கார்க்கியின் பார்வையில்

பொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…!

முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொண்டு வரும் தோழர் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தமான தகவல்களை முழுமையாக இல்லாவிட்டாலும் துண்டு துக்கடாவாக அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தும் எதிர்விணையாற்றாமல் வெறும் பார்வையாளனாகவே இருந்து விட்ட தடித்தனத்திற்காக சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்தை பாவிப்பது சமீப வருடங்களில் மிகவும் குறைந்து விட்டது என்பதை இதற்கான சமாதானமாக அல்லாமல் ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த 15ம் தேதியன்று கீற்று தளத்தில் தோழர் மினர்வா எழுதிய பதிவையும் அதைத் தொடர்ந்து தோழர் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவையும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய பின் வாசித்த போது தான் ஒரு தொகுப்பாக இவ்விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. விவகாரம் இன்னதென்று மறுபடியும் ஒருமுறை இங்கே விலாவாரியாக விவரித்து எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை. அவை இணையம் முழுக்க அனைவரும் வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக தோழர் தமிழச்சியின் பதிவுகளிலும் கீற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகளை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இந்த விஷயத்தைப் பொருத்தளவில் நகரப் பேருந்துகளில் புட்டங்களைத் தேடியலையும் ஒரு நாலாந்தர பொறுக்கியைப் போல் நடந்து கொண்டிருக்கும் சோபாசக்தியை விட அவனை ஆதரித்து இணையத்தில் பேசி வரும் பெண்ணுரிமை_பின்னவீனத்துவ_பெரியாரிய புடுங்கிகள் தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்கள்.

மனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்ற ஆசான்களை இழிவு படுத்திக் கவிதை எழுதிய கவிதாயினியிடம் கவியின் பொருளை விளக்கச் சொல்லிக் கோரியதையே பெண்ணுரிமைக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய ஆபத்தாக ஊதிப் பெருக்கி இணையத்தில் சாமியாடிய இந்த பீ.ந வாதிகளும் இன்ஸ்டன்ட் பெண்ணுரிமைப் போராளிகளும் இன்று சோபாசக்தி அவுத்துப் போட்ட கிழிந்த ஜட்டியில் முகம் பொத்தி நிற்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.

இலக்கியம், பெண்ணுரிமை, பின்னவீனம் என்று பல்வேறு முகம் காட்டி வந்தாலும் தனது வயிற்றுப் பிழைப்புக்கு சோபாசக்தி எனப்படும் இந்தப் பொறுக்கி நாய் புலியெதிர்ப்பையே கைக் கொண்டிருந்தது. கை நிறைய உழைக்காமல் கிடைத்த காசு; பெரும் அரசாங்கங்களின் உளவு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு; அது கொடுக்கும் திமிரும் கொழுப்பும்; சதா நேரமும் குடி. இதெல்லாம் சேர்ந்து அவரது இச்சைகளுக்கு எவளையும் வளைத்து விடலாம் என்கிற மைனர் மனோபாவத்தைக் கொடுத்திருக்கலாம்.

மைனர்களின் எத்து வேலைகளுக்கும் சித்து விளையாட்டுகளுக்கும் மயங்கி விட தோழர் ஒன்றும் உலகின் அழகிய முதல் பெண்ணில்லையே. நெருப்பென்று அறியாமல் நெருங்கிய மைனரின் பிடறியில் மிதித்துத் துரத்தியடித்துள்ளார் தோழர் தமிழச்சி. பிரான்சின் இரயில்வே நிலையம் அருகே நடந்தேறிய அந்தக் காட்சிகளைப் பெரியார் உயிரோடிருந்து கண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தோழர் தமிழச்சி மேற்படி மைனரும் ஈழத்துப் பிள்ளைப் பெருந்தகையுமான சோபாசக்தியின் இந்த இழிசெயலை பகிரங்கமாக அம்பலப்படுத்தி எழுதிய பின்னும் அவனோடு ஒரு நல்லுறவைப் பேணுவதில் இங்குள்ள சில ‘உலகின் அழகிய முதல் கவிதாயினிகளும்’ அந்தோனியாரின் பக்தர்களும் எந்த வெட்கமும் அடையவில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக பெரியாரிஸ்டு வேடம் புனைந்து இணையவெளிகளில் மிதந்து கொண்டிருக்கும் சுகுணா திவாகர் பிள்ளைவாள் கூட சோபாசக்தி பிள்ளைவாளின் இந்தச் செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்திருப்பதை என்னவென்று சொல்லலாம்? ‘சாதிபுத்தி’ என்று சொல்லலாமா?

சுகுணா, உங்கள் மேல் இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை மீதமிருக்கிறது. பார்ப்பனியவாதிகளோடு இணையத்தில் நீங்கள் சமரசமின்றி மோதிய அந்த நாட்கள் நினைவிலாடுகிறது. ஆனால் இன்று நீங்கள் காக்கும் இந்த மௌனம் மீதமிருக்கும் அந்த மரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து வருகிறது. இதே ‘சாதிபுத்தி’ எனும் குற்றச்சாட்டை வளர்மதி உங்கள் மேல் வைத்தபோது அவர் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றோ வளர்மதியின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதற்கான சாத்தியங்களை உங்கள் மௌனம் மெய்ப்பிக்கிறது. உங்கள் மேல் இங்கே நான் வைத்திருக்கும் கடுமையான வார்த்தைகளை மிகுந்த வருத்தத்தோடே எழுதுகிறேன்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா? பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா? தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து மலப்புழுக்கள் ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா?

இவர்கள் போற்றும் பெண்ணுரிமை என்பது ஷக்கீலா படம் பார்க்கும் வாலிப வயோதிப அன்பர்கள் அது போன்ற திரைப்படங்களுக்குத் தடையேற்படும் போது கோரும் உரிமைக்கு ஒப்பானது என்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளனர். இந்த வாலிப வயோதிப அன்பர்கள் பட்டியலில் அந்தோனிசாமி மார்க்ஸ் போன்ற ரெண்டு பொண்டாட்டிக்கார மைணர்கள் இருப்பது கூட ஆச்சர்யமில்லை; சுகுணா திவாகர் போன்ற அக்மார்க் முத்திரை பெற்ற பெரியாரிஸ்டுகளும் இருப்பது தான் எமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பொதுவெளியில் செயல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சோபா எழுப்பியிருக்கும் இந்தக் கீழ்தரமான குற்றச்சாட்டின் பின்னேயுள்ள மைணர் மனோபாவத்தைக் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கணித விஞ்ஞானி ரோசாவசந்த், சோபாவின் வக்கிர வார்த்தைகள் ‘நேர்மையுடனும் கம்பீரத்துடனும்’ இருக்கிறது என்று சான்றளித்துள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் சாட்சியமும் இல்லாத நிலையிலும், இந்தக் குற்றச்சாட்டை அதில் சம்பந்தப்பட்ட தோழர் தமிழச்சியே மறுத்துள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாகவே சோபாவின் அத்துமீறலைப் பற்றியும் செருப்பால் அடித்தது பற்றியும் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ள நிலையிலும் இப்படி ஆபாசமாகப் பேசுபவனை என்னவென்று அழைக்கலாம்? சுரேஷ் கண்ணனைக் கேட்டால் ‘மலப்புழு’ என்றழைக்கலாம் என்று சொல்வாராயிருக்கும்.

இது தான் இவர்களின் அறம். அதாவது செலக்டிவ் அறம். மேட்டுக்குடி சிந்தனைகள் கொண்ட சீமாட்டிகளுக்கும் அலுக்கோசுகளுக்கும் ப்ரீசெக்ஸ் பேசும் பெண்களுக்கும் ஆதரவான அறம். பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது. தமது பாலியல் இச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் இசைவான பெண்களின் ‘உரிமை’ என்று பேசும் இவர்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணுடலை ஒரு நுகர்வுப் பண்டமாக அனுபவிக்கப் போட்டுக் கொள்ளும் ஒரு தத்துவ முகமூடி தான் பாலியல் விடுதலை, பின்னவீனம், இத்யாதி இத்யாதி எல்லாம்..

இக்ஸா அரங்கின் நாயகியான கவிதாயினி போன்றவர்கள் இவர்களுடைய உலகின் காபரே தேவதைகள். அந்த ஆபாச ஆட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் இவர்கள் என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்கள்? இன்று அதே கும்பலில் ஒரு பொறுக்கிப் பயல் போகிற போக்கில் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் புளுகியதைக் கண்டும் காணாமல் போவது தான் இவர்களின் பின்னவீனத்துவ அறம். ப்ரான்ஸ் தேசத்துப் பொறுக்கி தோழர் தமிழச்சி குறித்து சொன்னது போல இவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து எவராது பேசியிருந்தால் இவர்கள் அவனையும் ஒரு மனிதனாக மதித்து பேட்டி கண்டு வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. பாலியல் விடுதலை என்பதெல்லாம் ஊரார் வீட்டுப் பெண்களுக்கு மட்டுமா அல்லது இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் தானா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தி விடலாம்.

தோழர் தமிழச்சியின் எதிர்விணை – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

தோழர் மினர்வாவின் பதிவு – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

|| கார்க்கி ||

பிப்ரவரி 21, 2011 Posted by | Alppaigal, சாதி வெறி, பதிவர் வட்டம், போலி கருத்துரிமை | , | 9 பின்னூட்டங்கள்

எந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்?

நேற்றுத்தான் எனக்கு எந்திரனை தரிசிப்பதற்கான பெரும் பேறு வாய்க்கப்பெற்றது. நல்ல பிரிண்ட். நன்றி மலேசியா.

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் – ரஜினியின் ரசிகப்பெருமக்களே, உங்களோடு மல்லுக்கட்டுவது இப்பதிவின் நோக்கம் அல்ல அல்ல அல்லவே அல்ல. ஏற்கனவே இப்படத்தின் வியாபார ஏகபோகத்தனத்தை விமர்சித்தும், இப்படத்தை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதன் பின்னுள்ள வக்கிரம் குறித்தும், ரஜினி என்கிற நமுத்துப் போன பட்டாசை விமர்சித்தும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றுள் உங்களுக்காக நான் பரிந்துரைப்பது வினவு கட்டுரைகளை. இன்னொரு பக்கம் ரஜினியின் ரசிகர்களால் படத்தின் இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வெளியேறி – “தமிழேன்ண்டா…” பாணி விமர்சனங்களும் வலைப்பூக்களில் நிறையவே இறைந்து கிடக்கிறது. எனவே அந்த எல்லைக்குள் நான் நுழையவேயில்லை. அதற்கு வெளியே இந்தத் திரைப்படம் குறித்து சொல்ல எனக்குச் சில விடயங்கள் உள்ளன. எனினும், எந்திரனை முன்வைத்து எனது உரையாடல் இருக்கப்போவதால், படத்தைப் பற்றிய எனது சுருக்கமான விமர்சனத்தை மட்டுமே வைக்கிறேன்.

நீங்கள் இப்போது கண்களை மூடிக் கொண்டு தமிழ்த் திரைப்படத்தின் கருப்பு வெள்ளை காலத்துக்குச் செல்லுங்கள். விட்டலாச்சார்யாவின் ஒரு திரைப்படம். பெயர்….? ‘பரஞ்சோதியும் பாசக்கார பூதமும்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்… சுந்தராபுரி என்கிற ஒரு தேசத்தில் பரஞ்சோதி என்கிற ஒரு நல்லவன் இருக்கிறான். அவன் தான் நம்ம ஹீரோ. அவனிடம் ஒரு பூதம் இருக்கிறது. அது ஒரு நல்ல பூதம். பூத உலகில் இருக்கும் மற்ற குட்டி பூதங்களையெல்லாம் விட சிறந்த பல சக்திகளைக் கொண்ட பூதம். அந்தக் கதையில் வில்லன் ஒரு கெட்ட மந்திரவாதி. அவனிடம் இருக்கும் பூதங்கள் சோப்ளாங்கி ரக பூதங்கள். அவன் எப்படியாவது ஹீரோவிடம் இருக்கும் நல்ல பூதத்தைக் கவர்ந்து விட முயல்கிறான். அதன் வல்லமையை வைத்து தானே அந்த தேசத்தின் அரசனாகி விட நினைக்கிறான். பரஞ்சோதியின் பூதத்தை எப்படியோ ஏமாற்றிக் கவர்ந்து விடும் வில்லன், நாட்டில் பல அக்கிரமங்களைச் செய்யத் துவங்குகிறான். பரஞ்சோதியும் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் ஒரு குட்டித் தீவில் ஒரு தங்கக் கூண்டில் வசிக்கும் கிளியின் உடலில் ஒளிந்திருக்கும் கெட்ட மந்திரவாதியின் உயிரை எடுத்து பாசக்கார பூதத்தையும் நாட்டையும் காப்பாற்றுகிறான். அவன் அந்த முயற்சியின் இருக்கும் போது பரஞ்சோதியின் காதலி கெட்ட மந்திரவாதியின் கவனத்தை தன்பால் ஈர்த்து வைத்திருக்க ‘என் மணாளா…… என் கண்ணாளா…ஆஆஆஆ…” என்று ஒரு பாடலைப் பாடி பரதநாட்டியம் ஆடுகிறார். 

நீங்கள் இப்போது ஒரு முப்பதாண்டுகள் முன்னேறி வருகிறீர்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் வருடம். ஈஸ்ட்மென் கலரில் ஒரு ஏவிஎம் திரைப்படம். பெயர்…..? ‘தாயே தெய்வமே’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கதையில் ஹீரோ ஜெய்சங்கர் ஒரு யானை வளர்க்கிறார். அது பலம் பொருந்தியது. அது நல்ல பல காரியங்களைச் செய்கிறது. இதில் வில்லனாக வரும் அசோகன், அந்த யானையை எப்படியாவது ஜெய்சங்கரிடம் இருந்து கவர்ந்து அதை ஸ்மக்லிங் (கோல்டு பிஸ்கோத்து) செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். நல்லவிதமாகக் கேட்டுப் பார்த்து தராத ஜெய்சங்கரிடம் இருந்து அந்த யானையை எப்படியோ கவர்ந்து விடும் வில்லன், அதை கெட்ட காரியங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். ஜெய்சங்கர் சும்மா இருப்பாரா…? வட்டமாக கவ்பாய் தொப்பி மாட்டிக் கொண்டு, முதுகுக்குப் பின்னே இரட்டைக் குழல் துப்பாக்கியும், இடையில் இரண்டு
ரிவால்வரும் பொருத்திய பெல்டையும், மார்புக்குக் குறுக்கே தோட்டா பெல்ட்டையும் வரிந்து கட்டிக் கொண்டு வில்லனைத் தேடி போகிறார். அவருக்க்கு பக்க வாத்தியமாக டைட் பேண்ட் மாட்டிய ஹீரோயினும் பாங்கோ டிரம்ஸுடன் எம்.எஸ்.விஸ்வநாதனும் கூடவே வேறு குதிரைகளில் போகிறார்கள். எம்.எஸ்.வி டிரம்ஸ் வாசிக்க, ஹீரோயின் வில்லன் முன் ஒரு கிளப் டேன்ஸ் ஆடும் சைக்கிள் கேப்பில் யானையை மீட்டுவிடும் ஜெய்சங்கர், வில்லனைக் கொன்று யானையைத் திருத்துகிறார். சுபம்.

போதும் போதும்.. கண்ணைத் திறந்து தொலையுங்கள்.

இப்போது இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு. எந்திரன் விமர்சனம் கீழே –

பரஞ்சோதி = ஜெய்சங்கர் = வசீகரன் (ரஜினி)
பாசக்கார பூதம் = பாசக்கார யானை = பாசக்கார எந்திரன் (சிட்டி)
கெட்ட மந்திரவாதி = கெட்ட அசோகன் = கெட்ட விஞ்ஞானி (வில்லன்)
ஹீரோயின் = ஹீரோயின் = ஹீரோயின் (ஐசுவரியா -அலைஸ் – ஒலக அழகி)
மணாளனே…. = கிளப் டான்ஸ் = அரிமா அரிமா
ஊஊஊ… = டிடும் டடும் குடும் (MSV) = ஷக் திக் ஷக் ஹூக் ஹிக் ஹாஆஆங்ங் (AR.Rahman)
மாடர்ன் தியேட்டர்ஸ் = ஏ.வி.எம் = கலாநிதி மாறன்
விட்டலாச்சார்யா = ஆர்.சுந்தரம் = ஷங்கர்

எந்திரன் விமர்சனம் முற்றிற்று.

வேற எந்த வெங்காயமும் என் கண்களுக்குப் புலப்படாமல் போனதற்கு என் கண்களின் கோளாறே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

இந்தத் திரைக்காவியத்தை தமிழ் திரைப்படங்களின் உச்சம் என்றும், ஹாலிவுட்டுக்கே விடுக்கப்பட்ட சவால் என்றும் எழுதப்படும் கட்டுரைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. பொதுவில் சாதாரண இரசிகர்களின் கண்ணோட்டமும் அப்படியே இருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு. முதலில் நவீனம், முன்னேற்றம், வளர்ச்சி என்பதை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் இருக்கும் கோளாரு தான் இத்திரைப்படத்தின் தொழில் நேர்த்தி நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் மயக்கத்தின் காரணம். கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை – நாம் இந்த நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொஞ்சம் அறுத்துப் பார்த்து விட்டு திரும்ப எந்திரனுக்கு வருவோம்.

இந்தியாவில் எதில் நவீனம் இல்லை? எல்லாமே நவீனம் தானே…. விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போமே. நிலத்தை உழ டிராக்டர். களை புடுங்க மிஷின். கதிர் அறுக்க மிஷின். கதிர் அடிக்க மிஷின். தென்னை மரம் ஏறக்கூட மிஷின் வந்து விட்டதாம். போக்குவரத்து வாகனங்கள் என்று பார்த்தால்… அலுங்காமல் குலுங்காமல் சாலையைத் தழுவிக் கொண்டே ஓடும் வோல்வோ பஸ்கள் வந்தாயிற்று, நெடுஞ்சாலைகளைக் கிழித்துப் பறக்கும் ஹார்லி டேவிட்சன் இருக்கிறது, ஆவ்டி கார்கள், பி.எம்.டபிள்யூ கார்கள்… சரி நம்ம இராணுவத்தைப் பார்ப்போமே.. ஒலியை விட வேகமாய் பறக்கும் நூற்றுக்கணக்கான சுகோய் Su-30 MKI ரக போர் விமானங்கள், ஒலியை விட வேகமாய் பறந்து தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், தாக்கி விட்டு ஒளிந்து கொள்ளும் விசேடமான டாங்கிகள், அடுத்த தலைமுறைக்கான யுத்த தளவாடங்கள்…. இன்னும் கணினிகள், மூன்றாம் தலைமுறை அலைவரிசை
சேவைகள், செல்போன்கள், ஜட்டிகள், பனியன்கள்..

இதெல்லாம் நவீனமோ, வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லை என்கிறேன்..

‘அடப் போங்க சார்… இத்தினி இருந்தும்… நீங்க என்னடான்னா இன்னும் பழைய பல்லவியையே பாடறீங்களே..’ என்கிறீர்களா? ஒரே ஒரு கேள்வி. இத்தனை ஆள் அம்பு யானை சேணையெல்லாம் இருக்கே…. அப்புறம் ஏன் பாகிஸ்தான் லொள்ளு பண்ணும் போது திருப்பி அடிக்க முடியாம அமெரிக்கா கிட்ட ஓடுறாங்க? புள்ளியியல் ரீதியில் பார்த்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு போர் என்று வந்தால், அது ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விடுமாம். இந்தியாவின் எண்ணிக்கை பலம் அப்படி. ஆனா முடியலையே… ஏன்? நீங்க என்பதுகளில் வரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன் ஸ்டைலாக ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து பைப் புகைத்துக் கொண்டிருப்பான். அவன் அடியாட்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் பாடிபில்டர்களாக இருப்பார்கள். பயில்வான் தான்.. வஸ்தாது தான்… எல்லாம் தெரியும் தான்… ஆனா சுயமா அடிக்க முடியாதே…. அது தான் இந்தியா.

ஆக, கருவிகளில் வரும் மாற்றங்களைக் கொண்டு மட்டும் நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளவிடுதாக இருந்தால் இந்தியா வஸ்தாது தான் – எந்திரன் ஹாலிவுட்டுக்கு
சவால் தான். ஆனால், அந்த மாற்றத்தை எந்தவகையில் பயன்படுத்துகிறோம், அது நம் சிந்தனையில் எவ்வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கருவிகளிலான (தொழில்நுட்பம்) மாற்றம் வாழ்நிலையில் எவ்வாறான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் தான் நமக்கு முழு சித்திரமும் கிடைக்கும். கணினிகளை ஜோதிடம் பார்க்கவும், வேறு ஒரு நாட்டுக்கு கணக்கெழுதித் தரவும் மட்டும் பயன்படுத்தி விட்டு என் கிட்டயும் கம்ப்யூட்டர் இருக்கு அதனால நானும் ரவுடி தான் என்றால் என்ன அர்த்தம்? அப்படித்தான் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

ஒரு நவீன ஹாலிவுட் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களும் எந்திரனிலும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்ப்போம்.
2004ம் ஆண்டு வெளியான ஐ.ரோபாட் மற்றும் 2009ம் ஆண்டு வெளியான சர்ரோகேட்ஸ். இரண்டிலும் மனிதனுக்கும் இயந்திரப் பயன்பாட்டிற்கும் இடையில் எழும் முரண்பாட்டை
பிரதானமாய்க் கையாளுகிறார்கள். மனிதனுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்படும் இயந்திரங்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்கும் திறனையும் பெற்று ஆதிக்க நிலையை அடைகிறது.
இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் மனித வேட்கைக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே நிகழும் முரண்பாட்டைக் காணலாம். இவ்விரு திரைப்படங்களும்
கூட அமெரிக்க மசாலாத்தனம் கொண்ட வணிகக் குப்பைகள் தான். அதிலும், அவர்கள் குறிவைக்கும் வணிக இலக்கு என்பது எந்நேரமும் அச்சத்திலிருக்கும் சராசரி அமெரிக்கர்களின் உளவியல்.

அமெரிக்கர்களின் இந்த அச்சத்தின் வெளிப்பாடுகளை அவர்களது வெகுசன வணிக சினிமாக்களில் காணலாம். ஒரு பல்லி திடீர் என்று பெரிதாகி ஊருக்குள் புகுந்து விடுவது (கோட்ஸில்லா) , ஒரு பழங்காலப் பிராணி திடீரென்று உயிர்பெற்று ஊருக்குள் புகுந்து விடுவது (ஜுராசிக் பார்க்).. அயல்கிரகத்து மனிதர்கள், வினோதமான பூச்சிகள், வினோதமான கடல் உயிரினங்கள்… என்று அம்புலிமாமா தரத்திலான கற்பனையில் கொஞ்சம் தொழில்நுட்பத்தைக் கலந்தால் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக் பஸ்ட்டர் தயார். இந்த வணிக சினிமா சூத்திரத்தினுள்ளும் கூட அவர்கள் தமது மக்கள் வாழ்வின் மேல் கொண்டிருக்கும் அச்சத்தையே அச்சாரமாகக் கொண்டு சிந்திக்கிறார்கள். ஆனால் எந்திரன் ஒரு சராசரி இந்தியனின் பாமரத்தனமான கற்பனையளவுக்குக் கூட – அதாவது ஒரு கந்தசாமியின் அளவுக்குக் கூட – கதைக்களனுக்காக மெனக்கெடவில்லை. அப்படியே விட்டலாச்சார்யாவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கொண்டு வந்துள்ளார்கள்.

கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் கோல்டு பிளேக் கிங்ஸ் பாக்கெட்டினுள் துண்டு பீடியை வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் – அதன் வெள்ளித்திரை வடிவம் தான் எந்திரன்.

ஒரு டெரா பைட் வேகமும் ஒரு ஸெட்டா பைட் நினைவுத் திறனும் கொண்ட எந்திரன் என்ன செய்கிறான்? மருதாணி வைக்கிறான். ஸ்டைலாக நடந்து தன் இடுப்பில் கைவைக்கிறான். நாயகியைக் காப்பாற்ற பொறுக்கிகளின் மூஞ்சியில் கை வைக்கிறான். பாட்டுப்பாடி பரதநாட்டியம் ஆடுகிறான். கருநாடக சங்கீதம் பாடுகிறான். மருத்துவச்சி வேலை செய்கிறான். மொத்தத்தில் முதல் பாதியில் எந்திரன் மயிலாப்பூருக்கும் நங்கநல்லூருக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறான். இரண்டாவது பாதியில் நிறைய பேரைக் கொல்கிறான், ஹீரோவின் டாவு மேலேயே கண் வைக்கிறான். இந்த ரெண்டாவது காரணம் ஒன்று போதாதா? ஒரு மருவை ஒட்டிக் கொண்டு வில்லனின் கோட்டையில் புகும் ஹீரோ, நாயகியை வில்லன் முன் டான்ஸ் ஆட வைத்து அந்த கேப்பில் ஜெயித்து விடுகிறான்.

இது தான் ஹாலிவுட் தர கற்பனையா? இதே இருநூற்றம்பது கோடியைத் தூக்கி இராம நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிட அருமையான ஒரு படத்தை எடுத்திருப்பார்.

எனக்கு ஹாலிவுட் திரைப்படமான அவதார் நினைவுக்கு வந்தது. அதில் தொழில்நுட்பத்தின் மேண்மைக்கும் அதன் உருவாக்க நேர்த்திக்கும் கிடைத்த பாராட்டு என்பது அது எப்படி எதன் மேல் கையாளப்பட்டது என்பதைக் கொண்டே கிடைத்தது. அது ஒரு அந்நிய தேச திரைப்படம் தான். ஒரு அமெரிக்க வெள்ளையரின் கற்பனை தான். ஆனாலும் கூட அது நம்மிடம் ஏதோவொன்றைச் சொன்னது. நமது சமகாலத்தின் நிகழ்வுகளின் மீதான நமது கோபத்தை அது மீட்டியது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் தங்களை அந்த கிராபிக்ஸ் பொம்மைகளிடம் கண்டார்கள். இன்காக்கள், மாயன்கள், ஆப்ரிக்கக் கருப்பர்கள் தொடங்கி இன்றைய கோண்டுக்கள் வரையிலான பூர்வகுடி மக்களை பண்டோரா கிரகத்து மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவதாரின் வடிவம் அதன் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு நின்றது – துருத்திக் கொண்டிருக்கவில்லை.

நம்மிடமும் கணினிகள் இருக்கிறது தான். அது கணினியின் வேலையைச் செய்யவில்லை – கிளியின் வேலையைச் செய்கிறது

அன்றைக்கு ஆர்.எஸ் மனோகரிடம் தொழில் நுட்பம் இருந்தது. எம்.ஆர்.ராதாவிடம் அது இல்லை – அதைவிட ஆயிரம் மடங்கு வீரியமான நவீனமான சிந்தனை இருந்தது. இன்று ஆர்.எஸ் மனோகராக ஷங்கர் இருக்கிறார்.. ஆனால் ஒரு எம்.ஆர்.ராதா இல்லை. அப்படி ஒருவர் தோன்றுவதற்கான வாய்ப்புகளை சன் குழுமத்தின் வியாபார ஏகபோகம் ஏறத்தாழ ஒழித்துக் கட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

– to be contd….

ஒக்ரோபர் 8, 2010 Posted by | Alppaigal, எந்திரன், ஏ.ஆர்.ரஹ்மான், பதிவர் வட்டம், ரஜினி, ரஜினி காந்த், வடிவேலு, விவேக், medias | , | 21 பின்னூட்டங்கள்

செயலின்மையிலிருந்து செயலுக்கு…

நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…

திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…

உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது

மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….

இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….

நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…

அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..

ஜூலை 1, 2010 Posted by | Alppaigal, கவிதை, போலி கருத்துரிமை, culture, facist, politics | , , , | 2 பின்னூட்டங்கள்

இராவணன் : இராமன் ஜெயித்த கதை..!

ஒரு கலைப் படைப்பு என்பது – கவிதையோ, ஓவியமோ, கதையோ, சினிமாவோ – தன்னுள் பல்வேறு அடுக்களைக் கொண்டதாய் (layers) உள்ளது. வெவ்வேறு அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டு பார்வையாளன் முன் ஒரு முழுமையான சித்திரமாய் வைக்கப்படுகிறது. அந்தப் படைப்பு எந்த வர்க்கத்திடம் எந்த சேதியைச் சொல்கிறது என்பதை இந்த அடுக்குகளுக்குள்ளான முரண்பாடுகளில் எந்த அடுக்கு வென்று மேலே துலக்கமாய்த் தெரிகிறது என்பதிலிருந்தே தீர்மானமாகிறது. இதில் கதாசிரியன் அல்லது படைப்பாளியின் பங்கு அவன் எந்த வர்க்கத்தை
சார்ந்தவனாயிருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் எந்த அடுக்கை முன்நகர்த்திச் செல்கிறான் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் இரசிகன் அல்லது வாசகன், ஒரு படைப்பைக் காணும் போது அவன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ற மன எழுச்சியை அடைகிறான்.

இராவணன் படத்தைப் பொருத்தவரை இப்படி நம்மை படம் நெடுக வழிநடத்திச் செல்லும் இழை / அடுக்கு எதுவென்பதைப் பற்றியதே
இவ்விமரிசனம். கதைக்களன் இராமாயனம் என்பது பலவகைகளில் நிருவப்பட்டுள்ளது. பாத்திர அமைப்புகள் மற்றும் பாத்திரங்களின் உடல் மொழி வாயிலாகவே இது வலிந்து திணிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல், தற்சமயம் மத்திய இந்தியாவில் வளங்களைக் கைப்பற்ற இந்திய அரச
படைகள் பழங்குடியினர் மேல் தொடுத்திருக்கும் போரைத் தொடர்ந்து பொதுவில் வனங்கள், பழங்குடிகள் பற்றி இது வரையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு உயர் பிரிவினருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படம் அவர்கள் பற்றி சாடை பேசுகிறது.

படத்தின் பெயர் இராவணன் என்பதாக இருப்பதால் பரவலாக இராவணனை நாயகனாக காட்டியிருக்கிறார்கள் என்று தமிழ் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நுணுக்கமாக அவதானிக்கும் போது இப்படைப்பு இராமனை அவனது சில வரலாற்றுப் பழிகளில் இருந்து காப்பாறி விடவே செய்கிறது. வால்மீகியின் இராமனை முன்பு ஒரு முறை கம்பன் காப்பாற்றினான் – இதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சினிமாக் கம்பன் இன்னுமொரு முறை இராமனை செலுலாய்டில் காப்பாற்றியுள்ளான்.

தன் தங்கையை போலீசுக்கு பயந்து கைவிட்ட மாப்பிள்ளையின் கையை வெட்டும் அதே வீரா, தங்கையைக் கற்பழித்த போலீசை உயிரோடு விட்டு
விடுகிறான். எந்தவித ஈவு இரக்கமும் இல்லாத – பழியுணர்ச்சி மிகுந்த – வீரா, சீதை மேல் பெரிய காரணங்கள் ஏதுமின்றி அனுதாபப்படுகிறான். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சீரழிவுகளுக்குக் காரணமான போலீசு அதிகாரியின் மனைவின் மேல் அவனுக்கு மோகம் தோன்றுகிறது. கதை
முடிவில் இராவணனிடம் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் இராமன் சந்தேகம் கொள்கிறான். இந்த இடத்தில் அவனுடைய சந்தேகத்துக்கு புது
விளக்கம் கொடுத்து (‘யாருகிட்டே என்ன சொன்னா எங்கே யாரை தேடிப் போவாங்கன்னு தெரிஞ்சு தானே சொன்னீங்க எஸ்.பி சார்’ என்று
கிளைமேக்ஸில் கூவும் இடம்) ராமனின் யோக்கியதையைக் காப்பாற்றுகிறார். உண்மையில் இராவணன் இராமனை தொங்கு பாலத்தில்
காப்பாற்றவில்லை – இந்த இடத்தில் தான் காப்பாற்றுகிறான். இதே இடத்தில் தான் மணிரத்னமும் இராமனும் ஜெயிக்கிறார்கள் – இராவணன்
பாத்திரமும் படமும் தோற்கிறது.

சூர்பனகையாக வரும் பிரியாமணியின் கற்பழிப்புக் காட்சி பார்வையாளனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படாத வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்க்கும் போது பிரியாமணி ‘எத்தனையோ தடுத்துப் பார்த்தேன் முடியவில்லை – ராத்திரி பூரா பழிவாங்கிட்டானுக’ என்று அழுகிறார். கவனியுங்கள் – ‘பழிவாங்கி’விட்டார்கள். மலைகிராம மக்களின் செயல்கள் ஜெண்டில்மேன் இரசிகர்களுக்கு ஒருவிதமாய் முகச்சுழிப்பு ஏற்படுத்தும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா அந்த போலீசுக்காரனை கடத்தி வந்து மொட்டை அடிக்கும் வைபவத்தின் போது உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு ‘ஹுவ்வா ஹுவ்வா’ என்று குதியாட்டம் போட்டுக் களிக்கிறார்கள். நியாயமாய் ஆத்திரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இப்படி களிவெறியோடு கள்ளை ஊற்றிக் கொண்டும், சேறைப் பூசிக் கொண்டும் குதியாட்டமா போடுவார்கள்? இன்னும் பல்வேறு காட்சிகளிலும் மலைவாசி மக்கள் பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அதே சித்திரத்தைத் தான் ஜூம் பண்ணிக் காட்டுகிறது சந்தோஷ் சிவனின் காமிராக் கண்கள்.

வீரா ஒரு மலைவாசி அல்ல. அவன் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பனின் ஒரு
நகல் வடிவம். வீரா யாருக்கு நல்லவன்? வீரப்பன் யாருக்கு நல்லவனோ அவர்களுக்குத்தான் வீராவும் நல்லவன். வீரப்பனை ஒழித்துக் கட்ட
அரசியல்வாதிகளுக்கு இருந்த நியாயமும் நாம் அவனை மறுப்பதற்குக் கொள்ளும் நியாயமும் வேறு வேறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பன் வாயிலிருந்து அஜீரணமாகி தமிழ்தேசிய ‘சரக்கு’ வழிந்து அதை கேவலப்படுத்தியது. இங்கோ பொருத்தமில்லாத இடத்தில் வீராவின்
வாயிலிருந்து ‘மேட்டுக்குடி’ எனும் வார்த்தை வருகிறது.

கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில் ஐசுவரியாவுக்கு சாப்பாடு எடுத்து வருகிறான் வீராவின் அண்ணன். அப்போது ஐஸ்வரியா ‘நான் என்ன நாயா
தூக்கி தூரப் போடுங்கள் இதை’ என்கிறாள் – இது ஒரு சாதாரண சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். இது மேட்டுக்குடிக்கு மட்டுமே
சொந்தமானதும் இல்லை – அடித்தட்டு மக்களுக்கு சம்பதமில்லாததும் இல்லை. ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்படும் பிரபு ‘இது ஒரு மேட்டுக்குடி திமிர்’ என்று அறிவித்து மேட்டுக்குடி திமிரை சுயமரியாதையாக்குகிறார். நம்மிடம் இருந்து அதை அந்நியமாக்குகிறார் – இந்த இடங்களில் தான்
மணிரத்னமும் இராவணன் படமும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எல்லாம் நல்லா இருக்கு ஆனா ஏதோவொன்னு
குறையுதே என்று பார்வையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

அடுத்து ஒரு கலைப்படைப்பு என்பது அது எழுதப்பட்ட அல்லது வெளிப்பட்ட காலத்தின் சமூக பொருளாதார நிகழ்வுகளோடான தன்னைத்
தொடர்பு படுத்திக் கொள்கிறது. இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அது அப்போது நடந்த ஆரிய திராவிட போரையும், திராவிடத்தின் மேல் ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவியதையும் குறியீடாகக் கொண்டிருந்தது. தற்போது அதன் நீட்சியாக மத்திய இந்தியாவில் இராம சைனியமாக
இந்திய அரச படைகள் பழங்குடிகளின் வளங்களின் மேல் பாய்ந்து குதற காத்துக் கொண்டிருக்கும் நிலையும், இராவண சைனியமாக
மாவோயிஸ்டுகள் அதை எதிர்த்து நிற்கும் நிலையும் நிலவும் சூழல்.

தமது வாழ்க்கையில் வனாந்திரங்கள், மலைப்பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள் என்று இன்னொரு உலகம் இருப்பதையே உணராத ஒரு
மக்கள் பிரிவு சமீப காலமாய் அவற்றைப் பற்றி படிக்க வேண்டிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காத்துக்
கொள்ள மத்திய இந்தியாவின் கோண்டுகளும், சந்தால்களும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள். இதுவும் ஒரு இராமாயணம் தான். அன்று சீதையை நெருப்பாய்ச் சுட்டது பாப்பனியம் இன்றோ பார்ப்பனியமாய் சர்வதேச தரகு முதலாளிகள் அமர்ந்திருக்க, அவர்கள் நலன் காக்கும் ராமனின் பாத்திரத்தை மன்மோகனும், லட்சுமணனின் பாத்திரத்தை சிதம்பரமும், அனுமனின் பாத்திரத்தை சல்வாஜூடும் குண்டர்களும் ஏற்றுக் கிளம்பியுள்ளனர். ஆனால், இந்தக் கதையில் சீதையான இயற்கை வளங்களை இரவணர்களான கோண்டுக்கள் காத்து நிற்கிறார்கள். சீதையை கோண்டுக்களிடம் இருந்து ‘மீட்டு’ பன்னாட்டு தரகு முதலாளிகள் கையில் சேர்த்துவிட இராம சைன்னியம் தண்டகாரன்ய வனத்தை சுற்றி வளைத்து நிற்கிறது. அதை எதிர்த்து இராவண சைன்னியமாய் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தை எதிர்த்து ஒன்றுமில்லாதவர்கள் நிற்கிறார்கள். பெரும் பீரங்கிகளையும் நெருப்பை உமிழும் விமானங்களையும் எதிர்த்து கோண்டுகளின் வில்லாளிகள் நிற்கிறார்கள். நொடிக்கு நூறு ஈயக்குண்டுகளை துப்பும் எந்திரத் துப்பாக்கிகளை எதிர்த்து எத்தனையோ நாள் பட்டினியோடும், பஞ்சடைத்த கண்களோடும் கையில் ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும் நிற்கிறது இராவண சைன்னியம். ஜெண்டில்மேன் அலுகோசுகளுக்கு இந்தச் சூத்திரம் புரியவில்லை. அது எப்படி சாத்தியம்? இது என்ன அநியாயம்? ஒரு
சக்தி மிக்க வல்லரசை ஓட்டாண்டிகள் படை இப்படி அலைக்கழிப்பது எப்படி சாத்தியமானது என்று திகைக்கிறார்கள். தமது வாழ்வில் முதன் முறையாய் யார் இந்த கோண்டுக்கள், யாரிந்த காட்டுவாசிகள் என்று கவனிக்கிறார்கள். இராவண சைன்னியத்தின் தாக்குதல் முறைகளும் அவர்கள் இராம சைன்னியத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய காதைகளையும் முதலாளித்து பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிக்கிறார்கள்.

மணிரத்னம் காட்டுவாசிகளுக்கும் போலீசுக்குமான சண்டையைக் காட்டுகிறார். டீசெண்டு போலீசு – இண்டீசெண்டு காட்டுவாசிகள். பெண்ணைக்
கடத்திப் போய் மோகிக்கும் அழுக்குக் காட்டான் வீரா ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பன் வாயில் தமிழ்தேசியம் ஒழுகுகிறது. எங்கள் ஊர் பக்கத்தில் இதை சாடை பேசுவது என்று சொல்வார்கள். நேராய் பேச துப்பில்லாதவர்கள் செய்யும் கோழைத்தனம். மாடு மேய்த்துத் திரும்பும் மக்களை ‘நம்ம்ம்ம்பி’ போலீசு அனுமதிக்கிறது – அவர்களுக்குள்ளே கலந்து வரும் வீரா கும்பல் அங்கே இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளைக்
கொள்ளையடிக்கிறது. வீராவின் கும்பலை படத்தில் காட்டியவரையில் அவர்களிடம் அதிகபட்சம் இருந்த ஆயுதம் ஒரே ஒரு பிஸ்டல். அதுவும்
வீராவிடம் தான் இருந்தது. எனில் இந்த இயந்திரத் துப்பாக்கிக் கொள்ளை ஏன் காட்டப்படுகிறது என்பதை மணி சொல்லாமலே அவரின் ரசிகர்கள்
உணர்ந்து கொள்கிறார்கள்.

போலீசைக் கட்டிவைத்து எரிக்கிறார்கள் மக்கள் – காரண காரியம் ஏதும் சொல்லப்படவில்லை; அப்படியேதும் இல்லாமலே அவர்கள் செய்வார்கள்
என்பது போல் துவங்குகிறது ஆரம்பக் காட்சி. சம்பந்தமேயில்லாமல் தனது தனிப்பட்ட பகையுணர்ச்சிக்கும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைக்கும்
‘மேட்டுக்குடி’களோடு பிரச்சினை என்று வீரா பேசுகிறான். அவனோடு வரும் மலைகிராம மக்களோ எந்நேரமும் சேறும் சகதியும் பூசிக் கொண்டு
அலைகிறார்கள். மூங்கில் குடுவைகளில் கள்ளை நிரப்பி ஊற்றிக் கொண்டு ஹுவ்வா ஹுவ்வா என்று குதியாட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெண்களுக்கிடையே ஒளிந்து கொண்டு இராவணனை இராமன் சுட்டான் என்பது போல் காட்டியுள்ளதாக சில தமிழ் வலைப்பதிவுகளில்
வாசிக்க நேர்ந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. தேவ் (இராமன்) வீராவைக் (இராவணனை) கைது செய்யத் தேடி வருகிறான். அவன் கடமையை செய்ய விடாமல் பெண்கள் அவனைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அவன் துப்பாக்கியை எடுத்து வாகாக குறிவைத்து இராவணனை அடிக்கிறான். அதாவது  ரவுடி வீராவை மலை கிராமப் பெண்கள் கேடயமாக நின்று காப்பாற்ற முனைவது போலவும் வேறு வழியில்லாமல் தேவ் பெண்கள் மத்தியிலிருந்து சுடுவது போலவும் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதிகாச ராவணன் திராவிடர்களின் குறியீடாக இராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டான் என்பதை பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வீரா எந்த வகையிலும் அந்த மலை கிராமத்து மக்களின் விடுதலைக்கோ மேம்பாட்டுக்கோ போராடியதாக காட்சிகள் இல்லை. என்பதை கணக்கில்
கொண்டால் எஞ்சியிருப்பது இதிகாச இராவணனின் சாயல் அல்ல, சுப்பிரமணியபுரத்திலிருந்து மஞ்சப்பையோடு கிளம்பி வந்த ஒரு பொருக்கிப் பயல் மட்டுமே. இதைத் தான் தற்போது ஏடுகளில் வெளியாகியிருக்கும் மணிரத்னத்தின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது. தான் இந்தப் படத்தில்
வீராவின் பாத்திரப் படைப்பின் மூலம் உணர்த்த வந்தது இராவணனையோ இராமாயனத்தையோ அல்ல; இது போன்ற முரட்டு மனிதர்களுக்குள்ளும்
காதல் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதையே என்றுள்ளார்.

பின் இராமயண கதைக்களனும், பழங்குடியினர் பின்னணியும் வீராவுக்கு எதற்கு? அது அவர்கள் நியாயத்தைப் பேச அல்ல; அவர்களை இழிவு
படுத்தவே என்பதை வெள்ளித்திரையில் தெளிவாக நிருவியுள்ளார் மணி ரத்னம். கதைக்களனையும் பின்னணியையும் படத்திலிருந்து உருவியெடுத்து விட்டால் மிஞ்சுவது ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி பற்றிய கதை தான். ஒரு ரவுடியை பொருத்தமில்லாத இடத்தில் உலவவிட்டதில் தான்
மணிரத்னத்தின் அரசியல் அடங்கியிருக்கிறது.

-கார்க்கி

ஜூன் 23, 2010 Posted by | Alppaigal, இராவணன் விமர்சனம், சினிமா விமர்சனம், culture, Films, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!

சுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.

சுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி
வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்
கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..

நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.

இப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது
பதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.

ஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி?

என்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள
வர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலும் எல்லாச் சூழலிலும் நரி பரியாக
வேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.

ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.

எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.

சோபாசத்தி எனும் லும்பன் குறித்து –

லீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த
மேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா? இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்
காட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அப்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,
அந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.

எல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்
அவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –

சோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு
எழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –

லீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது
நடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த
ஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்
பார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க
நாயம்..

அவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்
ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.

திருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.

அவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.

விடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.

ரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்

அனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று
நினைக்கிறேன்.

அவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்
தியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஜூன் 3, 2010 Posted by | Alppaigal, உண்மைத்தமிழன், கார்பொரேட் ஜெயேந்திரன், நர்சிம், பதிவர் வட்டம், போலி கருத்துரிமை, culture, facist, politics, tamil blogsphere, terrorism | 8 பின்னூட்டங்கள்

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

நர்சிமின் பார்ப்பன நரகல் புத்தியை மிகக் கச்சிதமாக அம்பலப்படுத்தியிருக்கும் வினவின் இந்தப் பதிவை முதலில் வாசித்து விடுங்கள். ஏற்கனவே வினவு தளத்தின் பின்னூட்டத்தில் நர்சிமுக்கு எனது கண்டனத்தையும் அப்பதிவுக்கான எனது ஆதரவையும் தெரிவித்துள்ளேன். மீண்டும் அதை இங்கே வலியுறுத்துகிறேன். கண்டனம் எனும் அம்சத்திலும் அதையும் கடந்து நர்சிமின் மன அழுக்கின் சாதியப் பின்னணியையும் வினவு தோழர்கள் ஏற்கனவே சிறப்பாக தோலுரித்திருக்கிறார்கள்.

இப்போது புதிதாக வலைபதிவர்களின் எட்டுப்பட்டி பஞ்சாயத்து  நாட்டாமையான உண்மைத் தமிழன் எனும் பெயரில் எழுதும் சரவணன் சவடமுத்து ஏதோ குடும்பத்தில் சின்னப் பிரச்சினை, இதில் நம்ம குடும்ப மெம்பர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் – வினவு கருத்து சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு அரிய கருத்தை உதிர்த்திருக்கிறார்.

முதலில் வினவு தோழர்கள் வலைபதிவர்கள் இல்லை என்று தீர்ப்பு எழுதும் உரிமையை இவருக்கு கொடுத்தது யார்? ஏதோ வினவு தளத்தை இவர் தான் பின்னூட்டமிட்டு பிரபலப்படுத்தியதாக பீற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் எமது தோழர்களுக்கு உம்மைப் போன்ற பார்ப்பன சொம்பு தூக்கிகளின் அறிமுகத்தை நாங்கள் நாடி நிற்பது எனும் நிலையே எமது அரசியலுக்கு நேர்ந்த ஆகக் கேவலமான இழுக்கு. அவ்வாறிருக்க எமது தோழர்கள் எப்போது உங்கள் அறிமுகத்தை நாடி நின்றார்கள் என்பதையும் உம்மை எப்போது ஒரு ப்ளாட்பார்மாக பயன்படுத்தினார்கள் என்பதையும் விளக்கும் யோக்கியதை உமக்கு இருக்க நியாயமில்லை – ஆனால், கேட்கும் தைரியம் எமக்கு இருக்கிறது.

துக்ளக்கையும் இன்னபிற பார்ப்பன கழிசடைத் தத்துவங்களையும் தூக்கிப்பிடிக்கவும் சக்கீலாவை ஜொள்ளுவிட்டு இரசிக்கவும் உப்புமா
திரைபடங்களுக்கு விமர்சனம் எழுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உமக்கு எப்படி உரிமை இருக்கிறதோ.. அதை விட அதிகமாக மக்கள்
அரசியலைப் பேசவும் மக்கள் விடுதலைக்கான தத்துவத்தை இணையதளங்களிலும் வலைப்பதிவுகளிலும் உயர்த்திப்பிடிக்கவும் எமக்கு உரிமை இருக்கிறது.

இப்போது நான் கலைந்து போன பதிவர் சங்கம் எனும் கூழ்முட்டையை நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை அந்தக் கூழ்முட்டை பொரித்திருந்து
அதற்கு சரவணன் சவடமுத்து (உண்மைத்தமிழன்) பொறுப்பாளராய் இருந்த்திருந்தால் எமது அரசியலைப் பேசும் உரிமைக்கு என்ன கதி
நேர்ந்திருக்கும்? பதிவர் சங்கம் எனும் அலையில்லாத கடலை விமர்சித்து விட்டதால் எமது தோழர்கள் மேல் வன்மத்தைக் கக்கும் உண்மைத்தமிழன்,
அப்படியான பொறுப்பில் இருந்திருப்பாரேயானால் எம்மேல் தனது வீட்டோ  அதிகாரத்தை செலுத்தி எமது குரல்வளையை நெரிக்கத் தயங்கியிருக்க
மாட்டார்.

இதைத் தான் லீனா விவகாரத்தின் போது ஒரு பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். உமது சுதந்திரம் என்பது எமது உரிமையை மறுக்கும். ‘நடுநிலையான’ கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற ஒன்று கிடையவே கிடையாது. லீனா விவகாரத்தில் நேரில் சென்று கேள்வி எழுப்பும் எமது உரிமையை மறுப்பதன் மூலம் தங்கள் கருத்துரிமையை நிலைநாட்டிக் கொண்ட உ.த உள்ளிட்ட லும்பன்கள், இப்போது சகோதரி சந்தன முல்லையை நாக்கூசும் விதத்தில் போலி டோண்டுவுக்கு எந்த வகையிலும் குறையாத வகையில் ஆபாசமாக நர்சிம் எழுதியுள்ளதை ‘குடும்ப பிரச்சினை’ என்று அமுக்கப் பார்க்கிறார்.

வினவு தளத்தில் வெளியான ஒரு பின்னூட்டத்திற்காக வினவு தோழர்களை கூண்டில் ஏற்றுகிறார் ச.சவடமுத்து. அதே வினது தளத்தில் வேறு பல
பதிவுகளில் எமது தோழர்களின் பிறப்பு முதற்கொண்டு இழித்துப் பேசி பின்னூட்டங்களை பார்ப்பன கும்பல் எழுதிக் கொண்டிருந்த போது எதைப்
பிடுங்கிப் போட போயிருந்தார் என்று தெரியவில்லை. வினவு ஆரம்பத்திலிருந்தே எப்படியான பின்னூட்டங்களையும் கூட தடுத்து வைப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதையும் மீறி பல சந்தர்பங்களில் சகபதிவர்கள் சுட்டிக் காட்டிய போது திருத்திக் கொள்ளவும் தயங்கியதில்லை. இதற்கு நானே ஒரு உதாரணம் – சமீபத்தில் டோண்டுவின் மகள் பற்றி ஒரு தகவலை எவனோ ஒரு லூசு வெளியிட்டதை நான் சுட்டிக் காட்டிய பின் நீக்கியிருக்கிறார்கள். பதிவில் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டி வரும் பின்னூட்டங்களை – அது அனானிமஸாக இருந்த போதும் கூட – திருத்தியிருக்கிறார்கள். கமெண்ட் மாடரேஷனை ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்காத வினவு தளத்தை அதில்
வெளியார்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக்கி பதிவின் மைய்யமான விசயத்திலிருந்து எஸ்கேப்பாகப் பார்க்கிறார்.

நட்பு எனும் பெயரில் இணைந்துள்ள குடும்பமாம். யாரு காதுல சாமி பூ சுத்தறீங்க? யாருக்கும் யாருக்கும் நட்பு? இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் எல்லோரும் நிஜ உலகில் நிலவும் ஏதோவொரு கருத்தையோ தத்துவத்தையோ அரசியலையோ பிரதிபலித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள் – நீங்கள் துக்ளக்கை பிரதிபலிப்பது போல. அவ்வாறிருக்க நட்பு என்பது ஏற்றுக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏற்படுவது தானேயன்றி எதிரெதிர் துருவங்களுக்குள் நட்பு என்று சொல்வது ‘காதுல பூ’ கதை தான்.

தனது எழுத்தின் மூலம் கடுமையான விசத்தைக் கக்கி ஒரு பெண்ணை அவரது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் எழுத்தின்
மூலம் குத்திக் கிழித்துள்ள நர்சிம்மை சும்மா அப்படியே உண்மையார் வருடிக் கொடுக்கிறார். அவுக மாப்பு கேட்டுட்டாகளாம் அது அவுக குடும்ப
மேட்டராம். யோவ் வெண்ணை.. அந்த நாதாறி புனைவு எனும் பெயரில் போலி டோண்டுத்தனமாய் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி எழுதிய
போது எங்கே போய் மேய்ந்து கொண்டிருந்தது உன் புத்தி. ‘குடும்ப பிரச்சினை’ என்று சொல்லிக் கொண்டு நீ இப்போது சொம்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பி வந்திருக்கிறாயே… அந்தச் சகோதரி அசிங்கப்பட்டு நின்ற போது எங்கே போயிருந்தாய்?

அதான் போலி டோண்டு மூர்த்தி மன்னிப்பு கேட்டு எழுதிக் குடுத்தாச்சில்ல.. அப்புறமும் ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறாய். குடும்பப் பிரச்சினை
என்று விட்டுவிட வேண்டியது தானே.. அவன் விசயத்தில் குடும்ப பிரச்சினை இல்லை – இன்னொரு பெண்ணின் பிரச்சினையின் போது மட்டும் குடும்பப் பிரச்சினையா? உனக்கு ஒரு நாயம் அடுத்தவிங்களுக்கு ஒரு நாயமா? மூஞ்சப் பாரு மூஞ்ச

தனது பதிவு நெடுக “அவர்கள் vs நாம்” எனும் பதத்தைப் பிரயோகிக்கும் ச.சவடமுத்து, “அவர்களை” ஆதரிக்கும் எல்லோரையும் பதிவர்கள் இல்லை
என்று தீர்ப்பெழுதுகிறார் – மறைமுகமாக மிரட்டுகிறார். மேட்டுக்குடி பார்ப்பனியவாதிகளின் காலைக் கழுவிக் குடிக்கும் அடிமைத்தனத்திலிருந்து
எழுகிறது உண்மைத்தமிழனின் வார்த்தைகள். அது நரகல் தோய்ந்த விஷ வரிகள். தன்னையொத்த அல்பைக்கூட்டத்தோடு சிண்டிகேட் அமைத்து
எமது தோழர்களைத் தனிமைப்படுத்தி விட முடியும் என்று பகல்கனவு காண்கிறார். அந்தோ பரிதாபம்… எமது தோழர்களின் பதிவுகளுக்கு வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையின் உயர்வு என்பது எமது அரசியல் நேர்மையிலிருந்தும் சித்தாந்த வலிமையிலிருந்தும் மக்களின் பால் ஒரு கம்யூனிஸ்டு கொள்ளும் மாறாத காதலின் வெளிப்பாடுகளிலிருந்துமே ஏற்படுகிறது எனும் எளிய உண்மை சவடமுத்துவுக்கு விளங்கவில்லை.

அது விளங்கவும் விளங்காது. தனது டாஸ்மார்க் கடையில் ஈயோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே உருபெற்று எழும் புரட்சிகர அரசியலுக்கான
அங்கீகாரத்தையும் வரவேற்பையும் அவரால் விளங்கிக் கொள்ளவியலாத பொறாமையிலிருந்தே தனது பதிவை எழுதியிருக்கிறார். வினவு தான்
பதிவுலகில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் பிரிவை ஏற்படுத்துகிறதாம்.. வினவு தனது நர்சிம் பதிவில் தெட்டத் தெளிவாக எப்படி நர்சிமுக்கு
ஆதரவாக பார்ப்பன பதிவர்கள் கள்ளக் கூட்டு அமைத்துள்ளார்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளனர். அந்த விவரங்களில் தொனிக்கும் உண்மைக்கு
அருகில் கூட ச.ச.முத்து செல்லவில்லை – அது முடியவும் முடியாது. ஒதுங்கி நின்று சேறடித்துப் பார்க்கிறார்.

தோழர் அசுரன் லீனா விவகாரத்தில் இவர்களின் கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்தி எழுதியதில் பலமாக காயம்பட்டுப் போன உண்மைத்தமிழன், இப்போது “அவர்கள் vs நாம்” அரசியலை நடத்துவதன் மூலம் தனது காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். இவர் பேசும் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் யாருக்கு? மாற்றி மாற்றி சொரிந்து விட்டுக் கொள்ளும் சொம்பு தூக்கிகளுக்கும் லும்பன்களுக்கும் தான். இவர்கள் அமைப்பதாக சொல்லிக் கொண்டிருந்த – கூழ்முட்டையாகிப் போன – பதிவர் சங்கம் என்பதும் கூட உண்மைத்தமிழனை ஒத்த லும்பன்களின் முதுகு சொறிஞர்கள் சங்கம் தான்.

ஆனால் எமது தோழர்களோ பதிவுலகை ஒலிக்காத குரல்கள் ஒலிக்கச் செய்வதற்கான தளமாகக் காண்கிறார்கள். வெகுஜன ஊடகங்களால்
பேசப்படாத மக்களின் வேதனைகளை பதிவு செய்யும் ஒரு மாற்று ஊடகமாக இணையத்தைப் பாவிக்கிறார்கள். புதிதாய் உருவாகும் ஒரு உலகின் பிரதிநிதிகளாய் செத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் காதுகளில் இடியாய் இறங்கிக் கொண்டுள்ளது எமது தோழர்களின் எழுத்துக்கள். இணையத்தில் இயங்கும் எமது தோழர்கள் இத்தனை வருடங்களாக எழுதி, இணையவெளியில் பிரிக்க முடியாதவொரு அங்கமாக நிரந்து நிற்கும் பதிவுகள் அத்தனையுமே இதற்கு சாட்சி.

யாரை யார் பதிவர்கள் இல்லை என்று தீர்மானிப்பது? சாக்கடையில் புரளும் பன்றி அந்தச் சாக்கடையே உலகம் என்று நம்பிக் கொள்ளுமாம்.
மொக்கைப் படங்களுக்கெல்லாம் என்பது பக்கத்தில் விமர்சனம் எழுதுவதும், தம்பி – அண்ணே கூழைத் தனமாய் குழைந்து திரிவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது முதுகில் குத்திக் கொள்வதும், தனது தனிமனித கோழைத்தனங்களூடாய் சமூகத்தைப் பார்த்துப் பதிவதுமே இத்தனை காலமாய் இந்த ச.ச. முத்து (அலைய்ஸ்) உண்மைத்தமிழன் எழுதி வந்துள்ள விசயங்கள். மிஞ்சிய நேரத்தில் துக்ளக் தனமான அரசியல் கருத்துக்களை உளரிக் கொட்டிக் கொண்டிருப்பதே இவரது அலுப்பூட்டும் மெகா சைஸ் பதிவுகளின் சாராம்சம். இப்படி சுகமாய் சொறிந்து கொள்வதே வலைப்பதிவுகள் எனும் அளவில் மட்டுமே வலைப்பதிவுகளையும் பதிவுலகையும் புரிந்து கொண்டுள்ளார். இவர்  தான் எமது தோழர்களை பதிவர்கள் இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார். நல்ல காமெடி.

நரி நாட்டாமை செஞ்சா கிடைக்கு ரெண்டு கேக்குமாம்..!

(கூகிள் ரீடரில் உ.த பதிவைப் படித்ததால் பின்னூட்டங்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் எதையாவது சேர்க்க வேண்டும் என்றால்
சேர்க்கப்படும்)

ஜூன் 1, 2010 Posted by | Alppaigal, கார்பொரேட் ஜெயேந்திரன் | , , , , | 23 பின்னூட்டங்கள்

அங்காடித் தெரு – விமர்சனங்கள் மேலான விமர்சனம்..!

முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது வித்தியாசமான திரைப்படம்; வித்தியாசமான கதைக் களம்; சாமர்த்தியமான
ஷார்ப்பான வசனங்கள்; தென் தமிழகத்து நாடார் இளைஞர்கள் மேல் அதே சாதி முதலாளிகள் அவிழ்த்து விடும் சுரண்டலை முதன் முறையாக பேசிய படம்; பல பின்னவீனத்துவ குறியீடுகளை கொண்ட படம் (அதெல்லாம் என்னான்னு கேட்காதீங்க – எனக்குத் தெரியாது); நாயகியின் உடல் மொழி ஒரு எட்டாவது உலக அதிசயம்; ஜெயமோகனுக்கு ஜெய் – ம்ம்ம்ம்….இந்தக் கடிவாளமிடப்பட்ட முற்போக்குக் கழுதைகள் சுற்றித் திரியும் ஊரில் அக்கப்போரில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது..

படத்தில் சொன்ன விஷயங்களைக் கொண்டு நல்ல பல விமர்சனக் கட்டுரைகள் வலைத்தளங்களில் வெளியானது.. ஆனால் இதில் சொல்லாத சில விஷயங்களும் இருக்கிறது; அல்லது சொன்ன விஷயங்களின் இடைவெளிக்குள் வேறு சில உண்மைகளும்
பொதிந்திருக்கிறது. அதில் ஒன்று சரவணா ஸ்டோ ர்ஸுக்கு எந்த விதத்திலும் குறையாமல் ஊழியர்களை ஒடுக்கிச் சுரண்டும் இன்னொரு கடையினருக்கு டைட்டிலில் நன்றி தெரிவித்திருப்பது. பொதுவில் நாடார் சாதி முதலாளிகள் மிக அடிப்படையிலேயே சுரண்டலும், போலிப் பெருமிதமும் கொண்டவர்களாக இருக்கையில் ஒரு குறிப்பிட்ட கடையை குறி வைத்தது போல திரைக்கதையை அமைத்திருப்பது இன்னொன்று. அடுத்து முக்கியமாக நான் கருதுவது ஒடுக்குமுறையின் மேலான கோபத்துக்கு கச்சிதமாக மடை போட்டு ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் செலுத்தியிருப்பது.

இங்கே பதிவுலகில் அங்காடித் தெரு நாயகன் நாயகிக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்து குமுறியவர்களின் குமுறல் உணர்ச்சி எத்தகையது? இந்த உணர்ச்சி ஓரிரு பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் வடிந்து போய் விடுமா இல்லை அதைத் தாண்டிச் சென்று வினையாற்றுமா? “அடப்பாவமே இவாளெல்லாம் இந்த ம்ருஹங்களை அடச்சி வச்சி கஷ்ட்டப்படுத்தறாளே” என்று மிருகக் காட்சி சாலையின் கூண்டுகளுக்கு முன் நின்று உச்சுக் கொட்டும் பரிதாப உணர்ச்சிக் குரல்களைக் கேட்டிருக்கிறீர்களா? அரசியல் ஏதுமற்ற வெறும் பரிதாபம் தான் அது. டிக்கெட்டுக்கான நேரக் கெடு முடிந்து மிருகக்காட்சி சாலையின் கேட்டைக் கடந்த உடன் வடிந்து போகும் பரிதாப உணர்ச்சி அது. இங்கே திரையரங்கை விட்டு வெளியேறி ஒரு பதிவும் சில பின்னூட்டங்களும் வரையில் தாக்குப் பிடித்து நிற்பது கொஞ்சம் பாராட்டக் கூடியது தான்.

அடப்பாவிகளா சொந்த சாதிக்காரனைக் கூட இந்த அண்ணாச்சிகள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்களே.. என்று பரிதாபம் காட்டுபவர்கள் விஷயத்தின் முழு உண்மையை அறிந்தவர்களல்ல. தமிழ்நாட்டில் சொந்த சாதியினரைத் தான் சுலபத்தில் சுரண்ட முடியும். பிரிக்காலில் ஏழை நாயுடுகள், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏழை நாடார்கள், சக்தி குழுமங்களில் ஏழை கவுண்டர்கள்.. இப்படி இங்கே தொழில் நிறுவனங்கள் எல்லாம் சாதிச் சங்கங்களின் கிளைகள் போலத் தானே விளங்குகிறது. திருமாவுக்கு தலித்துகள் எப்படியோ ராமதாஸுக்கு வன்னியர்கள் எப்படியோ அப்படித்தான் அண்ணாச்சிகளுக்கு அவர்களது ஊழியர்கள். அண்ணாச்சிகள் கடும் உழைப்பாளிகள் என்பது உண்மை – அதிகாலையில் எழுந்து மார்கெட்டுக்குப் போய் காய்கறிகள் வாங்கி வருவதில் தொடங்கி இரவு பதினோரு மணிக்கு கடையெடுத்து வைக்கும் வரை அவர்களின் உழைப்பு அசாதாரணமானது – இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அதே சாதியைச் சேர்ந்த எல்லா பணக்கார முதலாளிகளும் அதே அளவு உழைப்பாளிகள் இல்லையென்பதும், அவர்களின் வெற்றிக்கு உழைப்பு மட்டுமே காரணமில்லை என்பதும்.

தமிழகம் முதலாளித்துவம் ஓரளவு வளர்ந்த மாநிலம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மத்திய காலத்திய ஐரோப்பாவைப் போல் அல்லாமல் அந்த மூலதனம் என்பது தனது வளர்ச்சிக்கு நடப்பிலிருக்கும் அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் (பார்ப்பனியத்தை) தனக்குள் சுவீகரித்துக் கொண்டே வளர்ந்துள்ளது. இங்கே உள்ளூர் மூலதனமும் தொழிற்சாலைகளும் சாதிச் சங்கங்களைப் போலவே அணி சேர்ந்து நிற்கிறது.

யார் இந்த சாதிக்காரர்கள்? ஒரு சாதியினர் தொழில்களில் அதிகளவு ஈடுபடுவதால் மட்டுமே அந்த மொத்த சாதியினரும் தொழில்மயமாகி விட்டதாக சொல்லி விடமுடியுமா? ஒரு சாதியின் எல்லா அங்கத்தினரும் சமமான சமூக அந்தஸ்த்து கொண்டவர்களா?

இல்லை என்பது தான் பதில். உதாரணமாக, நாடார்கள் என்று குறிப்பிடுவது முதலில் ஒரே சாதி அல்ல. அது ஒரு அம்ப்ரெல்லா பெயர் (Umbrella name) சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நாடார்கள் என்று ஒரு சாதி கிடையாது (அது ஒரு பட்டம் (அ) சிறப்புப் பெயர்). சாணார், கிராமனி, பணிக்கர், ஈழுவ, என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர்களை இணைத்து தான் இன்றைய நாடார் சாதியே உருவாக்கப்பட்டது. அதில் ‘நாடான்’ என்பது அப்பகுதியில் நிலங்களை வைத்திருந்த சிலருக்கு இருந்த சிறப்புப் பெயர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தழுவிய சாதி என்பது வெகு சிலது தான். பார்ப்பனர்கள் பரவலாக தமிழகம் தழுவி இருந்தனர். நாயக்கர்கள், செட்டியார்களும் தமிழகம் தழுவி இருந்தனர். இவர்களுக்கு அதற்கான வரலாற்றுப் பின்புலம் இருந்தது.

இதையெல்லாம் அவ்வளவு எளிதில் இன்றைய நாடார்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். செப்புப்பட்டையம் தாமிரப் பட்டயம் என்று தங்களை சந்திர குல ஷத்ரியர்களாக காட்டிக் கொள்ளும் முனைப்பு இன்றைய நாடார்களுக்கு நிறையவே இருக்கிறது – ஆனால் இன்றும் அரசு ஆவணக் காப்பகத்தில் இருக்கும் அன்றைய ஆவனங்களும் கால்டுவெல் போன்றோர் எழுதிய குறிப்புகளும் அவர்களுடைய பாண்டிய குல பெருமைக்கு தடையாகவே இருக்கிறது.

இன்றைக்கு இடைநிலைக் கட்டத்திலிருக்கும் சாதிகள் ஒவ்வொரு வட்டாரத்துக்குட்பட்டவை தான். உதாரணமாக இன்றைக்கு குரும்பர் என்று அழைக்கப்படும் சாதியிலேயே குரும்பர், குரும்பா, குருபா, உள்ளு குருபா, ஹாலு குருபா என்று பல ‘பிரிவுகள்’ இருக்கின்றது. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சார பின்னணி, பொருளாதார பின்னணி இருக்கிறது. ஆனால் நாடார்கள் என்று ஒரே பெயரால் அழைக்கப்படுபவர்கள் மத்தியில் இன்றைக்கு இந்த உட்பிரிவுகள் மிகவும் மெல்லியதாய் இருக்கிறது – அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. தென்மாவட்டங்களில் இருந்த சாணார், கிராமணி போன்றவர்களையும் சேர்த்து இணைத்து ‘மாஸ்’ காட்டுவதில் ஏற்கனவே ஆதிக்க நிலையில் இருந்த நாடார்களின் நலனும் இருந்தது.

இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக இருக்கும் நாடார்கள் எல்லோரும் பனையேறிகள் அல்ல. பழைய பனையேறிகள் எல்லோரும் சின்ன மளிகைக்கடை நடத்துவோராகவோ அல்லது பெரும் முதலாளிகளிடம் கூலிக்கு வேலை பார்ப்பவராகவோ தான் இருக்கிறார்கள். டோண்டு சொல்வது போல எல்லா நாடார்களும் அரசை எதிர்பார்க்காமல் சுயமாக தொழில் செய்து தானே சுயம்புவாக முன்னேறி விடவில்லை. ஏற்கனவே ஊரில் நிலம் நீச்சு என்று இருந்தவர்கள் தான் பெரும்பாலும் தொழில்களைக் கைப்பற்றியுள்ளனர். ஊரில் பராரியாக இருந்த பனையேறி இங்கும் பராரியாகத் தான் இருக்கிறார். பணம் படைத்த நாடார்களுக்கு பனையேறிகளின் எண்ணிக்கை பலம் தேவை அவ்வளவு தான்; மற்றபடி அவர்கள் வேறு யாரும் தம்மை பனையேறி என்று அழைப்பதையே கூட கேவலமாக கருதிக் கொள்வார்கள்.

மேலும் இந்த நவீன கொத்தடிமைத்தனம் ரங்கநாதன் தெருவோடு முடிந்து விடுவதோ – நாடார்களின் தனிச் சிறப்போ அல்ல. இதை விட கேடு கெட்ட கொத்தடிமைத்தனத்தைக் கண்டிருக்கிறேன். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் எம்ஜாலில் இருக்கும் வீரமணி பிஸ்கட் இண்டஸ்ட்ரீஸில் அங்காடித்தெருவில் காட்டியதை விட ஆயிரம் மடங்கு அதிக கொத்தடிமைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அதன் முதலாளி வீரமணி நாடார் – இது நான் நேரில் கண்டது. வீரமணி நாடாரை மிஞ்சும் கொத்தடிமைத் தனத்தை கடப்பா மாவட்டம் கிரானைட் குவாரிகளில் ரெட்டிகளும், கம்மவார் நாயுடுகளும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். பிரிக்காலின் நாயுடு முதலாளியின் கொடுமையும், சக்தி குரூப் கவுண்டர் முதலாளியின் கொடுமைகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. இவர்களுக்கெல்லாம் அப்பன்மார்கள் தான் வால்மார்ட், ஜீ.ஈ, கோக், பெப்சி முதலான பன்னாட்டு முதலாளிகள். சீனத்தில் பல தொழிலாளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு சரியான ஊதியம் கூட தராமல் கசக்கிப் பிழிந்து தயாரிக்கப்படும் பொம்மைகளோடு தான் உங்கள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“என்னா இருந்தாலும் இந்த சைனீஸ் கூட்ஸ் எல்லாம் ரொம்ப சீப்பு சார்” என்று சப்புக் கொட்டிக் கொண்டே “அங்காடித் தெரு பார்த்தீங்களா… ராஸ்கல்ஸ் என்னா கொடுமை சார்..?” என்று அங்கலாய்த்துக் கொள்ளும் குரல்களை சமீபமாக நிறைய கேட்கிறேன்.

மூலதனத்துக்கு சாதி, மொழி, இனம், எல்லைகள் என்று எதுவுமே கிடையாது. அங்காடித் தெரு அஞ்சலியின் சோகத்திற்கு எந்த அளவிலும் குறையாத சோகம் அந்த சீனத்துத் தொழிலாளியின் சோகம். உணர்ச்சிக்கு அறிவு கிடையாது. இன்னார் மேல் கோபம் – அதைவிட அதிக அநியாயம் செய்த இன்னொருவர் மேல் கோபமில்லை என்று பகுத்துப் பார்க்கும் அறிவு உணர்ச்சிக்கு இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது போலி உணர்ச்சி. அங்காடித் தெரு அஞ்சலிக்கு ஏற்பட்ட சோகத்துக்காக அண்ணாச்சிகளின் மேல் ஆத்திரப்படும் மக்கள் அதை விட அதிக சோகத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மேலும் ஆத்திரப்பட வேண்டும். அப்போது தான் அது நேர்மையான உணர்ச்சியாக இருக்கும்.

திரையரங்கை விட்டு வெளியேறியதும் எழும் கண நேர உணர்ச்சியின் உந்துதலுக்கு ஆயுசு எத்தனை நேரம்? இதே பதிவுலகில் எத்தனையோ
பதிவுகளில் “சுதந்திரச் சந்தையில் விளையும் போட்டியால் சேவைகளின் விலைகள் குறைந்து நுகர்வோருக்கு நலனே விளைகிறது” என்று அதியமான் பேசியபோதெல்லாம், அந்த குறைந்த விலை ‘ரங்கநாதன் தெரு சட்டையின்’ பின்னே வழியும் அஞ்சலியின் கண்ணீரை எத்தனை பேர் கண்டுணர்ந்தீர்கள்?

அங்காடித் தெரு திரைப்படத்தில் எனக்கு இருக்கும் விமர்சனம் ஒன்று தான். நடந்த சம்பவங்களை ஒரு சில தனிநபர்களோடு சுருக்கி
விட்டிருக்கிறார்கள்.. எங்கள் செல்போன் சேவையில் கட்டணம் குறைவு என்று கூவியழைக்கும் விளம்பரங்களுக்குப் பின்னும் ஒரு அண்ணாச்சி இருக்கிறார் – என்ன.. அவரு கொஞ்சம் பெரிய அண்ணாச்சி; பேரு கொஞ்சம் ஸ்டைலா அனில் அம்பானின்னு இருக்கும். குறைந்த விலையில் நிறைந்த நுகர்வு என்பதன் பின்னணியில் தொழிலாளர்களை சுரண்டுவது தான் ரங்கநாதன் தெரு அண்ணாச்சிகளின் அடித்தளம் என்றால் அதுவே தான் அம்பானிகளின் அடித்தளமும் கூட. என்ன.. அவர்கள் கொஞ்சம் ஹைடெக் என்பதோடு தமக்கு சாதகமாய் அரசு அரசாங்கம் சட்டம் போலீசு என்று சகலத்தையும் வளைக்கும் வல்லமை கொண்ட பெரிய அண்ணாச்சிகள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகனின் உணர்ச்சி கடிவாளம் போட்டது போல ஒரு குறிப்பிட்ட திசையிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தையும் அதன் முதலாளியையும் மாத்திரம் நோக்கிப் பயணப்படுகிறது – அது நேர்மையான உணர்ச்சியாக பொதுவான சுரண்டலை எதிர்த்துக் கிளர்ந்து எழ மறுக்கிறது.

வலைத்தளங்களில் வந்த விமர்சணங்கள் ரங்கநாதன் தெருவின் ஒரு சில அண்ணாச்சிகளின் மேல் ஒரு சில நாட்களுக்கு மட்டும் தாக்குப்பிடிக்கும் செல்லக் கோபமாக சுருங்கி விட்டது தான் வருத்தம். நேர்மையாகப் பார்த்தால் இது உலகளாவிய மூலதனத்தின் சுரண்டலுக்கு எதிரான கோபமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இது எட்டி நின்று வேடிக்கை பார்த்து உச்சுக் கொட்டி நகர்ந்து விடும் குட்டிமுதலாளித்துவ போலி உணர்ச்சி. இதற்கு வக்கணை பேச மட்டும் தான் தெரியும்; வினையாற்றத் துப்புமில்லை யோக்கியதையுமில்லை. மிருகக் காட்சி சாலையின் மிருகங்களின் மேல் வெளிப்படும் பரிதாபத்திற்கும் அஞ்சலியின் மேல் இவர்கள் காட்டும் கரிசனத்துக்கும் வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை
தான்.

ஏப்ரல் 5, 2010 Posted by | Alppaigal, culture, Films, Uncategorized | , | 20 பின்னூட்டங்கள்

பார்ப்பனியத்தின் இருப்பு!!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை சமூகத்தில் ஏற்கனவே புறையோடிப் போயுள்ள புண்ணின் மேல் போடப்பட்டிருந்த அழகான ஒப்பனையை கொஞ்சம்
திரை கிழித்துக் காட்டியிருக்கிறது. இது விஷயமாக பொதுவாக எல்லோரும் “அடப்பாவமே என்னமா அடிக்கிறானுக… இவனுக படிக்கப் போறானுகளா இல்ல ரவுடித்தனம்
செய்யப் போறானுகளா? அடிவாங்கற பய்யன் ரொம்ப பாவம் சார்… அவனப் பெத்தவங்க என்ன பாவம் செய்தாங்களோ..” என்று வன்முறையை வாழ்க்கையிலேயே கண்டிராத
“ரீஜெண்டான” வெளக்கெண்ணைகள் போல அங்கலாய்த்துக் கொண்டிருக்க.. மீடியாக்களும் வலைப்பதிவுகளும் இந்தக் குரல்களையே பெரும்பாலும் எதிரொலித்துக் கொண்டிருக்க..
வினவு தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காய் சமூக எதார்த்தத்தை நிகழ்ந்த சம்பவங்களோடு உரசிப்பார்த்து கறாரான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

அந்தக் கட்டுரைகளின் சுட்டி இதோ –

1) சட்டக்கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் தமிழகம் காப்போம்!!

2) சட்டக்கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…. அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

பிரச்சினை குறித்து இதை விட தீர்க்கமான/ நேர்மையான கட்டுரை ஒன்றை எழுதிவிட முடியாது. எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் அதனின்று நான் பெற்ற படிப்பினைகளையும் உறுதிப்படுத்துவதாய்
இருக்கிறது. இந்த கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்ட சில ரீஜெண்ட் கேசுகள்,

1) வன்முறை வன்முறை தான் சார்.. தலித்தாய் இருந்தால் என்ன ஆதிக்க சாதியாய் இருந்தால் என்ன? தப்பு தப்பு தான் சார்

2) அப்படியே தலித்துகளுக்கு பிரச்சினை இருந்திருந்தால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும். அதன் மூலம் தீர்வுகண்டிருக்க வேண்டும் – ரவி சிறீனிவாஸ் சில
இடங்களில் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

3) என்னாது…??? வன்முறைக்கு தீர்வு வன்முறையா? என்னவொரு சாடிசம்? – இது மருத்துவர் ருத்ரனை நோக்கி எழுப்பப்பட்டது.

பொதுவாக “இப்ப அழவேண்டிய நேரம். அதுவும் அடிப்பட்ட மானவர்களுக்காக அழவேண்டிய நேரம். இந்த நேரத்துல போய் இதுக்கு யார் காரணம், வரலாற்று ரீதியாக என்ன
நடந்தது என்பது பற்றியெல்லாம் ஏன் சார் யோசிக்கறீங்க? நீங்கெல்லாம் மனுசனா மிருகமா” வன்முறையைக் கண்டு முகம் சுளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படிச்
சிந்திக்கிறார்கள். ஏதோ இந்தியாவில் தீண்டாமை சாதியெல்லாம் எப்போதோ மலையேறி விட்டதென்றும்.. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற “அரசியல்களால்” தான்
சாதி இன்னும் வாழ்கிறது என்றும், இடஒதுக்கீட்டை எடுத்த் அடுத்த நிமிடம் சாதி மறைந்து விடும் என்றும் எழுதி/பேசி வருகிறார்கள்.

அந்தக் கட்டுரைகளின் பின்னூட்டம் ஒன்றில் தோழர் ஒருவர் கேட்டது போல, “இப்போ ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கினான் என்றவுடன் துள்ளிக் குதித்து வருகிறாயே…. முன்பு
தலித்துகள் அடிவாங்கிய போது எங்கே போனாய்?” என்ற கேள்வி நிச்சயம் இவர்கள் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் – அப்படி ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில்.
அப்போதெல்லாம் மவுனமாகத்தானே இருந்தாய் நீ? தின்னியத்திலும், பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம்.. இன்னும் வெளியே தெரியாத எத்தனையெத்தனையோ கிராமங்களில்
தலித்துகள் மேலான வன்முறை பற்றிக் கேள்விப்பட்ட போது நீ மவுனமாய் இருந்தாய் அல்லவா? பெரியார் தி.க தோழர்கள் இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இரட்டைக்
குவளை முறைக்கு எதிராய் போராட்டம் அறிவித்து, எங்கெங்கே இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டார்களே அப்போது நீ
மவுனமாய்த் தானே இருந்தாய்? – அந்த மவுனம் தான் பாரதிக்கண்ணனை அடித்தவர்கள் செய்த வன்முறையை விட மிக மோசமான வன்முறை..

நேரடியாக – உடல் ரீதியாக காட்டப்படும் வன்முறை ஒருபுறம் இருக்க… உளவியல் ரீதியாக செலுத்தப்படும் வன்முறையானது ஏற்படுத்து ஊமைக்காயங்கள் எப்படியிருக்கும் என்று
இவர்கள் அனுபவித்திருப்பார்களானால் – “வன்முறைக்குத் தீர்வு வன்முறையா சார்?” என்று நொன்னை பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். “அம்பேத்கர் பேரைப் போடாம விட்டது
ஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் இந்தளவுக்கு இறங்கிட்டாளே சார்?” தங்கள் ஸ்காலர்ஷிப் வாங்கும் போது எதிர்கொண்ட கேலிப் பார்வைகளும், மெஸில் தனித்து
உட்காரவைக்கப்பட்ட போது எதிர்கொண்ட அவமானங்களும்… பொதுவாக கிராமப் புறங்களிலிருந்து பல்வேறு நேரடி/மறைமுக அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்துவிட்டு
வந்திருக்கும் மானவர்களுக்கு இந்த “சின்ன சமாச்சாரம்” ஒரு நெருப்புப் பொறி தான். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரண்ட கானகமாய் புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
விழுந்த மிகச் சிறிய நெருப்புப் பொறி தான் போஸ்டர் சம்பவம்.

“அப்படியே இருந்தாலும் அவர்கள் அரசின் கவனத்தை அல்லவா ஈர்த்திருக்க வேண்டும்?” அரசு என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறை வடிவம் தான். அரசு இயந்திரத்தின் அங்கமாக
ஆகும் தலித் கூட நாட்பட நாட்பட கருப்புப் பார்ப்பானாய்த் தான் மாறியாக வேண்டும் என்கிற சூழல் தான் நிலவுகிறது. பாப்பாப்பட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம், தின்னியம்.
மேலவளவு – இத்தனைக்கும் பின்னே விழித்தெழாத அரசு, இம்மானவர்கள் எழுதியிருக்கக்கூடிய மூன்று பக்க மணுவிற்கா விழித்திருக்கப் போகிறது? கிராமங்களில் தலித்துகளின் சேரி
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் – அதுவும் காற்று வீசும் திசையின் கீழ்ப்புறத்தில் – இருக்கிறதே.. இந்த அரசு அவர்களையும் ஆதிக்கசாதியினரின் வீடுகளையும் ஒரே பகுதியில் ஏற்படுத்த
முயன்றிருக்கலாமே?

ஆக.. சாதி இருக்கிறது. அதன் ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அது மேலும் மேலும் வலிமையடைந்திருக்கிறது. காலம் மாற மாற அது வெளிப்படும் முறைகளில்
மாற்றமடைந்திருக்கிறதேயொழிய அதன் இருப்பு இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மை தான் சட்டக்கலூரி வன்முறைகளின் மூலம்
இன்னுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாடு நமக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.

சமூக எதார்த்தம் அறியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில அல்பைகள் தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். “என்னாது காந்தி செத்துட்டாரா?” என்ற ரீதியில்,
“என்னாது சாதி இருக்கா? அதுவும் படிக்கிற இடத்துலயே இருக்கா? என்ன கொடுமை சார்?” என்கிறார்கள் தூக்கத்தில் இருந்து விழித்து. இதில் சிலர் உண்மையிலேயே தூங்கி
விட்டவர்கள்.. பலர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த காரியவாதிகள். இந்தக் காரியவாதிகள் தாம் பாரதிக்கண்ணன் அடிபடும் காட்சியைப்பிழிந்து வரும் சோகரசத்தை
மூலதனமாகக் கொண்டு மீண்டும் தொண்ணூறுகள் வராதா, ஆடுகள் முட்டிக் கொள்ளாதா – நாம் ரத்தம் குடிக்க மாட்டோ மா என்று நரிகள் போலக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தக்
காரியவாதிகள் யார் என்று நாம் சொல்லவே வேண்டியதில்லை.. எதை மறைத்தாலும் இவர்கள் குடுமியை மட்டும் மறைத்துவிட முடியுமா என்ன?

இந்த விவகாரம் குறித்து வினவு குழுமத்தினர் எழுதிய மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் மாத்திரமல்லாமல் அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும்
முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சுட்டி கீழே –

1) பண்ணைப்புரம்: இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம்!

2) அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்!

நவம்பர் 21, 2008 Posted by | Alppaigal, medias, politics | | 4 பின்னூட்டங்கள்

சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!

சாரு நிவேதிதா தொடங்கி.. ஜெயமோகன் வரையுள்ள இலக்கிய கழட்டிகளிடமும்.. வலைப்பூ உலகில் பல வடிவத்தில் (மன/மல)குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் சொறியர்களிடமும் ( மேற்படி கோமான்களுக்கு சொறிந்து விட்டுக் கொண்டிருப்பதே தம் கடன் என வாழும் அல்ப்பைகள்) கேட்கவென்றே சில சந்தேகங்கள் இருக்கிறது..

அதெப்படி உங்களுக்கு மட்டும் உலகமே சமூக/பொருளாதார ரீதியில் கொந்தளிப்பான சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்  பின்நவீனம்/முன்நவீனம்/சைடுநவீனம்/அப்பர் & லோயர் நவீனம் என்று இலக்கிய அரிப்பு தீராமல் இருந்து கொண்டேயிருக்கிறது?

பக்கத்தில் நமது ரத்த சொந்தங்கள் வீடிழந்து நாடிழந்து உறவுகளை இழந்து பராரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் போதும் உங்களால் “குட்டிக்கதை” “புட்டிக்கதை” “காமக்கதை” என்று எந்த கூச்சமும் இல்லாமல் வாந்தியெடுக்க முடிகிறதே எப்படி?

சாதாரண மனிதன் ஒருவன் கூட அநியாய சாவுகளைக் கண்டு உள்ளம் குமுறும் போது உங்கள் “இலக்கிய” எழவெடுத்த மனமோ அதில் கூட அழகியலைத் தேடுகிறதே எப்படி?

எழவு வீட்டின் ஒப்பாரியில் இருக்கும் உலக இசையின் கூறு என்னவென்று தேடும் கூறுகெட்ட புத்தி உங்களுக்கு மட்டும் எப்படி?

அவன் கிள்ளினான் / இவன் ஏசினான் என்கிற ரீதியில் உங்கள் உலகத்தைச் சேர்ந்த சக மிருகங்களோடு மல்லுக்கட்ட எடுத்துக் கொள்ளும் அக்கறையில் ஒரு சதவீதமாவது ஈழத்தில் செத்துப் போன எங்கள் சகோதரனுக்காக ஒரு கவிதையோ / கட்டுரையோ எழுத எடுப்பதில்லையே ஏன்?

தாஸ்தாவெஸ்கி~டால்ஸ்டாய்~மிஷெல் பூக்கோ~இந்திய விவசாயி = இந்த வரிசையில் இறுதியில் வரும் இலக்கியவாதி குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே?

ஏழு நிமிடம் பத்து வினாடிகளில் கடவுளை இசையாய்த் தேடும் உங்கள் காதுகளில் ரை இசையில் இன்பம் தேடும் உங்கள் காதுகளில் முப்பது வருடங்களாய் பக்கத்துத் தீவிலும்~ கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இந்திய வயல் வரப்புகளிலும் ஒலித்து வரும் ஒப்பாரி கேட்க வில்லை அல்லவா? அந்தக் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினால் தான் என்ன?

சிதறும் ரத்தத் துளிகளில் ஓவிய நளினம் தேடும் உங்கள் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொறுகினால் தான் என்ன?

போங்கடா நீங்களும் உங்க இலக்கிய மசிரும்..

ஊரே சாவு வீடாய்க் கிடக்க கொண்டாட்டமாய் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவன் அல்பையென்றால் இந்த இலக்கிய நாதாரிகளோ அறிவார்ந்த அல்பைகளாய் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒக்ரோபர் 31, 2008 Posted by | Alppaigal, culture | 7 பின்னூட்டங்கள்

தமிழ்மணி ஒரு கோமாளியா : பரபரப்புத் தகவல்கள்!!

தமிழ்மணம் வட்டாரங்களில் கோமாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை கோமாளிப் பஞ்சம் ஏற்படும் போதும் புதிது புதிதாக எதாவது ஒரு தெருப்புழுதி தோன்றி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டேயிருப்பான்கள்.. அந்த வகையில் எனது இரண்டாண்டு தமிழ்மண வாசக அனுபவத்தில் எவர்கிரீன் கோமாளி ஜோடிகள் அரவிந்தன் நீலகண்டனும் ஜடாயுவும் தான். சமீப காலமாக அவர்கள் வீற்றிருக்கும் அந்த முதலிடத்துக்கு பயங்கரமான ஒரு ஆபத்து தோன்றி இருக்கிறது தமிழ்மணி என்பவர் வடிவத்தில்! மார்க்சியத்தை உடைத்துக் காட்டுவோம் என்று முயன்ற பலரும் பரிதாபகரமாக மண்ணைக் கவ்விவிட்ட நிலையில் புதிதாக நமது தமிழ்மணி மேற்படி முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார். உண்மையில் நமது மூளைக்கு வேலை தரும் வகையில் ஏதாவது கேள்விகள் கேட்டிருப்பார் என்று முதலில் நான் நினைத்துக் கொண்டு தான் அவர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.. பிறகு தான் தெரிந்தது.. நீல்ஸின் பர்மெனெண்ட் ஜாபுக்கே இவர் குண்டு வைக்கப் பார்க்கிறார் என்று..

அவர் சமீப காலத்தில் நிகழ்த்திக் காட்டிய சர்க்கஸ் வித்தைகளில் எனக்குப் பிடித்த சில வித்தைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.. நீங்களும் சிரித்து மகிழலாம்.. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி பேதி, சீத பேதி என்று ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் நான் ஜவாப் அல்ல! இப்போதே சொல்லி விடுகிறேன்.

ஒரு புத்தகத்தை அதன் முன்னுரையை மட்டும் படித்து விட்டு அட்டை டூ அட்டை இவ்வளவு தான் மேட்டர் என்று சொல்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சமாவது கூசும்.. நுனிப்புல் மேயும் கூமுட்டை கூட அவ்வாறு விவாதிக்க கூசுவான். ஆனால் அந்தோ பரிதாம் நமது டமிள்பெல்லுக்கு அந்தளவுக்குக்கூட இங்கிதமோ, வெட்கமோ, கூச்சமோ, கிடையவே கிடையாது. குறைந்த பட்சம் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நானயம் கூட இல்லை.. உலகமயம் பற்றி ஒரு நூலில் தோழர் இராயகரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அதற்கான முன்னுரையை மட்டும் வாசித்து விட்டு பெரிய புடுங்கியைப் போல  நம்ம புத்திசாலி மொத்த புத்தகத்திற்கும் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறது!

அதில் தலைப்பில் நம்ம புத்திசாலி சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு! என்ன ஒரு அறிவு! இவரு பெரிய செவுரு… இவரு வந்து விவாதத்துக்கு எடுத்திட்டா எல்லோரும் போயி கைகட்டி பதில் சொல்லனுமாம்ல? எனக்குத் தெரிந்து தோழர்கள் கடுமையான வேலை நெருக்கடியின் மத்தியிலும் மதிப்பான நேரத்தை செலவு செய்தும் இனையத்தில் பரவலாக இருக்கும் so called அறிவு ஜீவிகள் மத்தியில் “இப்படியும் ஒரு மாற்றுப் பார்வை” இருக்கிறது என்பதை நிறுவிக்காட்டவே இனைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்று மண்ணாங்கட்டிகள், தெருப்புழுதிகள் போன்ற
கழிசடைகளிடம் வந்து அரட்டைக் கச்சேரி நடத்தவெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்க நியாயமில்லை.

( அப்ப நீ மட்டும் ஏண்டா…? என்று கேட்பது புரிகிறது.. செல்லா போன்ற அஷடுகளுக்குக் கூட நேரம் ஒதுக்கிய நான் இன்று எனக்குப் பிடித்த கோமாளிகளான நீலகண்டன் / ஜடாயு இடத்திற்கு போட்டி போடும் தமிழ்மணிக்கும் போனால் போகிறதென்று ஒரு அரைமணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.. அதாவது… தமிழ்மணி வார்த்தையில் சொன்னால்… “இவர் பதிவுகளில் சட்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறவனின் வார்த்தைகள் அதிகம் தென்படுவதால் இதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்”)

ஒக்கே பேக் டு த மேட்டர்..

இதில் இவருக்கு அங்கே கொஞ்சம் அனானி நன்பர்கள் வேறு இருக்கிறார்கள்.. பெயர்கள் காமெடியாக இருக்கும் “பழைய அனானி” “புதிய அனானி” “ரெண்டுக்கும் நடுப்புற அனானி” “புதிய அனானி வெர்ஷன் 2.1.0” இப்படி எத்தனை பேரில் வந்தாலும் கொண்டை மட்டும் ஒன்றே! மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா! இதில் அவருக்கு என்னா சவுரியம்னா.. முதல் அனானியா அவரு வரும்போது ஒரு விஷயத்தை உளரியிருப்பார்.. அதற்கு நமது தோழர்கள் பதில் கொடுத்திருப்பார்கள்.. கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ரெண்டாவது அனானிய வந்து அதே மேட்டரை வேறு வார்த்தைகளில்
கேட்பார்… நாமும் அதான் சொல்லியாச்சே என்று சும்மா மட்டும் இருந்து விட்டால் – கேம் ஓவர்.. நம்ம தல மூனாவது அநானியா வந்து, “இரண்டாவது  அனானி கேட்டதற்கு நன்பர் தியாகு ஏன் பதில் சொல்லலை?” என்று ஒரே மடக்காக மடக்கி விடுவார்.. மொத்தத்தில் “பொழப்புக் கெட்டவன் பொண்டாட்டி தலைய செரச்சான்” என்பது போல இவர் புல்டைம் ஜாபாக இதே வேலையாகவே இருக்கிறார்..

இப்போது இவர் “விவாதத்திற்கு” எடுத்துக் கொண்டிருப்பது புராதன பொதுவுடைமை பற்றி. “எச்சூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…?”  என்று புலம்பி பிரயோசனமில்லை..

உதாரணமாக இப்போது அவரிடம் போய்,

“பொதுவுடைமை என்பது உற்பத்தி சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவான உடைமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தைக் குறிப்பது, அதிலும் வர்க்கமற்ற, பிரிவுகளற்ற சமுதாயத்தைக் குறிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே சமூக அமைப்பு முறை அப்படித்தான் இருந்தது.. இது உலகில் பல பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபனமாகி இருக்கிறது” என்று சீரியஸாக சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்கு அவர்,

“கற்களை எப்படி உற்பத்தி சாதனம் என்று சொல்ல முடியும்? குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான் செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை? அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் – “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும்? கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா?”

இப்போது உண்மையான அக்கறையுடன் அங்கே விவாதிக்கப் புகுந்த நமது தோழருக்கு தலை பம்பரம் போல சுழல ஆரம்பித்து விடும்.. சரி ரெண்டும் ஒரே மாதிரி கேள்வி தானே ஒன்றுக்காவது பதில் சொல்வோம் என்று சொல்லி விட்டு வந்தால், ரெண்டு நாள் கழித்து பதில் சொல்லாமல் விட்ட அந்தக் “கேள்வியை” தனியே கட் பேஸ்ட் செய்து ஒரு பதிவாக போட்டு “இரண்டாவது அனானி நன்பர் தியாகுவுக்கு கேள்வி” என்று ஒரு தனிப்பதிவாக போட்டு விடுவார்..

இது இப்படியே தொடரும்.. எங்கே எதற்கு பதில் சொன்னோம், எந்தெந்த அவதாரத்தில் வந்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று
ஒரு எழவும் புரியாது. இதே புல் டைம் ஜாபாக வைத்திருப்பவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தோழர்கள் தங்கள் பல சொந்த வேலைகளுக்கு மத்தியில் இந்த கிறுக்குத்தனங்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

மொத்தத்தில் வடிவேலுவின் பஞ்சாயத்துப் போலத்தான் நமது தமிழ்மணியின் விவாத முறையும்,

“என்னடா கையப் புடிச்சி இழுத்தியா?”

“என்ன கையப்புடிச்சி இழுத்தியா”

“இல்லப்பா பக்கத்து ஊருக்கும் நமக்கும் ஏற்கனவே தகறாறு.. நீ ஏன் அந்தப் பொண்ணு கையப் புடிச்சி இழுத்தே?”
“என்ன கையப்புடிச்சி இழுத்தியா?”

“அது வந்துப்பா….”

“என்ன வந்துப்பா…?”

“இல்ல….”

“என்ன இல்ல..?”

இப்படியாக அவர் “விவாதித்துக்” கொண்டேயிருப்பார்.. எனக்கென்னவோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்
நீலகண்டன் டெப்பாசிட்டு காலியாகிவிடும் போல் தான் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பேசாமல்
இவன் பேசப் பேச ஒதுங்கி நின்று பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். இவனும் உண்மையடியான் போல தனியே
குரைத்துக் கொண்டு நிற்பான். இல்லையா.. அவனே “இரண்டாவது அனானி” பழைய அனானி, புத்தம் புதிய அனானி, புதிய அனானி ரிலீஸ் வெர்ஷன் 2.1.0 என்று அவன் மனம் திருப்தி அடையும் வன்னம் ஏதாவது ஒரு கமெண்டைப் போட்டு சுவத்தில் சொரிந்து கொள்ளும் எருமை போல சுயஇன்பத்தில் ஆழ்ந்து கிடப்பான்..

பொதுவான குறிப்பு :- பொதுவாக ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து ( அதிலும் இந்தியாவில் நம்மைச் சுற்றியுள்ள நான்கில் ஒருவன் இரவு பட்டினியோடு படுத்துறங்குகிறான், பத்தில் எட்டுப் பேர் நாளுக்கு இருபது ரூபாய்கள் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள் ) இதையெல்லாம் மாற்றியமைக்க மாட்டோமா என்னும் தவிப்பில், அந்த மக்கள் மேல் இருக்கும் காதலின் பேரில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்கிறான். ஒருவன் வந்து
உனது சித்தாந்தம் தவறு என்று சொல்வானானால் அவன் அதற்கு மாற்று என்ன என்பதை முன்வைத்து தான் உரையாட வேண்டும். வெறுமனே  எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “எதிர்க்க” முடியும். அப்படிச் செய்வது பொருட்படுத்தத் தக்கதல்ல!

தோழர்களுக்கு ஒரு குறிப்பு :- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
கருத்து மட்டும் தான் – மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.

நவம்பர் 29, 2007 Posted by | Alppaigal, tamil blogsphere | | 4 பின்னூட்டங்கள்

%d bloggers like this: