கார்க்கியின் பார்வையில்

இந்தியா விற்பனைக்கு..!!

சில மாதங்கள் முன்பு பி.டி கத்தரிக்காய்க்கு சந்தையில் விற்க அனுமதி வழங்குவதற்கு எதிராக இங்கே கடும் அமளி ஏற்பட்டது. ஜனநாயக
முற்போக்கு சக்திகளோடும், விஞ்சானிகள், அறிவுத் துறையினர், விவசாயிகள் பொது மக்கள் என்று பரவலாக பி.டி கத்தரிக்காய்க்கு ஒரு கடும் எதிர்ப்பு உருவாகியது. பரவலான எதிர்ப்புக் குரல்களோடு  சேர்ந்து கொண்டு என்.ஜி.ஓக்கள் சிலரும் கூட வித விதமான வடிவங்களில்
பி.டி.கத்தரியை எதிர்த்து போராடிய காட்சிகளை நாம் மறந்திருக்க முடியாது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கொஞ்ச நாட்கள் மக்கள் கருத்தறியும் கருத்தரங்கங்கள் என்ற பெயரில் நடத்திய
நாடகங்களையும் தொடர்ந்து பி.டி கத்தரி விஷயத்தில் ‘பொதுக்கருத்து’ ஒன்றை எட்டும் வரையில் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று
அறிவித்திருந்தார். உடனே ஆங்கில ஊடகங்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக என்.ஜி.ஓக்கள் தமது வெற்றியை அறிவித்துக் கொண்டாடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

இதுவரையில் நீங்கள் கேட்டது திரைப்படத்தின் இடைவேளை வரையிலான கதையைத் தான். இடைவேளைக்குப் பின் தான் கதையில் மிக முக்கியமான திடுக்கிடும் திருப்பங்களும் சதிகளும் அரங்கேறுகிறது.  கடந்த மாதத்தின் மத்தியில் இந்தியா அமெரிக்காவோடு விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மத்திய அமைச்சரவையின் இரகசிய ஒப்புதலோடு கையெழுத்திட்டிருக்கிறது. இதனடிப்படையில் இந்திய – அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கார்கில், மான்சாண்டோ  போன்ற பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களை பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறது.

மேலும் அமெரிக்காவோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு விவசாயத்தில் அன்னிய நேரடி தலையீட்டை அனுமதிப்பதற்கும் ஓசையில்லாமல் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நேரடியாக நமது விளைநிலங்களின் மேல் கைவைக்க முடியும். போதிய சட்ட அறிவு இல்லாத ஏழைவிவசாயிகளிடம் நேரடியாக ஏமாற்று ஒப்பந்தங்களைப் போட்டு நல்ல செழிப்பான விளைநிலங்களில் மரபணு மாற்ற விதைகளையும் வீரிய சக்தி கொண்ட உரங்களையும் கொட்டி விஷமாக்கப் போகிறார்கள்.

மேலும் ஏற்கனவே இருந்த தேசிய உயிரிதொழில் நுட்ப ஒழுங்காற்றுச் சட்டத்தில் ( National Biotechnology Regulatory Authority) திருத்தங்கள்
செய்து, உயிரிதொழி நுட்ப ஒழுங்காற்று சட்டம் எனும் பெயரில் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற முயற்சிகள் நடந்து
வருகிறது.

இந்தச் சட்டம் உண்மையில் எவ்வகையிலும் ‘ஒழுங்காற்றப்’ போவதில்லை. இது உயிரிதொழில் நுட்பத்தில் உருவான பொருட்களை சந்தைப்படுத்துபவர்களையும் ஆராய்ச்சியையும் ‘ஒழுங்குபடுத்துவது’ போல ஒரு பாவ்லா காட்டுகிறது. அதாவது மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதிப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது – ஆனால் அதற்காக அது ஏகப்பட்ட ஓட்டைகளுடனும், விதிகள் மீறப்பட்டதை சட்டரீதியாக நிரூபிப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக இருக்கும்படியும் சிக்கலான ஒரு நடைமுறையை முன்வைக்கிறது.

மறுபுறம், மிகக் கச்சிதமாக பொதுமக்களைக் கவ்வுகிறது. அந்தச் சட்டத்தின் 13(63)ம் பிரிவின் படி, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஒருவர் எதிர்த்து பேச வேண்டும் என்றாலே தகுந்த ‘அறிவியல்’ ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரைக்கும் சிறை தண்டனையோ அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மற்றொரு பிரிவின் படி, மாநில அரசாங்கம் மரபணு தொழில்நுட்பம் தொடர்பாக கொண்டு வரும் எந்தவிதமான சட்டத்தையும் மத்திய அரசின் இந்தச் சட்டம் அமுக்கிவிடும். இதன் 27(1) பிரிவின் படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூட மரபணு மாற்றப் பயிர்கள் விஷயத்தில் செல்லுபடியாகாது.

இப்போது ஜெயராம் ரமேஷ் பின்வாங்கிய சூழலையும் அந்தப் பின்வாங்களையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். மக்களிடையேயும், விஞ்ஞான அறிஞர்கள் மட்டத்திலும், விவசாயிகள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு மற்றும் சில மாநில அரசுகள் மரபணு மாற்ற கத்தரிக்காயை தடை செய்யும் அரசாணை வெளியிட்டிருந்த சூழலில் தான் மத்திய அரசு பின்வாங்கியது. இப்போது போடப்படவிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க எத்தனிக்கிறார்கள்.

நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் விவசாய நிலங்களை ஒப்படைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் – அவர்கள் விளைவிக்கும் மரபணு மாற்ற பயிர்களை சந்தைப்படுத்தும் போது எதிர்ப்புகள் உருவானால் அதை அடக்கி ஒடுக்க ஒரு சட்டம். சுதந்திரச் சந்தையைப் பற்றி வாய்கிழிய பேசும் ஆங்கில ஊடகங்கள் இந்த சுதந்திரச் சந்தையில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. நாளைக்கு பி.டி காய்கறிகளையும் அரிசியையும் வாங்க மறுப்பீர்களானால் உங்கள் மேல் கூட இந்தச் சட்டம் பாயும். நீங்கள் எதைத் தின்ன வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்க விடாத சுதந்திரம் தான் தனியார்மய தாசர்கள் பேசும் சுதந்திரச் சந்தை.

இது முதலாளிகளுக்கான – அதுவும் அமெரிக்க பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கான – சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டம். மக்கள் மேல் மரபணு மாற்றப் பயிர்களை தினிக்க பின்வாசல் வழியாய் நுழையப்போகும் கருப்புச் சட்டம். நேற்றைய செய்திகளில் குஜராத்தில் பி.டி பருத்தியில் அதன் விஷத்தையும் முறியடித்து தாக்கும் காய்ப்புழுக்கள் தோன்றி பரவுகிறது எனும் செய்தி படத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், இப்படிச் செய்தி வெளியிடுவதும், அதை நீங்கள் வாசித்து இன்னொருவரிடம் சொல்லுவதையும் கூட குற்றமாக்கி
தண்டிக்க முடியும்.

அவுரிச் செடி பயிரட மறுத்த விவசாயிகளை அன்றைக்கு பிரிடிஷ் காலனிய போலீசு அடித்து உதைத்து கட்டாயப்படுத்தியது. இன்றைக்கு மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடவும் – அதை சந்தையில் நீங்கள் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. அது காலனிய யுகம் என்றால் இது மறுகாலனிய யுகம். முதலில் பி.டி கத்தரியை அனுமதிக்கப் போவதாகச் சொல்லி ஒரு முன்னோட்டம் பார்த்து விட்டு; அதற்கு எந்த விதமான எதிர்ப்பு எந்த வகையிலெல்லாம் வருகிறது என்று ஆழம் பார்த்து விட்டு – இப்போது எதிர்ப்புகளை முற்றிலும் ஒடுக்க
பக்காவான சட்டங்களை இயற்றி நேரடியாக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது ஆளும் கும்பல்.

மக்கள் எதிர்ப்புகளை மக்களோடு மக்களாக ஊடுருவி அந்த எதிர்ப்புப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திச் சென்று சரியான தருணத்தில் கைகழுவி மக்களின் முதுகில் குத்தும் துரோகத்தை அன்றைக்கு காலனிய காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரசு செய்தது என்றால் – இன்றைக்கு அதே வேளையை என்.ஜி.ஓக்கள் செய்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு மேஸ்திரி வேலை பார்க்கிறது. பாத்திரங்கள் மட்டும் தான் மாறியிருக்கிறது – கதை அப்படியே தான் தொடர்கிறது.

பி.டி கத்தரியை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு – மத்திய அரசு தற்காலிகமாய் தள்ளிவைக்கிறோம் என்று சொன்னதையே வெற்றியாக அறிவித்து விட்டு இப்போது அரசு மீண்டும் கருப்புச் சட்டங்களின் மூலம் மரபணு தொழில்நுட்பத்தை பின்வாசல் வழியாக அனுமதித்திருக்கும் நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு வரையில் பிலிம் காட்டிக் கொண்டிருந்த என்.ஜி.ஓக்கள் இப்போது தலைமறைவாகி விட்டார்கள்.

இது உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள வேண்டிய தருணம். தமக்குள் ஒன்றுபட்டு இந்த அமெரிக்கதாசர்களைத் தோற்கடித்து தூக்கியெறியாத வரை விடிவுகாலம் கிடையாது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் மெய்யான நாட்டுப்பற்று கொண்டவர்கள் ஒன்றுபட்டு போராடி மக்கள் எதிரிகளையும் துரோகிகளையும் முறியடிக்க முன்வர வேண்டும்.

மார்ச் 24, 2010 Posted by | politics | , , , , , | 5 பின்னூட்டங்கள்

மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!

இன்று வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த வலைப்பதிவு. ஏதோ சில்லறை வோணும்னு சொல்றாகளே என்னா மேட்டருன்னு போய் பாத்தா…”ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவோம்” என்று காரசாரமாக போட்டுத்தாக்கியிருந்தார்கள். கொஞ்சம் பின்னே போனால், ” தமிழகக்திற்கு மாற்றம்: காங்கிரசுக்கோ,திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, ஓட்டு போடக்கூடாது; போட மாட்டோ ம்” என்று பிளிறி இருந்தார்கள். யார்ராதுன்னு பாத்தா…. நம்ம குழலி! அப்ப பா.ம.கவுக்கு? நிச்சயம் பா.ம.கவுக்கு ஓட்டுப்போட்டுத்தான் ஆக வேண்டும்.. ஏன்னா, இவுக தான் மத்திய அரசுல இருந்துகிட்டு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் கொடுப்பதையெல்லாம் தட்டிக் கேட்டுப் புடுங்கிக் கத்தை கட்டிவிட்டார்களாச்சே..

அட, கொறஞ்சது “அய்யா.. நமக்கும் உனக்கும் இனி ஆவாது. நீ எங்க மக்கள கொல்றவனுக்கு ஆயுதம் தர்ரே.. நீயே கூட நின்னு கொல்றே.. நமக்குள்ளே ஒட்டாது.. அத்துக்கலாம்”அப்படின்னு சொல்லி காங்கிரஸ் கூட்டனியிலிருந்தாவது வெளியே வந்திருந்தா… லிஸ்டுல பா.ம.க பேர் விட்டுப்போனது நியாயம்னு சொல்லலாம். அட இவங்கய்யாவே இன்னும் சொனியா காலை நக்கிட்டு இருக்கான்… கேவலம் அமைச்சர் பதவி – அத்தத் தூக்கியெறிய மனசில்லெ – துப்பில்லெ… பொறுக்கி அரசியல் ( அதாவது காங்கிரஸ் போடறதபொறுக்கித் திங்கர அரசியல் ) செய்யற கட்சி பா.ம.க – அந்தாளு போன வாரம் பேப்பர்ல சொல்றான் “ஜெயலலிதா கூட கூட்டனி வைக்க கருணாநிதி நிர்பந்திக்கிறார்” அப்படின்னு… எந்த ஜெயலலிதா…….? விடுதலைப்புலிகளையல்ல – ஈழத்தமிழ் மக்களையே எதிரிகளாகக் கருதும் ஜெயலலிதா! விடுதலைப்புலிகளையல்ல – ஈழத்தமிழ் மக்களின் ஈரக்குநலயை அறுத்தெறியத் துடிக்கும் பாப்பாத்தி ஜெயலலிதா! நல்லா இருக்குடா ஓன் யோக்கியத… இவனெல்லாம்…. தமிழினவாதி – தமிழ் குடி தாங்கி – லொட்டு… லொசுக்கு – மயிறு….மட்டை.

நம்ம நன்பர் குழலி நியாயமா பா.ம.கவயும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா பாராட்டியிருக்கலாம். செல்லமா சொல்றாப்ல.. “ராமதாஸ் மீனுக்கு வாலாகவும்….பாம்புக்குத் தலையாகவும்….”…ஏன் மென்னு முழுங்கறீங்க?? நான் சொல்றேன் – ராமதாஸ் மொத்தமாகவே பாம்பு தான்! சாதி தான் ராமதாஸின் அரசியல்.. இந்த தமிழினவாதி வேஷமெல்லாம் ஒரு பரந்து பட்டதளத்தில் பா.ம.கவை எஸ்டாப்ளிஷ் செய்யும் முயற்சி. அந்நியர் ஓட்டு பா.ம.கவுக்கு இல்லை என்ற செருப்படி பட்டவுடன் இப்போ தமிழின அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு டகுல் பாச்சா காட்டுகிறார் – அதையும் ஒழுங்கா செய்யாம சொதப்பல் வேறு – வேணும்னா டகுல் பாச்சா காட்டுவது எப்படி என்று சீனியர் ராமதாஸான கருணா(நிதி)விடம் போய்ஜூனியர் கருணா(நிதி)யாகத் துடிக்கும் ராமதாஸ் ட்யூஷன் கற்றுக் கொள்ளலாம்.

ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவார்களாம். எதுக்கு……?

இன்னிக்கு காங்கிரஸ் காலை நக்குவதில் இருந்து முன்னேறி இன்னொருத்தன் காலை நக்குவதற்கா? இந்திய ஓட்டரசியல் சட்டகத்திற்குள் நின்று கொண்டு எந்தக் கொம்பனாக இருந்தாலும் ஈழ விடுதலைக்காக ஒரு மயிரையும் புடுங்கி விட முடியாது. ஈழ விடுதலை என்றில்லை இந்தப் பிராந்தியத்தில் நிகழும் எந்த இன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்..

சேஞ்சு சேஞ்சுன்னு ஓபாமா கணக்கா பிளிர்ராங்களே… அப்படி அந்த ஓட்டரசியலின் லிமிட்டேசன் என்னவென்பது தமிழகத்தில் பாயில் சுச்சா போகும் சுள்ளான் கூட சொல்லி விடுவான்.. தி.மு.க ஏற்கனவே வெளக்கெண்ணையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கிறது… இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசின் உரிமை அதையெல்லாம் நம்மாளே கேட்க முடியாதுன்னு சொல்லியாச்சு….. மனித சங்கிலி, ஆட்டு சங்கிலி, மாட்டு சங்கிலி, குரங்கு சங்கிலின்னு கலைஞர் கைவசம் ஏகப்பட்ட ஐடியா இருக்கு.. முழுமையான தரகுவர்க்க கட்சியாகிவிட்ட தி.மு,க இந்தப் போரில் இந்திய ஆளும் தரகு வர்க்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக வாயைத் திறக்கக் கூட முடியாது.

காங்கிரசுக்கும் அ.தி.மு.கவுக்கும் தமிழன் செத்தா சந்தோஷம்; அவன் ஈழத்தமிழனா இருந்தாலும் சரி தமிழகத் தமிழனா இருந்தாலும் சரி. பாமக யோக்கியதை என்னான்னு இன்னொரு தடவ சொல்லத் தேவையில்லை… திருமா ஏதோ பிட்டு போட்டு பாக்கறாரு… ஆனா, தமிழ்நாட்டின் பரம்பரை வழக்கமான தி.மு.க vs அ.தி.முக என்ற தேர்தல் கள நிலைமையை ஒத்துதான் திருமாவின் அரசியல் அமையும். தனியே ஈழத்தை முன்னிட்டு ஒரு கூட்டனி அமைவதற்கான லேசான அறிகுறி கூட இல்லை. வழமை போலவே கூட்டனிக் கணக்குகள் அமைந்து விட்டால்….? அவரும் வைக்கோவைப் போல – அதாவது காயடிக்கப்பட்ட நாயைப் போல – அம்மா கிட்டயோ அய்யா கிட்டயோ அப்ரூவல் வாங்கிட்டுத் தான் மேற்கொண்டு பேசவே முடியும்…

தே.மு.தி.க? இந்தத் தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்து சூட்டிங்ல பிஸியாய்டுவார் – இப்பவே கதை கேட்க ஆரம்பித்து விட்டதாக கேள்வி.. ப்ரொடியூசர் கெடைக்கலீன்னா கலைஞர் டீவி மெகா சீரியல்ல அப்பா வேசம் குடுக்கறதா அழகிரி சொல்லியிருக்காரம் !

ச.ம.க ? 1977 ரிலீஸ்

வக்காளி… விஜயகாந்து சரத்துகுமாரெல்லாம் அரசியல்வாதி… இந்த கேவல நிலை தான் இந்திய தேர்தல் அரசியல் வந்து சேர்ந்திருக்கும் நிலை.

அப்புறம் ஒரு ஜோடி தோலாந்துருத்திக இருக்கானுங்க. அதுல ஒன்னு சி.பி.எம் இன்னொன்னு சி.பி.ஐ. மொதல் ஆளு ஜெயா மாமி வீட்டு டாய்லெட்ல அடைப்பை எடுக்க போயிக்கான்.. அடுத்தாளு அவிங்க தோட்டத்துக்கு தண்ணி காட்டப் போயிருக்கான்.. அவ்வளவு தான்

இதெல்லாம் ஒன்னும் வெளங்காது..

சரி…. ஒரு வாதத்துக்காக ஈழ விடுதலையை அங்கீகரிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி கட்டி தேர்தலை வென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்து விடுவார்கள்? சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் – அவ்வளவு தான் முடியும்! அவ்வளவுக்கு தான் உரிமை இருக்கிறது. சரி அப்படியே தில்லா மைய்ய அரசுக்கு விரோதமாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டே மக்களை அணி திரட்டினால் – ஆட்சியைக் கலைப்பான் – இல்லேன்னா ராணுவத்தை அனுப்பி நொங்கைக் கழட்டுவான். இங்கே இருக்கும் தேர்தல் அரசியல் என்பது மக்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத விதிகளைக் கொண்டிருக்கிறது – அப்படியே வருந்திக் கூப்பிட்டாலும் மக்கள் கிட்டே
நெருங்க முடியாத அளவுக்கு ஜனநாயகமற்று இருக்கிறது.. எனவே அப்படியான ஒரு நெருக்கடி மத்தியிலிருந்து ஏவிவிடப்படும் போது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் கட்சிகளின் டப்பா டான்ஸாடி விடும்.

இன்னிக்குத் தேதியில் தமிழகத்தில் பரவலாக மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்… ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் இங்குள்ள தமிழனின் உள்ளத்தை பதறச் செய்து கொண்டிருக்கிறது… அங்கே மக்கள் படும் பாடு நம் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது… இந்த உணர்வுகளை அரசியல்படுத்த வேண்டும் ( அரசியல்படுத்த வேண்டும் வோட்டுப்படுத்தக் கூடாது) தமிழக மக்களின் அரசியல் எழுச்சி இந்தியக் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்னும் நிலை வந்தால் தான் அங்கே போர் நிற்கும். ஆனால் மேற்சொன்ன வலைத்தளமாகட்டும், இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் களத்திலிறங்கியிருக்கும் ஓட்டுக்கட்சிகளாகட்டும் இதை எப்படி தமது கட்சிக்கு சாதகமான ஓட்டுக்களாக கன்வெர்ட் செய்வது
என்பதிலே தான் குறியாக இருக்கிறார்கள்.

ஆனானப்பட்ட கருணாநிதியே இத்தனை வருச தேர்தல் அரசியலுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் நிலை இந்தப் பரிதாபகரமான நிலைதான் என்னும் போது.. அரசியலில் பல பழங்களைத் தின்று பல கொட்டைகளையும் சில ***ட்டைகளையும் போட்டவரே இன்றைக்கு சாத்திக்கிட்டு ஓக்காந்திருக்கும் போது… வேறு எவராலும் இந்த தேர்தல் அரசியல் பாதையில் மக்களைத் திரட்டவோ – அதன் மூலம் மைய்ய அரசைப் பணிய வைக்கவோ – அதன்மூலம் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ – இந்தியாவையும் இலங்கையையும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வைக்கவோ – முடியாது.

மக்கள் எழுச்சியை தேர்தல் அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் இட்டுச் செல்வது என்பது இவ்வெழுச்சிக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகவே முடியும்.

மார்ச் 3, 2009 Posted by | politics | | 1 பின்னூட்டம்

   

%d bloggers like this: