட்டு உங்காமத் திங்காம சுருண்டு படுத்துக்கறான்.. சின்னப் பய்யன்யா.. வளர வேண்டிய வயசு. மத்தவிங்க ஊட்டு நெலமையும் நம்மூட்டு நெலமையும் புரியவா போகுது? தீவாளி வருது.. எல்லாரும் இப்பவே புதுசு புதுசா எடுத்துப் போட்டுட்டு அலையுதுக.. நாம ஒரு வருசமாச்சும் நோம்பியன்னிக்கு புதுசு வாங்கிக் குடுத்துருக்கமா?”

“இதெல்லா அவங்காது படப் பேசிப்போடாத.. இதெல்லா கேட்டா அவனுக்கு இன்னுங்கொஞ்சம் தொக்காயிடும்.. உப்பக் கஸ்டப்பட்டா பின்னாடிக்கி நல்ல நெலமைக்கி வந்துருவாண்டி. ”

”ஆசையிருக்குது ஆன மேல போக.. வகையிருக்குது வக்கத்த நெலைலன்னு சொன்னா மாறி இருக்குது நீ பேசறது..”

” நீ வேனாப் பாருடி.. எந்தலைய அடமானமா வச்சாவது எம்பய்யன இஞ்சினீராக்கத்தாம் போறேன்”

“இஞ்சினீராமா இன்ஞ்னீரு.. இஞ்சி விக்க அனுப்புனா இப்புடி மஞ்சச் சோத்தத் திங்கரக்கு பதிலா வெள்ளச்சோறாச்சும் திங்கலாம்..அவனும் ஆசப்பட்டத தின்னு விருப்பப்பட்டத உடுத்திக்குவான்”

“உன்ர கரி நாக்க வச்சிட்டு சும்மா இருடி..”

“என்ர கரி நாக்கு கெடக்கட்டும் கெடயில.. நீ மொதல்ல தின்னு முடிக்கர வழியப் பாரு”

அக்டோபர் 1, 2008 பதிந்தவர் kaargipages | culture | | 1 மறுமொழி

ஒரு தேவதையின் மரணம்…!

போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை..  குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?

ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.

“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”

“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”

“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”

ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும்  ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“வீட்டுக்குப் போகலையா?”

“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”

“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”

“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”

“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”

“அதுக்கில்லே…”

“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”

“………..”

“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”

“அதெப்படி…..”

“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”

“நல்ல மார்க் வாங்கனும்”

“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”

“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”

எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..

“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”

“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”

“ம்…”

“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”

“ஆனா எப்படி…?”

“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”

“ச்சும்மா இருக்கேன்”

“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”

“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”

“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”

“ம்… சரி”

“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”

“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது

“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”

“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”

“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”

“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”

கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”

அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள்.  அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”

“போடி.. அது என் ஸ்டைல்”

“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”

“ம்ம்… சரி”

‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”

“ம்ம்.. சரி”

“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”

“எனக்கு தெரியலடி…”

“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”

“ம்ம்.. சரி”

எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.  ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..

ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..

“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“என்ன?”

“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”

“ஏன்?”

“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”

“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”

“அது சரியா வராதுடா..”

“ஏன்?”

“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”

நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..

முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.

கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.

“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.

“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..

“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”

“எங்கே?”

“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”

“எதுக்குடா?”

“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”

“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”

“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”

“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.

“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”

வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”

“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”

“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”

“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”

“சந்தோஷமா இருக்கா?”

“அதெப்படி நமக்குத் தெரியும்”

“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”

“இப்ப என்ன சொல்ல வர்றே”

“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”

“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”

“பொண்ணு?”

“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”

“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.

“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”

“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”

“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”

“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”

திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம்.  எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

” சரி நான் போறேன் “

“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”

“வேணாம் நான் போறேன்”

“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.

“இல்ல போறேன்”

“சரி.. போ….”

செப்டம்பர் 15, 2008 பதிந்தவர் kaargipages | culture, short story | , | 19 மறுமொழிகள்