கார்க்கியின் பார்வையில்

மன்மோகன் சிங் என்னும் பொய்யர்

அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விஞ்ஞானிகளும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகளும் சந்தேகக் குரல் எழுப்பிய போதெல்லாம்.. பிரதமர் அதை சமாளிக்கும் விதமாக அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகள் இப்போது அம்பலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது..

இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களுக்கெல்லாம் “அதான் அயித்தானே சொல்லிட்டாவளே.. ஏன் வருத்தப்படறீய..?” என்று மாமன் மச்சான்களுக்குள் பேசிக் கொள்வது போல “அதான் புஸ் எங்க ஊட்ல சாப்பிடும் போது இப்படியெல்லாம் நடக்காதுன்னு சொல்லிட்டாரே?” என்று சமாளிப்பாக சொன்ன பொய்கள் ஒவ்வொன்றாக அவிழத்துவங்கி விட்டிருக்கிறது இப்போது.

“நாடு அணுசக்தியில் வல்லரசாவதைத் தடுப்பதே இவிங்களுக்குப் பொழப்பாப் போச்சி.. மன்மோகன் சிங் எம்பூட்டு நல்லவரு..? பெரிய படிப்பெல்லாம் படிச்ச மேதாவி.. அறிவுசீவி.. “  என்கிற ரீதியில் பேசி/எழுதி வந்த எல்லார் முகத்திலும் நெய்வேலி நிலக்கரியை குழைத்துக் கட்டி பூசி விட்டார் மன்மோகன் சிங்.

இது குறித்து அசுரன் தளத்தில் வெளியான கட்டுரை -http://poar-parai.blogspot.com/2008/08/i.html

D.Cயில் வெளியான இன்றைய தலைப்புச் செய்தி -

செப்டம்பர் 4, 2008 Posted by | politics | , | 1 மறுமொழி

   

Follow

Get every new post delivered to your Inbox.

Join 48 other followers