கார்க்கியின் பார்வையில்

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!

சுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.

சுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி
வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்
கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..

நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.

இப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது
பதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.

ஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி?

என்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள
வர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலும் எல்லாச் சூழலிலும் நரி பரியாக
வேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.

ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.

எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.

சோபாசத்தி எனும் லும்பன் குறித்து –

லீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த
மேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா? இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்
காட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அப்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,
அந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.

எல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்
அவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –

சோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு
எழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –

லீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது
நடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த
ஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்
பார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க
நாயம்..

அவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்
ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.

திருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.

அவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.

விடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.

ரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்

அனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று
நினைக்கிறேன்.

அவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்
தியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஜூன் 3, 2010 Posted by | Alppaigal, உண்மைத்தமிழன், கார்பொரேட் ஜெயேந்திரன், நர்சிம், பதிவர் வட்டம், போலி கருத்துரிமை, culture, facist, politics, tamil blogsphere, terrorism | 8 பின்னூட்டங்கள்

இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!

புதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது – ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.

சில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு “புகழ்”அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் முத்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் – இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை ‘லூசு’ பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

மீடியாவெங்கும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஆமா, யார் இந்த ராம் சேனா? யார் இந்த முத்தலிக்? எங்கேர்ந்து கெளம்புராய்ங்க?

முத்தலிக்

முத்தலிக்

மேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் – ப்ரமோத் முத்தலிக்!

கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்
தொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்
வாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு
உயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்
கொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.

இந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்
ஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்
லை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை
செய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா? – அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி
வேர் ஸ்ரீ ராம் சேனா.

இந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது “பிங்க் ஜட்டி” இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த – தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் – பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்!) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.

இவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் – இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை!

கேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்
பிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்
கொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் – குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று
சுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.

இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது – மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது.  பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்
விரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது
பிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.

கழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்
பிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.

ராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் – அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த
மொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்
தான்!

பிப்ரவரி 12, 2009 Posted by | facist, terrorism | , , | 4 பின்னூட்டங்கள்

மோடியின் ராம ராஜ்ஜியம்

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும்,
அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.
ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட
காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன்
அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி  இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்?
இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில்
ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம்
இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்
ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம்  என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

கார்கி

ஒக்ரோபர் 26, 2007 Posted by | politics, terrorism | | 9 பின்னூட்டங்கள்