கார்க்கியின் பார்வையில்

தமிழ்மணி ஒரு கோமாளியா : பரபரப்புத் தகவல்கள்!!

தமிழ்மணம் வட்டாரங்களில் கோமாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை கோமாளிப் பஞ்சம் ஏற்படும் போதும் புதிது புதிதாக எதாவது ஒரு தெருப்புழுதி தோன்றி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டேயிருப்பான்கள்.. அந்த வகையில் எனது இரண்டாண்டு தமிழ்மண வாசக அனுபவத்தில் எவர்கிரீன் கோமாளி ஜோடிகள் அரவிந்தன் நீலகண்டனும் ஜடாயுவும் தான். சமீப காலமாக அவர்கள் வீற்றிருக்கும் அந்த முதலிடத்துக்கு பயங்கரமான ஒரு ஆபத்து தோன்றி இருக்கிறது தமிழ்மணி என்பவர் வடிவத்தில்! மார்க்சியத்தை உடைத்துக் காட்டுவோம் என்று முயன்ற பலரும் பரிதாபகரமாக மண்ணைக் கவ்விவிட்ட நிலையில் புதிதாக நமது தமிழ்மணி மேற்படி முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார். உண்மையில் நமது மூளைக்கு வேலை தரும் வகையில் ஏதாவது கேள்விகள் கேட்டிருப்பார் என்று முதலில் நான் நினைத்துக் கொண்டு தான் அவர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.. பிறகு தான் தெரிந்தது.. நீல்ஸின் பர்மெனெண்ட் ஜாபுக்கே இவர் குண்டு வைக்கப் பார்க்கிறார் என்று..

அவர் சமீப காலத்தில் நிகழ்த்திக் காட்டிய சர்க்கஸ் வித்தைகளில் எனக்குப் பிடித்த சில வித்தைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.. நீங்களும் சிரித்து மகிழலாம்.. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி பேதி, சீத பேதி என்று ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் நான் ஜவாப் அல்ல! இப்போதே சொல்லி விடுகிறேன்.

ஒரு புத்தகத்தை அதன் முன்னுரையை மட்டும் படித்து விட்டு அட்டை டூ அட்டை இவ்வளவு தான் மேட்டர் என்று சொல்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சமாவது கூசும்.. நுனிப்புல் மேயும் கூமுட்டை கூட அவ்வாறு விவாதிக்க கூசுவான். ஆனால் அந்தோ பரிதாம் நமது டமிள்பெல்லுக்கு அந்தளவுக்குக்கூட இங்கிதமோ, வெட்கமோ, கூச்சமோ, கிடையவே கிடையாது. குறைந்த பட்சம் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நானயம் கூட இல்லை.. உலகமயம் பற்றி ஒரு நூலில் தோழர் இராயகரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அதற்கான முன்னுரையை மட்டும் வாசித்து விட்டு பெரிய புடுங்கியைப் போல  நம்ம புத்திசாலி மொத்த புத்தகத்திற்கும் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறது!

அதில் தலைப்பில் நம்ம புத்திசாலி சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு! என்ன ஒரு அறிவு! இவரு பெரிய செவுரு… இவரு வந்து விவாதத்துக்கு எடுத்திட்டா எல்லோரும் போயி கைகட்டி பதில் சொல்லனுமாம்ல? எனக்குத் தெரிந்து தோழர்கள் கடுமையான வேலை நெருக்கடியின் மத்தியிலும் மதிப்பான நேரத்தை செலவு செய்தும் இனையத்தில் பரவலாக இருக்கும் so called அறிவு ஜீவிகள் மத்தியில் “இப்படியும் ஒரு மாற்றுப் பார்வை” இருக்கிறது என்பதை நிறுவிக்காட்டவே இனைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்று மண்ணாங்கட்டிகள், தெருப்புழுதிகள் போன்ற
கழிசடைகளிடம் வந்து அரட்டைக் கச்சேரி நடத்தவெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்க நியாயமில்லை.

( அப்ப நீ மட்டும் ஏண்டா…? என்று கேட்பது புரிகிறது.. செல்லா போன்ற அஷடுகளுக்குக் கூட நேரம் ஒதுக்கிய நான் இன்று எனக்குப் பிடித்த கோமாளிகளான நீலகண்டன் / ஜடாயு இடத்திற்கு போட்டி போடும் தமிழ்மணிக்கும் போனால் போகிறதென்று ஒரு அரைமணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.. அதாவது… தமிழ்மணி வார்த்தையில் சொன்னால்… “இவர் பதிவுகளில் சட்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறவனின் வார்த்தைகள் அதிகம் தென்படுவதால் இதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்”)

ஒக்கே பேக் டு த மேட்டர்..

இதில் இவருக்கு அங்கே கொஞ்சம் அனானி நன்பர்கள் வேறு இருக்கிறார்கள்.. பெயர்கள் காமெடியாக இருக்கும் “பழைய அனானி” “புதிய அனானி” “ரெண்டுக்கும் நடுப்புற அனானி” “புதிய அனானி வெர்ஷன் 2.1.0″ இப்படி எத்தனை பேரில் வந்தாலும் கொண்டை மட்டும் ஒன்றே! மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா! இதில் அவருக்கு என்னா சவுரியம்னா.. முதல் அனானியா அவரு வரும்போது ஒரு விஷயத்தை உளரியிருப்பார்.. அதற்கு நமது தோழர்கள் பதில் கொடுத்திருப்பார்கள்.. கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ரெண்டாவது அனானிய வந்து அதே மேட்டரை வேறு வார்த்தைகளில்
கேட்பார்… நாமும் அதான் சொல்லியாச்சே என்று சும்மா மட்டும் இருந்து விட்டால் - கேம் ஓவர்.. நம்ம தல மூனாவது அநானியா வந்து, “இரண்டாவது  அனானி கேட்டதற்கு நன்பர் தியாகு ஏன் பதில் சொல்லலை?” என்று ஒரே மடக்காக மடக்கி விடுவார்.. மொத்தத்தில் “பொழப்புக் கெட்டவன் பொண்டாட்டி தலைய செரச்சான்” என்பது போல இவர் புல்டைம் ஜாபாக இதே வேலையாகவே இருக்கிறார்..

இப்போது இவர் “விவாதத்திற்கு” எடுத்துக் கொண்டிருப்பது புராதன பொதுவுடைமை பற்றி. “எச்சூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…?”  என்று புலம்பி பிரயோசனமில்லை..

உதாரணமாக இப்போது அவரிடம் போய்,

“பொதுவுடைமை என்பது உற்பத்தி சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவான உடைமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தைக் குறிப்பது, அதிலும் வர்க்கமற்ற, பிரிவுகளற்ற சமுதாயத்தைக் குறிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே சமூக அமைப்பு முறை அப்படித்தான் இருந்தது.. இது உலகில் பல பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபனமாகி இருக்கிறது” என்று சீரியஸாக சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்கு அவர்,

“கற்களை எப்படி உற்பத்தி சாதனம் என்று சொல்ல முடியும்? குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான் செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை? அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் - “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும்? கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா?”

இப்போது உண்மையான அக்கறையுடன் அங்கே விவாதிக்கப் புகுந்த நமது தோழருக்கு தலை பம்பரம் போல சுழல ஆரம்பித்து விடும்.. சரி ரெண்டும் ஒரே மாதிரி கேள்வி தானே ஒன்றுக்காவது பதில் சொல்வோம் என்று சொல்லி விட்டு வந்தால், ரெண்டு நாள் கழித்து பதில் சொல்லாமல் விட்ட அந்தக் “கேள்வியை” தனியே கட் பேஸ்ட் செய்து ஒரு பதிவாக போட்டு “இரண்டாவது அனானி நன்பர் தியாகுவுக்கு கேள்வி” என்று ஒரு தனிப்பதிவாக போட்டு விடுவார்..

இது இப்படியே தொடரும்.. எங்கே எதற்கு பதில் சொன்னோம், எந்தெந்த அவதாரத்தில் வந்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று
ஒரு எழவும் புரியாது. இதே புல் டைம் ஜாபாக வைத்திருப்பவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தோழர்கள் தங்கள் பல சொந்த வேலைகளுக்கு மத்தியில் இந்த கிறுக்குத்தனங்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

மொத்தத்தில் வடிவேலுவின் பஞ்சாயத்துப் போலத்தான் நமது தமிழ்மணியின் விவாத முறையும்,

“என்னடா கையப் புடிச்சி இழுத்தியா?”

“என்ன கையப்புடிச்சி இழுத்தியா”

“இல்லப்பா பக்கத்து ஊருக்கும் நமக்கும் ஏற்கனவே தகறாறு.. நீ ஏன் அந்தப் பொண்ணு கையப் புடிச்சி இழுத்தே?”
“என்ன கையப்புடிச்சி இழுத்தியா?”

“அது வந்துப்பா….”

“என்ன வந்துப்பா…?”

“இல்ல….”

“என்ன இல்ல..?”

இப்படியாக அவர் “விவாதித்துக்” கொண்டேயிருப்பார்.. எனக்கென்னவோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்
நீலகண்டன் டெப்பாசிட்டு காலியாகிவிடும் போல் தான் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பேசாமல்
இவன் பேசப் பேச ஒதுங்கி நின்று பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். இவனும் உண்மையடியான் போல தனியே
குரைத்துக் கொண்டு நிற்பான். இல்லையா.. அவனே “இரண்டாவது அனானி” பழைய அனானி, புத்தம் புதிய அனானி, புதிய அனானி ரிலீஸ் வெர்ஷன் 2.1.0 என்று அவன் மனம் திருப்தி அடையும் வன்னம் ஏதாவது ஒரு கமெண்டைப் போட்டு சுவத்தில் சொரிந்து கொள்ளும் எருமை போல சுயஇன்பத்தில் ஆழ்ந்து கிடப்பான்..

பொதுவான குறிப்பு :- பொதுவாக ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து ( அதிலும் இந்தியாவில் நம்மைச் சுற்றியுள்ள நான்கில் ஒருவன் இரவு பட்டினியோடு படுத்துறங்குகிறான், பத்தில் எட்டுப் பேர் நாளுக்கு இருபது ரூபாய்கள் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள் ) இதையெல்லாம் மாற்றியமைக்க மாட்டோமா என்னும் தவிப்பில், அந்த மக்கள் மேல் இருக்கும் காதலின் பேரில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்கிறான். ஒருவன் வந்து
உனது சித்தாந்தம் தவறு என்று சொல்வானானால் அவன் அதற்கு மாற்று என்ன என்பதை முன்வைத்து தான் உரையாட வேண்டும். வெறுமனே  எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “எதிர்க்க” முடியும். அப்படிச் செய்வது பொருட்படுத்தத் தக்கதல்ல!

தோழர்களுக்கு ஒரு குறிப்பு :- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
கருத்து மட்டும் தான் - மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.

நவம்பர் 29, 2007 - பதிந்தவர் kaargipages | Alppaigal, tamil blogsphere | | 4 மறுமொழிகள்

4 மறுமொழிகள் »

  1. //நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
    கருத்து மட்டும் தான் - மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.//

    தோழர் சரியாகச் சொன்னீர்கள்.

    -ஜமாலன்.

    மறுமொழி by jamalan | நவம்பர் 29, 2007

  2. Has social science accepted the views of Engels on the origins of family?. Do anthropologists accept that as atleast as a credible hypothesis today. The answer to both questions is a big NO. Engels had some views and they reflected the thinking at that time. But since 1950s his views have been questioned and rejected by anthropologists. So you better update your knowledge instead of trying to ridicule those who point out the
    truth.

    மறுமொழி by anamikan | நவம்பர் 29, 2007

  3. வருகைக்கு நன்றி ஜமாலன்!

    அனாமிகன்,

    இங்கே குறிப்பாக நான் சுட்டிக் காட்ட விழைந்தது தமிழ்மணியின் விவாத முறையையும் அவர் பின்பற்றும் குதர்க்கவாதத்தையும் தான். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன் குடும்பம் தனிச்சொத்தின் வரலாறு பற்றி ஏங்கெல்ஸ் சொன்னவற்றையும், இன்றைக்கும் அது எவ்வாறு நிரூபிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று விரிவாக எழுதியாக வேண்டும்.. இதில் எனது சந்தேகம், உங்கள் நோக்கங்களின் மீது தான்.

    மெய்யாக உங்களுக்கு நேர்மையான நோக்கம் இருப்பின் ( தமிழ்மணியுடையது போல இல்லாமல்) மீண்டும் இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் அப்படியாக ஒரு பதிவை எழுதி விட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.. நாம் தாராளமாக உரையாடுவோம்!

    என்னால் எங்கெல்ஸ் சொன்ன கருத்துக்கள் இன்றும் பொருத்தமுடையதே என்று நிரூபிக்க இயலும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மறுமொழி by kaargipages | நவம்பர் 29, 2007

  4. //தோழர்களுக்கு ஒரு குறிப்பு :- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
    கருத்து மட்டும் தான் - மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.//

    Right Article at right time. But I come to know about this article little late… :-)))

    Asuran

    மறுமொழி by Asuran | டிசம்பர் 7, 2007

மறுமொழியவும்