அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!
“…..OK. Let me look in to the problem and come back to you shortly.. Thanks for calling. Bye” அரை மணி நேரமாய் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கனிடமிருந்து
கத்தரித்துக் கொண்டு தலையில் மாட்டியிருந்த ஹெட்போனை உருவிக்கொண்டே திரும்பினான் சேல்லி.. இல்லை செல்வா என்னும் செல்வேந்திரன். அமெரிக்க வாய்
கோணிவிடக்கூடாது என்பதற்காக செல்வேந்திரன் “சேல்லி” ஆகியிருந்தான்.
“ஹேய் பாலா.. வர்றியா ஒரு தம் போட போறேன்.. கம்பெனி குடு” என்றான் பாலா எனப்படும் பாலமுருகனாகிய என்னைப் பார்த்து.
“சரி வா “
இது ஒரு ரிமோட் சப்போர்ட் செண்டர். அமெரிக்கனுக்கு அரித்தால் சொறிந்து விட வேண்டும் – அதாவது அவனது சிஸ்டத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் நாங்கள் இங்கிருந்து
சரிசெய்ய வேண்டும். அன்புமணியின் புண்ணியத்தால் கம்பெனிக்குள் புகைப்பிடிக்க தடையென்பதால் கம்பெனி கேட்டுக்கு நேர் எதிரே இருக்கும் பெட்டிக்கடை தான் போயாக
வேண்டும். ஒரு கிலோமீட்டர் நடை.
“Bull shit.. what the hell they are thinking” என்றான்
“என்னடா என்ன பிரச்சினை?”
“These bloody politicians… நம்ம நாட்டில தம்மடிக்கக் கூட சுந்தந்திரமில்லே. ஏதோ சர்வாதிகார நாடு மாதிரியில்லே இருக்கு”
“ஓ.. தம்மடிக்க விட்டிருந்தா இந்தியா முழு சுந்தந்திரம் உள்ள நாடுன்னு அர்த்தமாயிடுமா?”
“…….” பேசாமல் தனது ஐ-பாடின் இயர் போனைக் காதுக்குள் சொறுகிக் கொண்டே ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை…’ என்று முணுமுணுத்துக் கொண்டே நடையைப் போட்டான்.
மணி அண்ணன் எங்களை தூரத்தில் பார்த்த போதே இரண்டு தம்ளரில் டீயை ஊற்றிவிட்டு ஒரு சிகரெட்டை தனியே எடுத்து வைத்தார். பக்கத்தில் வந்ததும்
அவரின் டிரேட் மார்க் சினேகமான புன்னகையை வீசினார்.
“என்னா சார் காலையிலேர்ந்து காணமே”
“கொஞ்சம் வேலை அதிகம்ணா” ஒரு டீயை நான் எடுத்துக் கொண்டு ஒன்றை அவனிடம் நீட்டினேன். சிகரெட்டை அவனே பொறுக்கியெடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.
மணி அண்ணான் அழுக்குத் தண்ணீர் நிரம்பியிருந்த டிரேயில் கிடந்த தம்ளர்களை அள்ளிக் கொண்டு கொஞ்சம் தள்ளியிருந்த கழுவும் இடம் நோக்கி சென்ற போது தான் அந்த
நாயைக் கவனித்தேன். சாப்பிட்டு இரண்டு நாட்களாகியிருக்கும் போலிருந்தது. வயிறு முதுகெலும்போடு ஒட்டியிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து பெட்டிக் கடையின் குப்பைகள்
போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு அட்டைப் பெட்டியினுள் தலையை நுழைத்து ஏதாவது கிடைக்குமா என்று துழாவிக் கொண்டிருந்தது. அடிக்கடி தலையை உயர்த்தி சற்று தொலைவில்
உட்கார்ந்து தம்ளர்களைக் கழுவிக்கொண்டிருந்த மணி அண்ணா மேல் ஒரு கண் பார்த்துக் கொள்வது மீண்டும் தலையை பெட்டிக்குள் நுழைத்து துழாவுவதுமாய் இருந்தது. உள்ளே
ஏதோ அகப்பட்டிருக்க வேண்டும் போல – வரட் வரட் என்ற சத்தத்தோடு அதை வெளியே இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மணி கவனித்து விட்டார்.
கவனித்ததும் மெல்ல ஓசைப்படாமல் நடந்து குப்பை பெட்டியை நோக்கி வந்தார். நாய் உள்ளே ஏதோ அகப்பட்டுக் கொண்ட சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாய் தலையை மேலே
தூக்கவில்லை. அதற்குள் மணி நாயின் பக்கவாட்டில் வந்து நின்றவர் அதன் வயிற்றைப் பார்த்து ஓங்கி ஒரு உதை விட்டார். நாயின் வயிற்றுக்குள் ஒரு பிரளயமே நடந்திருக்க
வேண்டும்.
கொல்ல்ல் கொல்ல்லென்று ஈனசுவரத்தில் அலறிக்கொண்டே சுருண்டு போய் ஒரு பத்தடி தள்ளி விழுந்தது. தலையைப் பரிதாபமாய் தூக்கிப் பார்த்து விட்டு ஓடி விட்டது. இதைப்
பார்த்துக் கொன்டிருந்த செல்வாவுக்கு சட்டென்று முகம் சிவந்து விட்டது…
“Ohhh my fucking God…. யோவ்.. அந்த நாய் என்னய்யா பாவம் பண்ணிச்சி. ஏன்யா அதை அடிச்சே. Rascal இரு இரு புளூக்ராஸ்க்கு போன் பன்றேன்.. உன்னையெல்லாம் உள்
ளே
தள்ளினாத்தான்யா புத்தி வரும்…” என்று பொறிந்து தள்ளிக்கொண்டே மொபைல் போனை பாக்கெட்டில் இருந்து உருவினான்.
“சார்… இந்த நாயிங்க பெட்டில இருக்க குப்பைய அள்ளிட்டுப் போய் கம்பெனி கேட்டுக்கு முன்னே போட்டிருது சார். உங்க கம்பெனிகாரங்க போன வாரம் வந்து சத்தம்
போட்டாங்க சார். இனி குப்பை விழுந்தா பெட்டிக் கடைய காலி பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லிட்டாங்க சார். நம்ப பொழப்பே இத நம்பித் தான் சார் ஓடுது.. என்னா சார்
பண்ணட்டும் நான்.. இங்கே நாளுக்கு எறநூறு டீ ஓடுது.. அத நம்பித்தான் சார் எங்க குடும்பமே சாப்பிடுது” முடிந்த வரையில் அதிக “சார்” இருக்கும் படி பார்த்துக்கொண்டார்.
“அதுக்காக நாயை அப்படியா ஒதப்பே? மனசுல ஈரமேயில்லையா மேன்” உச்சஸ்தாயியில் கத்தினான் செல்வா.
“செல்வா… விடு – நீ கெளம்பு மொதல்லே” இந்த நேரம் அவனிடம் எதுவும் பேசி புரியவைத்து விட முடியாது என்று எனக்குத் தெரியும்.
அவரிடம் திரும்பி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண் காட்டிவிட்டு இரண்டு டீக்கும் அவனது சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுத்து விட்டு அவன் தோளைப் பற்றி நடத்திக் கூட்டி வந்தேன்.
“ச்சே.. என்னா மனுசங்க பாத்தியா பாலா.. அந்த ஜீவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்.. அதுவே பாவம் பசியோட இருந்தது.” இன்னும் முகம் சிவந்திருந்தது.
“அந்த நாய் பாவம் தான்.. ஏன் மணி பாவமில்லையாடா? அவர் குடும்பமே அந்தக் கடைய நம்பித்தான் இருக்கு, நாய்க்கு அவர் பாவம் பார்த்தா அவங்களுக்கெல்லாம் யார் சோறு
போடறது? நீ போடுவியா?”
“இல்ல…. ஆனாலும்…”
“ச்சீ நிப்பாட்டுடா.. ஒன் ஜீவ காருன்யத்த பெட்ரோல் ஊத்திக் கொளுத்த – மனுசனும் ஜீவன் தாண்டா.. ஏன் இந்த ஜீவன் மேல மட்டும் காருண்யம் வர மாட்டேங்குது உனக்கு?”
“அது… அது…” வார்த்தையைத் தேட ஆரம்பித்தான். பின் நிறுத்தி விட்டு என்னை ஏறிட்டுப் பார்த்தான். ‘நீயெல்லாம் மனுசனா இல்ல மிருகமா’ என்கிற மாதிரி ஒரு பார்வையை வீசி
விட்டு ஐ-பாடின் இயர் போனை மீண்டும் பொறுத்திக் கொண்டான் – “நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழையில்” மீண்டும் நனைய ஆரம்பித்தான்.
‘இவனுக மண்டையில அமில மழை தான் பெய்யனும்’ என்று நினைத்துக் கொண்டேன்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மறுமொழியவும்
-
அண்மை
- உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்..!
- மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!
- நான் கடவுள் விமர்சனம்
- இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
- அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!
- பார்ப்பனியத்தின் இருப்பு!!
- ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!
- சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!
- முதலாளித்துவம் நடத்தும் பாடம்
- அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..
- ஒரு தேவதையின் மரணம்…!
- மன்மோகன் சிங் என்னும் பொய்யர்
-
இணைப்புகள்
-
தொகுப்புகள்
- செப்டம்பர் 2009 (1)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (2)
- டிசம்பர் 2008 (1)
- நவம்பர் 2008 (2)
- அக்டோபர் 2008 (3)
- செப்டம்பர் 2008 (2)
- ஆகஸ்ட் 2008 (1)
- மே 2008 (5)
- டிசம்பர் 2007 (3)
- நவம்பர் 2007 (2)
- அக்டோபர் 2007 (8)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS