செயலின்மையிலிருந்து செயலுக்கு…
நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…
திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…
உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது
மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….
இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….
நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…
அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..
கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!
சுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.
சுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி
வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்
கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..
நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.
இப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது
பதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.
ஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி?
என்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள
வர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலும் எல்லாச் சூழலிலும் நரி பரியாக
வேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.
ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.
எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.
சோபாசத்தி எனும் லும்பன் குறித்து –
லீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த
மேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா? இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்
காட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அப்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,
அந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.
எல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்
அவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –
சோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு
எழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –
லீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது
நடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த
ஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்
பார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க
நாயம்..
அவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்
ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.
திருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.
அவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.
விடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.
ரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்
அனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று
நினைக்கிறேன்.
அவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்
தியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
புதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது – ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.
சில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு “புகழ்”அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் முத்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் – இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை ‘லூசு’ பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
மீடியாவெங்கும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது!
ஆமா, யார் இந்த ராம் சேனா? யார் இந்த முத்தலிக்? எங்கேர்ந்து கெளம்புராய்ங்க?

முத்தலிக்
மேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் – ப்ரமோத் முத்தலிக்!
கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்
தொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்
வாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு
உயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்
கொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.
இந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!
இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்
ஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்
லை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை
செய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா? – அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி
வேர் ஸ்ரீ ராம் சேனா.
இந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது “பிங்க் ஜட்டி” இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த – தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் – பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்!) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.
இவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.
இந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் – இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை!
கேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்
பிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்
கொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் – குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று
சுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.
இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது – மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது. பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்
விரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது
பிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.
கழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்
பிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.
ராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் – அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த
மொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்
தான்!
பாஸிஸ்டுகளின் வெற்றி !!
சமீபத்தில் 1933 மார்ச் 6ம் தேதி ஹிட்லரின் நாஜி கட்சி தேர்தலில் 43.9 சதவீத வாக்குகள் பெற்று வென்றது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு
ரேய்ச்ஸ்டெக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டு அந்தப் பழி கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்தப்பட்டது. வெறியூட்டும் பேச்சுக்களால் மக்களை
சுயநினைவற்றவர்களாக மாற்றி நாஜிக் கட்சி இந்த வெற்றியை அடைந்தது. நாஜிக்கள் அதிகாரத்தில் இருந்த பன்னிரண்டு ஆண்டுகளும்
அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர். இந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் மக்களிடையே கம்யூனிசத்தின் மேலான
அச்சத்தை பூதாகரமாக ஊதிப் பருக்க வைத்திருந்தனர்.
நாஜிக்கள் மக்களிடையே அச்சத்தின் அரசியலை நடத்தி அதன் மூலம் அவர்களிடையே கண்மூடித்தனமான வெறியை ஏற்றி அதன் மூலமே
தமக்கான ஆதரவு தளத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். கோயபல்ஸ் போன்ற தேர்ந்த பொய்யர்கள் மிகத் திறம்பட பொய்ப்பிரச்சாரத்தின்
மூலம் மக்களை ஆடுமாடுகள் போல தமக்குப் பின் அணி திரள வைத்தனர். ஆரிய இனத் தூய்மை, யூத இன எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு
போன்ற மக்கள் விரோத தளத்தின் மேலேயே நாஜிக்களின் சித்தாந்தங்கள் கட்டமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாக இது போன்ற பாஸிஸ்டுகள் ஒரு நார்ஸிஸ்டைப் போல தம்மையே ரசித்துக் கொள்ளும் மனநோய் கொண்டவர்கள். ஆங்கிலத்தில்
பர்சனாலிடி கல்ட் என்பார்கள்; அதாவது தங்கள் தலைமையை ஈடுஇனையற்றது, கடவுளுக்கும் மேலானது, என்பது போல் ஊதிப்பெறுக்கி
காட்டுவதில் வல்லவர்கள் ( larger than life image). தமது குறுகிய வெற்றியை நிலையானது என்று நம்பும் மனநோயாளிகள் இவர்கள். கும்பல்
சார் நீதியே இவர்கள் நம்பும் நீதியாகும். இது போன்ற பாஸிஸ்டுகளின் வீழ்ச்சியானது எந்தளவுக்கு கொடுரமாக இருக்கும் என்பது ஹிட்லரின்
வீழ்ச்சியே நமக்குக் காட்டுகிறது.
பாஸிஸ்டுகள் தமது அரசியல் எதிரிகளை தேசத்துக்கே எதிரிகள் என்பது போல உருவகப்படுத்தி தேசிய வெறியை தூண்டி விடுவதை ஒரு முக்கியமான
தந்திரமாகக் கொண்டிருப்பார்கள். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஜெர்மானியின் விரோதிகள் என்பது போல சித்தரிப்பதில் ஹிட்லர் குறுகிய கால
வெற்றியை பெற்றிருந்தான்.
நாஜிக்கள் பின்பற்றிய அதே வழிமுறைகளைத் தான் ஒரு மயிரளவும் பிசகாமல் பின்பற்றுகிறது இங்கேயுள்ள இந்துத்துவ பார்ப்பனிய பாஸிஸ்ட்
கும்பல். இதில் அவர்களுக்கு அவ்வப்போது வெற்றியும் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் வரலாற்றில் பாஸிஸத்துக்கு ஏற்பட்ட கதியை;
அதற்கு ஏற்பட்ட முடிவை இவர்கள் சந்திக்கப்போகும் நாள் விரைவில் வந்தே தீரும். அன்று ஹிட்லரின் முதுகெலும்பை முறித்து அவனது
சித்தாந்தத்தை மரணக் குழிக்குள் அனுப்பியவரின் சீடர்கள் இந்திய ஹிட்லராக உருவெடுத்து வரும் மோடிக்கான மரணக்குழியை தோண்டுவார்கள்.
குஜராத் தேர்தல் நமக்கு நிறைய பாடங்களை போதிக்கிறது. ஹிட்லருக்கு எதிரி யூதர்களும் கம்யூனிஸ்டுகளும்; மோடி தனக்கு எதிரிகளாக
இஸ்லாமியர்களையும் கம்யூனிஸ்டுகளையும் முன்னிருத்துகிறான். ஹிட்லர் எப்படி தனது அரசியல் எதிரிகளை ஜெர்மானியின் எதிரிகளாகவே
சித்தரித்தானோ அதே போல் மோடியும் இஸ்லாமியர்களை இந்தியாவின் எதிரிகளாக சித்தரிக்கிறான். தேர்தல் மேடைகளில் முஷாரஃபை நோக்கி
வாய்சவடால்களை வீசி இங்குள்ள முஸ்லிம்களும் முஷாரஃபும் ஒன்று தான் என்பதாக பெரும்பான்மை “இந்துக்கள்” மனதில் பதிய வைக்கிறான்.
நாஜிக்கள் நடத்திய அதே அரசியல் தான் மோடியினதும் – அச்சத்தின் அரசியல்!!
ஹிட்லரைப் போலவே மோடியின் அடிப்பொடிகள் இவனை ஒரு பிதாமகனாக சித்தரிக்கிறார்கள். தேர்தல் கூட்டமெங்கும் மோடி கவர்ச்சியாக
சிரிப்பது போன்ற முகமூடிகளை தொண்டர்கள் அணிந்து வலம் வருகிறார்கள். ஹிட்லரிடம் ஒரு கோயபல்ஸ் தான் இருந்தான் ஆனால் மோடியைச்
சுற்றி இருப்பவர்களெல்லாம் கோயபல்ஸையும் விஞ்சும் வாய் வீரர்களாய் இருக்கிறார்கள். தெகல்காவினால் பச்சையாக அம்பலப்பட்ட பின்னும்
எந்த வித வெட்கமோ கூச்சமோ இன்றி அந்தக் கொலைகளை தொலைக்காட்சி காமெராக்கள் முன்னே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ரேய்ச்ஸ்டெக் கட்டிட எரிப்பின் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் சுமத்திய ஹிட்லரைப்போலவே கோத்ரா ரயில் எரிப்பை முஸ்லிம்களை கொடூரமானவர்களாக காட்ட மோடி பயன்படுத்திக் கொண்டான். அந்த சம்பவங்களுக்குப் பின் ஹிட்லரைப் போலவே மிகத் தெளிவாக திட்டமிட்டு ஒரு இஸ்லாமிய இனவொழிப்பை நடத்திக் காட்டினான் மோடி. கொலைகளை ஜெர்மானிய பெருமை – ஆரியப் பெருமை என்னும் போர்வைக்குள் ஒளித்த ஹிட்லரைப் போலவே மோடியும் குஜராத்தி அஸ்மிதாவுக்குள் ஒளிக்கிறான். குஜராத்தி அஸ்மிதா என்னும் ஒளிவட்டத்துக்குள் சோராபுத்தின் சேக் போன்ற அப்பாவி முஸ்லிம் விட்டில்களின் ஆவிகள் ஏராளமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது.
மோடிக்கு எதிராய் குஜராத்தில் “அரசியல்” செய்யும் காங்கிரஸோ ஓனாயின் முன்னே நிற்கும் புடுக்கறுந்த சொறிநாய் போல கூனிக்குறுகி
நிற்கிறது. மோடியின் அராஜக அரசியலைப் பற்றி முனகும் அளவுக்குக் கூட தெம்பில்லாமல் குரல்வளை அறுந்த பன்றியைப் போல தேம்பிக் கொண்டிருக்கிறது
காங்கிரஸ். ஒருவேளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றிருந்தால் கூட அது இந்துத்துவத்தின் தோல்வியாய் இருந்திருக்காது. இது பற்றி
முன்பு கார்க்கி பக்கங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன் நாம் எழுதிய கட்டுரை – https://kaargipages.wordpress.com/2007/12/12/%e0%ae%95%e0%af%
81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-
%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
ஆனால் வரலாறு ஹிட்லர்களை எப்படி சந்தித்தது என்பது நம் முன் ஒரு பாடமாக இன்றும் நிற்கிறது. அன்று செம்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு
தற்கொலை செய்து கொண்ட ஹிட்லரும் மரணக் குழிக்குள் நாஜிக்கள் அமிழ்த்தப்பட்ட சம்பவங்களும் நமக்கு நம்பிக்கையளிப்பதாய் இருக்கிறது.
இங்கும் பார்ப்பன பாஸிஸத்தை முறியடிக்கப்போகிறவர்கள் தோழர் ஸ்டாலினின் சீடர்களான கம்யூனிஸ புரட்சியாளர்கள் தாம்; நக்சல்பாரி அரசியலே
இந்துத்துவ கொடூரத்திற்கான சரியான தீர்ப்பை வரலாற்றில் எழுதப்போகிறது.
அது வரையில் மோடியின் வெற்றியென்னும் சிற்றின்பத்தால் இங்கே தமிழ் வலைத்தளங்களில் துடிக்கும் பூனூல்களுக்கு சொல்லிக் கொள்வது – அடங்குங்கடா…
We are coming!!