கார்க்கியின் பார்வையில்

பரபக்கம்

கலைஞர் இப்போது ராமனைப் பார்த்து “பாலம் கட்ட நீ எந்தக் கல்லூரியில் பொரியியல் படித்தாய்?” என்று கேட்டாரே இந்தத் துணிவு வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்த வெறெந்த தலைவருக்காவது இல்லாமல் போனது தற்செயலானதல்ல. தமிழர்களின் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான நீலகேசியின் தலைவி நீலகேசி, வேதவாதம் பேசியவர்களைப் பார்த்துக் கேட்ட கேள்விகளை ஒப்பிட்டால் இது ஒன்றுமேயில்லை. அதில் அவள் வாதாடும் முறையே பரபக்கம் எனப்படுவது. இவ்வகையிலான வாத முறை வேறு பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகிறது.

பழைய மரபுகளைப் பேசிக்கொள்வது சும்மா “அந்தக்காலத்துல நாங்கெல்லாம் எப்படியிருந்தோம் தெரியுமா?” என்று வெட்டியாய் பழம்பெருமை பேசி அரட்டையடித்து பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல. மாறாக அந்த மேலான மரபுகளை இன்றைய நவீன யுகத்து இளைஞனுக்கு நினைவூட்டி மீண்டும் அந்த பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை உயர்த்திப் பிடிக்கவே. இந்த எதிர்ப்பரசியல் என்பது ஏதோ இன்றைக்கு புதிதாய் தோன்றியதென்றும்,  இது பிரிவினைவாதிகளின் சதியென்பது போலும் பார்ப்பன ஊடகங்கள் பொய்யைப் பரப்பி வரும் வேளையில், இந்த நினைவூட்டல்கள் அவசியமாகிறது.

பார்ப்பன மரபு என்பது வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய உள்ளூர் மரபுகளைத் திரித்து, அதனை ஒரு முகமூடியாய்ப் போட்டுக் கொண்டு வரும் தன்மையுடையது. இது இன்றல்ல.. நீலகேசியின் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. சாங்கியம் என்பது வேத எதிர்ப்பு மரபு. அதனுள் ஊடுருவிய பார்ப்பனர்கள் அதற்குள் “புருஷன்” என்னும் அத்துமனைத் தினித்து சாங்கியத்தை கலப்படமயமாக்கி அதனை எடுத்துக் கொண்டு நீலகேசியின் முன் வருகிறார்கள். பெண்களை இழிவு படுத்திய பார்ப்பன மரபுக்கு செருப்படி கொடுத்தது ஒரு தமிழ்ப் பெண்.. சாங்கியப் படுதாவுக்குள் பதுங்கி வரும் பார்ப்பன மரபினனைப் பார்த்து,

“தன்னைப் படைப்பின் தான்முன் இன்மையால் இல்லை
பின்னைப் படைக்கின் படைக்கப் படுவதின்
முன்னைப் படைப்பென் முடிவில்லை, மூடனே
நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்”

என்கிறாள். சாங்கியத்துக்குள் புருஷனான ஆத்துமன் தன்னைத் தானே படைத்துக்கொள்வான் என்கிறாயே.. அப்படிப் படைத்துக் கொள்ளும் முன்
அவன் இல்லாதவனாகிறான். இல்லை.. பின்னால் தான் படைத்தான் என்றால், அவனுக்கு முன் எவரோ இருந்தார் என்றாகிறது. அப்படியானால் அவனைப் ( முன்னால் இருந்தவனைப்) படைத்தது யார்? இப்படி லூசுத்தனமாய் பேசுகிறாயே உன்னைப் படைத்தது எந்தக் கிறுக்கனோ? என்று  சாதாரணமாக எள்ளி நகையாடுகிறாள்.

இப்போது நம்மிடம், வேதங்களெல்லாம் ஆதியந்தமற்றது என்றெல்லாம் பசப்புகிறார்களல்லவா? இதே சரடை நீலகேசியிடமும் விட்டுப் பார்த்துள்ளனர்.. அதற்கு அவள் சொன்ன பதில் பெரியார் சொன்ன பதில்களைக் காட்டிலும் காரமானது.. ( விரிவாக இந்த சுட்டியில் இருக்கிறது – http://www.jainworld.com/JWTamil/jainworld/neelakesi/urai.asp?num=9 ) அதிலிருந்து சில பத்திகள் மட்டும் இங்கே,

“தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்கமற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு.

மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறையறிவுக்குப்
பொருந்தாதவை. இந்திரனும் சூயனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்கி஡஢வரைப் பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல் ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம்விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழியாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் அவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. இவை நடவாச் செயல் மட்டுமல்ல; நடக்க முடியாத செயல்கள். அறிவுப்பகுதியில் (ஞான காண்டத்தில்)  எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வினைப்பகுதியில் (கர்ம காண்டத்தில்) வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு யானை பா஢சு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர்சனகா஢டம் தாம் வேள்வியில் முனைவது
உண்மையறியும் அவாவாலன்று; காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில்
மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளா஢னும் கீழ்நிலையடைகிறது வேளாண் செல்வன் ஒருவன், தன் புதல்வருள்
ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செயல்வனான குருக்கள், மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக  உங்கள் சமயநூல்களே கூறுகின்றன.

உங்கள் மறை நூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம் ஆகியவற்றை ஆதா஢க்கின்றன. செளத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சா஢க்கையினால் பெளண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில் கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக்கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்குவதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக் கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையும் ண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பலபொருள்படக் கூறப்பட்டுள்ளன.பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம் தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற்படுகின்றன. எடுத்துக்காட்டாக ‘அஜேநயஷ்டவ்யம்’ என் தொடா஢ல் அஜம் என்பதனை ஆடு என்று ஒரு சாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொரு சாராரும் பொருள்கொள்ளும் படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபா஢சரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபா஢சரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிருகஸ்பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக ‘மாவிலங்கு’ செய்யும்படி கூறுவது கேட்டு, ஊனுண்ணும்; விருப்புடன் வேள்விக்கு வந்த ‘தேவர்கள்’ வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதா஢க்க, இருவா஢டையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச்சான்றுமீறித் தேவர்புறம் தீர்ப்பளித்து நரகடைந்தான்.

இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் ‘மா அ஡஢சி’ முதலிய படைப்புகளாலேயே முனிவர்களால் தொடக்கத்தில்
செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர்
கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் இவ்வளவு என்பது வரையறுக்கக் கூடியதாயிருத்தலும் அதை நீங்கள் வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக்கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம்.

நீலகேசி வேதமரபினரை மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் நிலவிய பூத வாதம், வைசேடிக வாதம், சாங்கியவாதம், ஆசீவக வாதம், புத்த வாதம், மொக்கல வாதம் என்று சகலத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாள். ஒவ்வொரு மரபினுள்ளும் இருக்கும் உள்முரண்பாடுகளை மோத விட்டுப் பரிகசிக்கிறாள்.

பரபக்கம் என்னும் விவாதமுறை நீலகேசியில் மட்டுமல்ல, சங்ககால நூலான குண்டலகேசியிலும், புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றிலும்
கூட பரவலாகக் காணக் கிடைக்கிறது.

பண்டைய தமிழன் புனிதம் என்று போதிக்கப்பட்ட எதையும் விவாதிக்காமல், கேள்விக்குட்படுத்தாமல் விட்டதில்லை. இன்றைக்கோ சாதாரணமான ஒரு கேள்விக்கே “மனம் புன்பட்டு விட்டது” என்று புலம்புகிறது இந்துத்துவ வட்டாரம். பார்ப்புகளின் “மனம்” புண்பட்டதற்கு ஈடாக சூத்திரனின் “தலை” கேட்கிறது வேதாந்தக் குரங்கு!

சங்ககாலம் என்றில்லை.. இடையே பக்தி வெள்ளம் கரைபுரண்டோ டிய காலத்தில் மக்கள் மொழியில் எக்காளத்தோடும், ஆத்திரத்தோடும் மீண்டு வந்தது அதே மரபு சித்தர்கள் உருவில்! காலம் பார்ப்பனியத்தை கெட்டிப்படுத்தி விட்டதற்கு இணங்க சித்தர்களின் கோபமும் கொழுந்து விட்டு எரிகிறது.. “இரும்பைப் போல் நீ இறுகிப் போனாலும் சரி; உன்னை உருக்காமல் விட்டேனா பார்” என்று தொடை தட்டுகிறான் சித்தன்!

சித்த மரபு பற்றி வேறு சமயத்தில்…..
 

ஒக்ரோபர் 20, 2007 Posted by | culture | | 1 பின்னூட்டம்

   

%d bloggers like this: